18/07/2021

மகேசிண்டே பிரதிகாரம்

மகேசிண்டே பிரதிகாரம் (தமிழில் நிமிர்) படத்தில் பகத் பாசிலின் அப்பா சொல்லுவார்.

"புகைப்படக்கலையில் தேவை பொறுமை.அந்த ஒரு நிமிடம் ஒரு தருணத்துக்காக எவ்வளவு நேரம் வேணாலும் காத்திருக்கனும்"

எஸ்.ரா

சோறு என்பதற்கு அடிசில்,கூழ்,அழினி,அவிழ்,கொன்றி,நிமிரல்,புழுங்கல்,பொம்மன்,மிதவை என பல சொற்கள் தமிழில் உள்ளன
-எஸ்.ரா

தொ.ப

இயற்கையல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். எனவே அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்பந்தல் அமைப்பதும் தமிழர்களின் வழக்கம்.

-தொ.ப

பாக்யம் சங்கர்

சுதந்திரம் இல்லாவிட்டால் சொர்க்கம் கூட நரகம் தான்

-பாக்யம் சங்கர்

க.வை.பழனிச்சாமி

பறந்து போகும் பட்டாம் பூச்சிகளோடு என் கண்களும் போயின

-க.வை.பழனிசாமி

உமா மகேஸ்வரி

காத்திருக்கிறது அந்தக்கூடு
தன் சொந்தப் பறவைக்கென

-உமா மகேஸ்வரி

தொ.ப

குட்டை, மழைநீரின் சிறிய தேக்கமாகும்.
குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம்' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல்' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

-தொ.ப

மாக்சிம் கார்க்கி

வேலை மகிழ்ச்சி தரும் போது,
வாழ்க்கை சந்தோஷமாகிறது.

வேலை கடமையாகும் போது,
வாழ்க்கை அடிமைத்தனமாகி விடுகிறது.

- மாக்சிம் கார்க்கி

ஹென்ரிக் ஹெய்னே

நல்ல மலர்கள் பூப்பதற்கு முன்னாலேயே பிய்த்தெறியப்படுகின்றன

-ஹென்ரிக் ஹெய்னே

தொ.ப

*தண்ணீர்*

குளிர்ச்சியினை உடையது என்பதனால் நீரைத் 'தண்ணீர் என்றே தமிழர்கள் வழங்கி வருகின்றனர். நீரினால் உடலை தூய்மை செய்வதனை குளிர்த்தல் (உடலைக் குளிர்ச்சி செய்தல்) என்றும் குறித்தனர்.

-தொ.ப

கிரேஸிமோகன்

நூறாவது பொய்யை முதலிலேயே முடிவு செய்த பிறகே, முதல் பொய்யை சொல்ல வேண்டும்

#கிரேஸிமோகன்

ராஜாவை கொல்லுதல்

வரலாறு என்ன சொல்கின்றது என்றால் 
ராஜாவை கொல்லும் முயற்சியை சிம்மாசனத்துக்கு அருகில் உள்ளவன் தான் செய்வான்..

மகாராணி இணைய தொடரில்..

மனுஷ்ய புத்திரன்

"இந்த நாள் என்பது அதை
 வாழ்கிறவர்களால் அல்ல அதைப்பற்றி கேட்கும்  ஒரே ஒருவரால் ஆனது"

-மனுஷ்ய புத்திரன்

கவிஜி

ஏதோ சொல்லத் துடிக்கிறது
இடம் பொருள் ஒவ்வா மனநிலை
ஒளித்து வைத்த உள்ளொன்று புறம் ஆகி மேய்கிறது
பேரழுகையோ பெரும் தவிப்போ
தேடலின் நுனியில் காட்டு வாசம்
தனித்த நடையில் தகிக்கும் மௌனம்

- கவிஜி

சேகுவாரா

உண்மையான புரட்சியாளன் அன்பின் பேராற்றலால் வழி நடத்தப்படுகிறான்

-சேகுவேரா

மனுஷ்ய புத்திரன்

இன்று 
ஓர் இலை உதிர்ந்தபோது
ஒரு மரம் அதிர்ந்ததைப் பார்த்தேன் 
ஒரு குருவி 
திடீரென்று பறந்தபோது 
காற்றில் ஒரு விரிசலைக்கேட்டேன் 
இவ்வளவு மெலிதானதை 
உன்னிடம் எப்படிக் கொண்டுவருவது
என்றுதான் தெரியவில்லை

-மனுஷ்யபுத்திரன்

சுஜாதா

இந்த உலகத்தில் நிம்மதியான மனிதர்கள் யார், யார் ?

ஆரோக்கியமுள்ளவர்கள் மட்டுமே.

-சுஜாதா

கமல்ஹாசன்

சந்தோஷம்னா என்னென்னு மனுஷனுக்கு அத அனுபவக்கையில தெரியாது.... அதெல்லாம் போனப்பறம் தான் தெரியும்...

-கமல்ஹாசன்
(விருமாண்டி)

எழிலரசு

இருவிரல் குவித்துப்
பிடிக்கப்போகும் கணம்
அடுத்தடுத்த பூவுக்குப்
பறந்தமரும்
பட்டாம்பூச்சியைப் போல்
போக்குக் காட்டுகிறது
குழந்தை
வீட்டுக்கு வரும்
அறிமுகமில்லாதவர்
அழைக்கையில்..!”

-எழிலரசு.

இளம்பிறை

வந்து விழுகிற
எல்லாக் கற்களும்
விழுந்த இடத்தில்
மூழ்கிக் கிடக்க
தன் போக்கில்
போய்க்கொண்டிருக்கிறது நதி

-இளம்பிறை

ஓஷோ

முழு உலகையும் நேசிப்பது
மிக மிக எளிது

தனிமனிதனை நேசிப்பது
மிக மிக கடினம்

-ஓஷோ

மார்க் ட்வைன்

ஒரு விஷயத்தில் சந்தேகம் இருந்தால் உண்மையை சொல்லிவிடு.

-மார்க் ட்வைன்

தென்கச்சியார்

ஒரு பெரிய பணக்காரர் ஆடிட்டர் வேலைக்கு இன்டர்வியூ வைத்திருந்தார்.48000யும் 84000யும் பெருக்குங்க..இதான் கேள்வி னு சொல்லியிருக்கார். நூறு பேரும் கணக்கு போட்டாங்க.

*ஒருத்தர் மட்டும் உங்களுக்கு எவ்வளவு ரூபாய் வரனும் னு கேட்டாராம்.உடனே அப்பாய்ன்ட் செய்திட்டார்

-தென்கச்சியார்

பாவண்ணன்

ஒரு குழந்தை மீண்டும் மீண்டும் ஒரு வரியைச் சொல்வதன் வழியாக, அதுதான் கண்டடைந்த மகிழ்ச்சியை இரு மடங்காக, மூன்று மடங்காக பெருக்கிக் கொண்டே செல்கிறது

-பாவண்ணன்

ஓஷோ

இந்த கணம் தான் உண்மை.
மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனைகளும் தான்

-ஓஷோ

மணிகண்டபிரபு

நானே கேள்வி.. நானே பதில்..!  #MyVikatan
-மணிகண்டபிரபு

#அதிகாரத்தில் உள்ளவர்கள் சிபாரிசு செய்யலாமா?

நீதிக்கட்சியில் சென்னை மாகாண முதல்வராய் இருந்த பனகல் அரசர் பரிந்துரை கேட்டு வருபவர்களிடம் சொல்வாராம்

"For every one recommendation,I create nine enemies and one doubtful friend

ஒவ்வொரு சிபாரிசினைச் செய்யும்போதும் நான்,ஒன்பது விரோதிகளையும்,ஒரு உறுதியற்ற சந்தேகமான நண்பனையும் உருவாக்கிக் கொள்கிறேன் என்றாராம்.

#ஆரோக்கியத்தை பாதுகாக்க வழி?

ஆரோக்கியத்தை பாதுகாக்க எளிய வழி..ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாமல் இருப்பதுதான் என்று அப்துல்காதிர் ஜிலானி எழுதிய வரி நினைவுக்கு வருகிறது

#ஒரு நெகிழ்ச்சிக் கதை?

நடிகர் ராஜேஷ் பகிர்ந்த ஒருகதை ஒரு பணக்கார குடும்பம் கோவிலுக்கு போறாங்க. அந்த வீட்டுக்குழந்தை அங்குள்ள குளத்தில் விழப் போகும் போது அங்கு வந்த ஒரு மருத்துவர் காப்பாற்றிவிடுகிறார். அதற்கு நன்றிக் கடனாக ப்ளாங்க் செக் ஒன்றை கொடுத்து 50 லட்சம் வரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்.

திரும்பி மருத்துவமனைக்கு வருகிறார் மருத்துவர். அங்கு பணிபுரியும் கம்பவுண்டர்.. டாக்டரிடம் அவசரத்தேவைக்கு பணம் கேட்கிறார். டாக்டர் தன் பையிலிருந்த அந்த செக்கை கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்கிறார்

அதிகம் ஆசைப்படாத ஊழியர் 50 ருபாய் மட்டும் எழுதிக்கொண்டு புறப்படுகிறார்.
கதையின் தலைப்பு Good-Better-Best
மூவருக்கும் பொருந்தும் தலைப்பு.
நல்லவன்-மிக நல்லவன்-மிகமிக நல்லவன்

#மூடநம்பிக்கையின் ஆரம்பப்புள்ளி எது?

வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாட்டில் வெள்ளைக்காரன் மின்சாரத்தால் ஓடும் மோட்டாரை கண்டுபிடித்தான். அதை கரும்பு பிழிய பயன்படுத்தினான்.

அவனிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான். அவனிடம் இந்த மோட்டாரை வணங்கிவிட்டுத்தான் நீ சுவிட்சை போட வேண்டும் என்றான். அவன் அதை ஏதோ சக்தியுள்ள கடவுளாய் நினைத்தான். அது எந்திரம் என சொல்லவில்லை.
ஒரு நாள் வெள்ளைக்காரன் ஊருக்குப்போனான். மறுநாள் அந்த வேலைக்காரன் மெசினை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் சுற்றி வருகிறான். சுவிட்சை துணிந்து போட்டான். பட்டை ஓடியது. தொட்டுப்பார்த்தான் கை இழுத்துக் கொண்டது. பின் அவனுடைய தலையும் இழுத்துக்கொண்டது.

இதை இன்னொருவன் பார்த்து அலறுகிறான். பின் நாம் வணங்காமல் இயக்கியதாலும், பலி கொடுக்காமல் இந்த மெசினை இயக்கியதாலும் இந்த வேலைக்காரனை கடவுள் என்ற இந்த இயந்திரம் பலி வாங்கிவிட்டது என நினைக்கிறார்

எஜ்சிவெல் எழுதிய இக்கதை.. வழிபாட்டுக்கும், பலி வாங்கியதற்கும், மதத்திற்குரிய தகுதியையும் பெற்றது எனக்கூறி முடிக்கிறார்.

#சில பிரச்சனைகளை மெளனத்தினால் தீர்க்க முடியுமா?

எழுத்தாளர் சுந்தரராமசாமி கூறியது

Never explain! Never miss a good chance to keep silence

"மெளனம் கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது. பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்து விடுகிறது என்கிறார்

#ஒரு நீதிக்கதை?

காட்டுப்பன்றி மரத்தில் தன் கொம்புகளைப் தீட்டிக் கொண்டிருந்தது. அதை பார்த்த நரி எதிரி ஒருவரையும் காணவில்லையே, பின் ஏன் கொம்புகளை தீட்டுகிறாய் என்றது.

பன்றி சொன்னது.. எதிரி நம் முன்னால் வந்து விட்டால் அப்பொழுது எப்படி கொம்புகளை தீட்ட முடியும் என்பதால் இப்போது தீட்டுகிறேன் என்றது.

யுத்த காலத்திற்கு வேண்டிய காரியங்களை சமாதான காலத்தில் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்

#பணத்தை மட்டும் தேடிக்கொண்டு இருக்கிறவர்கள் பற்றி?

ஒருவர் காட்டுக்குள் கோல்ஃப் பந்தை பல மணி நேரமாக தேடிக் கொண்டிருந்தார். இறுதியில் ஆ பந்தை கண்டுபிடித்துவிட்டேன். இனி மைதானத்தை தேட வேண்டியதுதான் என்றார். இதுபோலத்தான் பணத்தை தேடும் அவசரத்தில் பலர் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்

#கடவுள் எந்த உருவத்தில் வருவார்?

டால்ஸ்டாய் எழுதிய dream merchant கதை இதற்கு பதில் சொல்கிறது.

ஒரு வணிகனின் கனவில் நாளை கடவுள் வருவதாக அறிவிக்கிறார்.மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து ஆவலாய் எதிர்நோக்கி காத்திருக்கிறான்.

முதியவர்,சிறுமி,பெண்மணி மூன்று பேரும் வருவதை பார்த்து புறக்கணிக்கிறான்.அன்றைய கனவில் மீண்டும் இந்த மூன்று பேரும் கடவுளாய் வந்து மறைகின்றனர்.

தான் கற்பித்து வைத்திருக்கிற உருவத்தில் கடவுளை எதிர்பார்த்தது எவ்வளவு பெரிய பிழை என்பதை உணர்ந்து வருந்துகிறான்.

#மதிப்பது எப்படி இருக்க வேண்டும்?

சிலரை மதிப்பது மரியாதைக்காகவும்

 சிலரை மதிக்காமல் இருப்பது சுயமரியாதைக்காகவும் இருக்க வேண்டும்

#விருதுக்கான தேர்வுகளில் பாரபட்சம் காட்டப்படுகிறதா?

காப்காவின் விசாரணை நாவலில் வரும் குட்டிக்கதை

 "சட்டத்தின் வாசலில் ஒரு வாயிற்காவலன் நிற்பான். நீதி பெற விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரையும் உள்ளே விடாமல் பலவந்தமாக தள்ளிக்கொண்டே இருப்பான். அவன் களைப்புறும் போது மட்டும் ஒருவர் அந்த வாசலுக்குள் நுழைய முடியும்" என்பார். இது சில முக்கிய விருதுக்கான தேர்ந்தெடுத்தலுக்கும் பொருந்தும்

#அழகின் அளவுகோல் என்ன?

அந்த அளவுகோல் பெண்ணை பெற்றவர்களுக்கு ஒரு விதமாகவும்,பெண் தேடுவோர்க்கு ஒருவிதமாகவும் அமைந்திருக்கிற மர்மம் என்னவென்று புரியவில்லை என்பார் ஜெயகாந்தன்.

#ஒருவரின் செயல் மற்றொருவருக்கு இடையூறாவது எப்போது?

வழிபாட்டுக் கூட்டத்தில் ஒருவரின் குறட்டை ஒலி சத்தம் அதிகம் கேட்டது. விழித்தெழுந்த அவன் குருவிடம் மன்னிப்பு கேட்டான்.அதற்கு குரு நீ கவனமாக இருக்கனும்.மற்றவர்களின் தூக்கத்தை குறட்டை விட்டு கெடுத்துவிடாதே என்றாராம்

-மணிகண்டபிரபு

ந.ஜெயபாஸ்கரன்

சுவரில் அறைந்த 
எருவில் தெரிந்த விரல்கள் 
யார் விரல்கள்
இனிமேல் நெருப்பில் எரியப்போகும் விரல்கள் 

-ந.ஜெயபாஸ்கரன்

யாத்திரி

இன்றுகளின் புறக்கணிப்பிற்காக நேற்றைகளின் அரவணைப்புகளை கேள்விக்குள்ளாக்க மாட்டேன், அதன் உயிர்த்தன்மையை நன்கறிவேன், போலவே அதன் மரணத்தையும்.

- யாத்திரி

SPB

எதிர்காலத்தை பற்றி?

எதிர்காலத்தில் என்னைப் பற்றி எங்கேயாவது ஒரு பேச்சு வரும்போது ரொம்ப நல்ல மனுசன்,அவரால் தீங்கு வந்தது கிடையாதுனு சொல்லனும். அப்ப நான் இருக்கமாட்டேன். ஆனால் அந்த மாதிரி ஒரு பேச்சு இருக்கனும். அது ரொம்ப முக்கியம்.

-SPB ஒரு பேட்டியில்

#HBDSPB

யாத்திரி

பேசமுடியவில்லை
வரமுடியவில்லை
என்பதற்கெல்லாம் நீ காரணம் தேடாதே, சொல்லவும் சொல்லாதே.
நானே மிகப்பொருத்தமான ஒன்றை
நான் ஏற்றுக்கொள்ளுமாறு ஒன்றை
கற்பனை செய்து
அதிலுன்னை இருத்திக் கொள்கிறேன்.

-யாத்திரி

ஸ்டீபன் ஹாக்கிங்

அறிவாற்றலின்
மிகப் பெரும் எதிரி அறியாமையல்ல;
அறிவாற்றல் பெற்றதாக யூகித்தல்!

-ஸ்டீபன் ஹாக்கிங்

கலீல் ஜிப்ரான்

வாழ்க்கை எப்போதும் 
அழகு நிறைந்தது 

அதில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை 
உறுதியாக நம்பியவர்களுக்கு! 

- கலீல் ஜிப்ரான்

யாத்திரி

பேச்சை தவிர்த்துவிட்டு நகரும் போது நிறுத்தி
உனக்கு என்னதான் பிரச்சனை என்கிறாய்,
அதொன்றுமில்லை கடமைக்கென்று பேசும் உன் குரலை
அறிந்துகொள்ளுமளவு உன்னை கிரகித்துவிட்டேன்
அதான் என் பிரச்சனை.

-யாத்திரி

கலைஞர்

பாராட்டும் புகழும் கிடைக்கும்போது
குட்டையான வாசலுக்குள்
குனிந்து செல்வது போன்ற பணிவு வேண்டும்.இல்லையேல்
நெற்றியடி கிடைக்கும்
-கலைஞர்
#karunanidhi

அப்துல்ரகுமான்

கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவுதினம்
*மணி

மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"

*கொஞ்சம் கொஞ்சமாய் 
இறப்தற்க்குப் பெயர் தான் 
வாழ்க்கை ...

*உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அலங்கரிக்காதே
ஏனென்றால் 
மகுடங்கள் தலைமாறக்கூடியவை

*உன் சாவில் சாம்பலை அல்ல
நெருப்பை விட்டுச்செல்

*மனிதன் தன் 
வாழ்நாளில் 
செய்து முடிக்க வேண்டிய மிகப்பெரிய சாதனை 
மனிதனாவதுதான்!!!

*உடல் நிழலில் அமர்ந்தாலும் 
மனம் வெயிலிலேயே அலைந்து கொண்டிருக்கிறது.

*வரங்களே..
சாபங்கள் ஆகுமென்றால்
இங்கே
தவங்கள் எதற்காக...?

*உன்னை மறக்கும்போது
வாழ்கிறேன்
நினைக்கும் போது
இறந்து விடுகிறேன்

*வியாதிகளின் 
மேய்ச்சல் நிலம் 
முதுமை

*எழுத்துக்கள் என்பதென்ன?
அங்கீகரிக்கப்பட்ட 
கிறுக்கல்கள் தாமே?

*வாழ்க்கைத் தேர்வில்
வெற்றி பெறுகிறவர்கள்
விடைகளை அறிந்தவர்கள் இல்லை
வினாக்களை அறிந்தவர்களே

*விதி 
தொட்டிலைச் செய்யும்போது
பாடையையும்
செய்துவிடுகிறது

*நீ பிரிகிறாய்
கட்டடம் முடிந்ததும்
பிரிக்கப்படும் சாரம் போல

*பழமை என்பது
வயதாகிப்போன புதுமைதான்
புதுமை என்பது
மறுபிறப்பெடுத்த பழமைதான்

*மரணக் காற்றில் ஒரு விளக்கை போல் அணைந்து போகாதே!

ஒரு ஊதுவத்தியைப் போல் கொஞ்சம் நறுமணமாவது விட்டு விட்டுப் போ!

*நீ கிடைத்துவிடாதே
உன்னைத் தேடுவதில்தான்
என் இருத்தல்
இருக்கிறது

*தர்மம் வென்றது" என்கிறார்களே;
அதர்மம் அல்லவா வென்றிருக்கிறது என்று
குழம்புகிறீர்களா?
உங்களுக்கு விஷயம் தெரியவில்லை;
அதர்மம் "நியூமராலஜி"ப்படி தன் பெயரைத்
தர்மம் என்று மாற்றிக் கொண்டது!

*Naked truth வெளிப்படையான, நிர்வாண உண்மை

ஒருநாள் பொய்யும்,உண்மையும் குளிக்கச் சென்றன.பொய் குளித்துவிட்டு கரையிலிருந்த உண்மையின் ஆடையை அணிந்து சென்றது.கரைக்கு வந்த உண்மை ஆடையின்றி நிர்வாணமாகவே புறப்பட்டுச் சென்றது.உண்மையிடம் மறைக்க வேண்டியது எதுவும் இல்லை

*எல்லாப் பக்கமும் 
நின்று பார்ப்பவனே
உண்மையை முழுமையாக
தரிசிக்கிறான்

*நல்ல வேளை வறுமைகொடு கிடைத்தது.இல்லையென்றால் இதன் கீழ் வாழ்பவர் வேறு எதன் கீழ் வாழ்வார்கள்...?

*குளிர் காய்வதற்காய் 
சுள்ளி பொறுக்கச் சென்றாய்,
சுள்ளி பொறுக்குவதிலேயே உன் காலம் கழிந்துவிட்டதே,
எப்போது நீ குளிர் காயப் போகிறாய்?

*கண்ணுக்கு அழகாக இருப்பவர்களைக் காலம் சிதைத்து விடுகிறது
காதுக்கு அழகாக இருப்பவர்கள்
மரணத்தையும் அலங்காரமாக்கிக் கொள்கிறார்கள்

*சிலப்பதிகாரம்:
பால் நகையாள் வெண்முத்துப் பல்நகையாள் கண்ணகிதன் கால்நகையால் வாய்நகைபோய் 
கழுத்துநகை இழந்த கதை..

*நீ காதலிக்காவிட்டால் என்ன?
ஒரு பக்கம் பற்றினாலும்
அது நெருப்புதான்

தோழமையுடன்

-மணிகண்ட பிரபு

யாத்திரி

உமக்கு சேவகம் செஞ்சே
நான் இத்துப் போயிட்டேன்
இனிமேக்கொண்டு கூப்டீரு
மருவாத கெட்ரும்.
எப்ப பாத்தாலும்
நொய்யி நொய்யினுக்கிட்டு
ஈஸ்வரா,
என்னைய சீக்கிரம் கூப்டுக்கோயேன்.
புலம்பிக்கொண்டே வெளிவந்த கிழவி
சிறிது நேரத்தில்
என்ன சத்தத்தையே காணோம் என்று
கிழவனின் அறையை எட்டிப்பார்ப்பாள்.

-யாத்திரி

மு.மேத்தா

என்னுடைய முதல் தேதி
சம்பளத்தில் எல்லோருடைய முகமும்
தெரிகிறது

என் முகத்தைத் தவிர

-மு.மேத்தா

நா.பார்த்தசாரதி

மனிதர்கள் தனித்தனியே நல்லவர்களாக இருக்கிறார்கள்.தனித்தனியே அவர்களை நல்லவர்களாக வைத்திருக்கவும் முடியும். 'மக்கள்','ஜனங்கள்' என்ற மைதான வார்த்தைக்குள் மந்தையாய் அடைக்கும்போதே தனித்தன்மையை இழக்கிறார்கள்

-நா.பார்த்தசாரதி

நா.விச்வநாதன்

யாத்திரி

அழைத்த மறுநொடியே 
வந்து பேச காத்திருப்பவர்களைத் தவிர்த்துவிட்டு,
தவிர்க்கப்படும் இடங்களின் கதவைத்
தட்டிக்கொண்டு இருப்பதுவே
காலங்காலமாய் நாம் கொண்ட சாபம்

-யாத்திரி

வண்ணதாசன்

அங்கீகரிப்பையும் நிராகரிப்பையும் பொருட்படுத்தினால், அந்தந்த இடத்திலேயே நின்றிருப்பேனே தவிர, இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.

-வண்ணதாசன்

வண்ணதாசன்

ஒரு பூ எல்லாத் திசைகளிலும் தன் இதழ்களை மலர்த்துகிறது..!

-வண்ணதாசன்

ராம் பெரியசாமி

"நீங்கள் ஒன்றை கொடுக்க விரும்பினால் 
அதைப்பெறுபவரை விட
நீங்கள் மகிழ்ச்சியானவராக
இருத்தல் வேண்டும்.

     "ராம் பெரியசாமி"

31/05/2021

எஸ்.ரா

அதிகாரத்திற்கு எதிராக மனிதனின் போராட்டம் என்பது ஞாபகமறதிக்கு எதிராக நினைவுகளின் போராட்டம்

-எஸ்.ரா

ராஜூ முருகன்

அறியாமையை விடவும் பெரிய சந்தோசம் எதுவும் இல்லை.இந்த வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க, அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது?

-ராஜூ முருகன்

வைரமுத்து

மனிதர்க்கு மனிதர்கள் மட்டுமே தேவை என்பது இரண்டு பருவத்தில்:ஒன்று வாழத்தெரியாத இளம்பருவம்; இன்னொன்று வாழ்ந்து முடித்த முதுமைபருவம்
-வைரமுத்து

ஓஷோ-பயம்

ஓஷோ 
கொரோனா போன்ற
நோய்களை வெல்வதற்கு, நமக்கு அற்புதமான அறிவைக் கொடுத்துள்ளார்:

 70 களில், காலராவும் ஒரு தொற்றுநோயாக உலகம் முழுவதும் பரவியது, அச்சமயத்தில், 
 
இந்த தொற்றுநோயிலிருந்து தப்பிப்பது எப்படி?

ஓஷோ விரிவாக விளக்கியது இன்று கொரோனாவுக்கும் மிகவும் பொருத்தமானது.

 இந்த பயத்தைத் தவிர்ப்பது எப்படி ...?

 வைரஸ்களைத் தவிர்ப்பது மிகவும் எளிதானதுதான்,
ஆனால் உங்களுக்கும் உலகின் பெரும்பாலான மக்களுக்கும் இடையில் அமர்ந்திருக்கும் பயத்தைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.

 இப்போது இந்த தொற்றுநோயால் குறைவான மக்கள்தான் இறப்பார்கள் ஆனால் பயத்தால் அதிகமாகனோர் இறந்துவிடுவார்கள்.

பயத்தை விட ஆபத்தான வைரஸ் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

 இந்த பயத்தை புரிந்து கொள்ளுங்கள்,
 இல்லையெனில் நீங்கள் மரணத்திற்கு முன்பே உயிருள்ள சடலமாக மாறுவீர்கள்.

இது ஒரு கூட்டு பைத்திய மனநிலை (Collective Unconsciousness)
இது எக்காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது, காரணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன, , சில சமயங்களில் இரு நாடுகளின் சண்டை, சில சமயங்களில் உயிரியல் ஆயுதங்களை சோதனை செய்தல், இப்படி!

 
 இதில், பலர் என்றென்றும் குழப்பமடைகிறார்கள் அல்லது இறந்துவிடுவார்கள்.

 இது இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான தடவைகள் நடந்தது, தொடர்ந்து நடக்கும், மேலும் வரும் ஆண்டுகளில், போர் பீரங்கிகளால் அல்ல, உயிரியல் ஆயுதங்களுடன் சண்டையிடப்படும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

 ஒவ்வொரு பிரச்சனையும் முட்டாளுக்கு பயம் என்று நான் மீண்டும் சொல்கிறேன், அதே நேரத்தில் அறிவுள்ளவர்களுக்கு வாய்ப்பு !

 இந்த தொற்றுநோய்களில், நீங்கள் வீட்டில் உட்கார்ந்து, புத்தகங்களை படிக்கலாம் உடலை உடற்பயிற்சியால் மேம்படுத்தலாம். திரைப்படங்களைப் பார்க்கலாம், யோகா செய்யலாம், ஒரு மாதத்தில்
உங்கள் பொழுதுபோக்குகளை நிறைவேற்றுங்கள்!

 என்னை 15 நாட்கள் வீட்டில் உட்காரச் சொன்னால், இந்த 15 நாட்களில் 30 புத்தகங்களைப் படிப்பேன், இல்லையென்றால் ஒரு புத்தகம் எழுதுவேன், இந்த மாபெரும் திருவிழாவில் பணத்தை முதலீடு செய்வேன், இது இருபது முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு வாய்ப்பு.  ஏன் நோயைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்கிறீர்கள்.

 'பயம் மற்றும் நெரிசல்' உளவியல் அனைவருக்கும் புரியவில்லை.

மக்கள் பயப்படுவதை ரசிக்கவில்லை என்றால் ஏன் பேய் படம் பார்க்கச் செல்கிறார்கள்?

 இது ஒரு வெகுஜன பைத்தியம், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி மூலம் கூட்டத்திற்கு விற்கப்படுகிறது.

டிவியில் செய்தி கேட்பது அல்லது செய்தித்தாள் படிப்பதை நிறுத்துங்கள்

உங்களில் பயத்தை உருவாக்கும் எந்த வீடியோ அல்லது செய்தியையும் பார்க்க வேண்டாம்.

தொற்றுநோய் பற்றி பேசுவதை நிறுத்துங்கள்.

 அதே வகையான சிந்தனை மீண்டும் மீண்டும் உடலுக்குள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது, மேலும் இந்த வேதியியல் மாற்றம் சில நேரங்களில் மிகவும் நச்சுத்தன்மையுடையதாக இருக்கலாம், அது உங்கள் உயிரைக் கூட எடுக்கும்.

தியானம், தேடுபவரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு பிரகாசத்தை உருவாக்குகிறது, இது வெளியில் இருந்து எதிர்மறை சக்தியை அதற்குள் அனுமதிக்காது,
சுத்தமான தண்ணீரை குடிக்கவும், தளர்வாக இருங்கள். 

 கடைசி விஷயம்:
 பொறுமையாக இருங்கள்,எல்லாம் விரைவில் மாறும். மரணம் வரும் வரை, அதைப்பார்த்து பயப்படத் தேவையில்லை, தவிர்க்க முடியாததை எண்ணி அஞ்சுதல் மடமை. 

 பயம் என்பது ஒரு வகையான முட்டாள்தனம், நீங்கள்  ஒரு தொற்றுநோயால் இறக்காவிட்டாலும், ஒரு நாள் கட்டாயம் இறக்க நேரிடும், அது எந்த நாளிலும் நிகழலாம். எனவே ஒரு அறிஞரைப் போல தெளிவான வாழ்க்கை வாழ்க, கூட்டத்தைப் போல குழம்பிய வாழ்க்கை அல்ல !!

 -ஓஷோ

பாவெல் சக்தி

என்னை அழைத்து
அவசர அவசரமாக
ஒருவருடைய
மரணச் செய்தியைச் 
சொல்லாதே நண்பா....

சுடச் சுட தெரிந்துகொண்டு
நான் என்ன செய்துவிடப் போகிறேன்.

நானாகத் தெரிந்துகொள்ளும் வரை
அவர்
உயிரோடு இருந்துவிட்டுப்
போகட்டும்.

-பாவெல் சக்தி

சுப.உதயகுமாரன்

அறிவற்றவர்களும், படிப்பாளிகளும்தான் தாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வகுப்பு எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.இது தவறான அணுகுமுறை.கற்றுக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு மட்டும்தான் பாடம் நடத்த வேண்டும்.

-சுப.உதயகுமாரன்

இறையன்பு

நம்மை யாரும் புறக்கணிக்காத அளவிற்கு நாம் வளர்வதற்கு அறிவு ஒன்றே அட்சயப் பாத்திரம்

-இறையன்பு

வேள்பாரி

வேள்பாரி

முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவேள் அருவி கல்கலைத் தொழுகும்
பறம்பிற் கோமான் பாரியும்;

-பெருஞ்சித்திரனார் (புறநானூறு 158; 1-4)


மயிலும் குதிரையும் தனது மொத்த அழகையும் நீண்டு திருப்பும் கழுத்தில் வைத்திருக்கிறது.

-வேள்பாரி

எங்களின் பாதங்கள் மண்ணைப் பிடித்து நடந்து பழகியவை. சமவெளியில் வாழும் உங்களின் பாதங்கள் மண்ணில் தேய்த்து நடந்து பழகியவை. பாதடியைக் கழட்டிவிட்டுப் பாதத்தை முன்னெடுத்து வையுங்கள். பற்களைப்போல விரல்களுக்கும் கவ்விப்பிடிக்கத் தெரியும்.

-வேள்பாரி

“பாரி அரசன் அல்ல… வேளீர் குலத் தலைவன். நாட்டை ஆள்வதைப்போல காடும் ஆளப்படுகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள். காட்டை யாராலும் ஆளமுடியாது. சின்னஞ்சிறு மனிதனால் என்ன செய்ய முடியும்? பகை, துரோகம், வீரம், சாவு, அவ்வளவுதான்.

-வேள்பாரி

இயற்கையின் அதிஅற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது.

-வேள்பாரி

எல்லோரும் அதிகம் புகழப்படும் ஓர் இடத்தில் பிழைகள் மலிந்திருக்கும். யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர்.

-வேள்பாரி

*தேங்கள்*

தேனில் இருந்து தயாரித்து, மூங்கில் குழாயில் இட்டு நன்கு புளிக்கவைத்த முற்றிய கள்.

ஒரு குப்பி கள் பல நேரம் வரலாற்றையே மாற்றியிருக்கிறது.

-வேள்பாரி

வள்ளல் தன்மை என்பது நிர்வாகத்திறமை  அல்ல. அது குழந்தையின் அழுகுரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பைப் போன்றது.

-வேள்பாரி

காதல் சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால்தான் கைகூடும்.

மனிதனால் காதலை அழைத்துவர முடியாது; காதல்தான் மனிதரை அழைத்துவரும்.

-வேள்பாரி

ஊரின் மூத்த ஆண் 'பழையன்'
மூத்த பெண் 'பழைச்சி'

பழையனிடம் உன் வயது என்ன? என்ற கேள்வியை கபிலர் கேட்டார்...

97 வயது என பழையன் கூறினார்.

கபிலர் 'எப்படி துள்ளியமாக சொல்கிறீர்'

பழையன் "மேல்மலையில் இருக்கும் குறிஞ்சிச் செடியில் இரண்டாவது கணுவில் பூப்பூத்திருக்கும் போது, நான் பிறந்ததாக என் தாய் சொன்னாள். கடந்த ஆண்டு அந்தச் செடியில் பத்தாவது கணுவில் பூப்பூத்திருந்தது" என்றார்.

-வேள்பாரி

தீமையை கணப்பொழுதில் நன்மையாக மாற்றமுடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு  உண்டு. வார்த்தை தரும் ஆற்றலை வேறு எதுவும் தருவதில்லை. மனிதன் முதிரும் போதுதான் மனங்களை கையாளக் கற்றுக்கொள்கிறான். மனம் விழுந்த பின்னர் எழவைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால், வீழ்ந்து கொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்துவதுதான் மிக முக்கியம். வாழ்வின் சாரமேறிக் கிடக்கும் அனுபவ அறிவால்தான் அதைச் செய்ய முடியும்.

-வேள்பாரி

வார்த்தைகள் முதுகுத்தண்டை முறுக்கேற்றும் வல்லமை கொண்டவை.

-வேள்பாரி

அறியாமை ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகள்; அறிந்தவர்களுக்கு கிடைக்காது.

-வேள்பாரி

நம்பிய பிறகு ஒருவனை ஐயங்கொள்வது எளிதல்ல.

-வேள்பாரி

நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்.

அதிகாரம் உயிர் பெறாத இடத்தில் அன்பு மட்டுமே தழைத்திருக்கும்.

-வேள்பாரி

குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும் போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்.

-வேள்பாரி

ஆறாத் துயரைக் கலையாக்கும்போது கலைஞன் படும் வேதனைக்கு இணை கூறச் சொல்லில்லை.

-வேள்பாரி

பரிமாற்றம் என்பது தேவை சார்ந்தது. வணிகம் என்பது ஆதாயம் சார்ந்தது.

-வேள்பாரி

எதுவொன்றையும் தேவையானதாக மாற்றுவதுதான் வணிகம். வணிகத்திடம்தான் ஆசையின் திறவுகோல் உள்ளது.

-வேள்பாரி

தாழை மலர்

தாழை மலரில் பெண் பூ, ஆண் பூவென இருவகைகள் இருக்கின்றன. அவற்றுள் ஆண் பூவின் இதழ்களை ஆடைகளுக்குள் போட்டுவைத்தால், சிறு பூச்சிகள் ஆடைக்குள் நுழையாது. அது மட்டுமல்ல; நல்ல மணமூட்டியாகவும் அது இருக்கும்.

-வேள்பாரி

சொல் சுடும் போது சொல்லைச் சுடுவான் புலவன்.

-வேள்பாரி

ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.

-வேள்பாரி

ஒரே நேரத்தில் மண்ணுக்குள் வேர்விடவும் மேல்நோக்கி முளைவிடவும் தாவரங்களால் முடிவதைப் போல...

-வேள்பாரி

உரத்துச் சொல்லப்படுவதைவிடக் காதோடு காதாகப் பேசும் கதைக்கு வயது அதிகம்.

-வேள்பாரி

காதல் சொல்லால்தான் மலர்கிறது.

ஆணின் கண்கள் காதல் கொள்பவை; ஆனால், காதலைச் சொல்லக் கற்றவை அல்ல.

தொடுதலின் மூலம் ஆயிரம் விழிகள் உள்ளுக்குள் விழித்து அடங்குகின்றன.

-வேள்பாரி

பெருங்காட்டைச் சிறு பூவொன்று காதல் கொள்வதைப் போல...

-வேள்பாரி

நிலத்தை உழவேண்டும். அதற்குமுன் உழும் நிலத்தை உணர வேண்டும்.

-வேள்பாரி

தீயவர்களின் வீழ்ச்சி மகிழ்வை கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சியோ துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும்.

-வேள்பாரி

நாடோடி நாகரிகம் எல்லா உயிர்களையும் தனதாக்கி நேசித்தது.

-வேள்பாரி

காதலின் கூர்மிகு ஆயுதம் நீர்சுரக்கும் நுனிநாக்கு.

-வேள்பாரி

உரசி நகரும் கிடை வாழ்க்கை எந்நேரமும் காதலைப் பற்றவைத்த படியே இருந்தது. கடையப்பட்ட தயிர் மத்தின் விளிம்புகளுக்கு இடையில் விரல் தேய்த்து வெண்ணெய் எடுப்பதைப்போல, திரளத் திரளக் காதலை எடுத்துக்கொண்டே நடந்தனர் செம்பாவும் கோவனும்.

-வேள்பாரி

வாசலில் கோலம் மலர்ந்துவிட்டால், கவலைக் எல்லாம் காற்றாகப் பறந்துபோகும்.

-வேள்பாரி

கடித்து இழுக்க விலங்குகளுக்கு பல் இருப்பதைப் போல் மனிதர்களுக்கு கதை.

-வேள்பாரி

ஈட்டியை விசைகொண்டு எறியும் எங்கள் வீரர்களின் கை தன்னிகரற்ற வலிமை கொண்டிருப்பது சதையால் அன்று கதையால்.

-வேள்பாரி

மனிதன் பாம்பைப் பற்றி பேசும் கணத்திலேயே அது அவனுக்குள்ளே வந்துவிடுகிறது.

-வேள்பாரி

எல்லாம் கண்டறியாதவர்கள் சொல்லும் கதைகள். ஆளுக்கு ஒன்றாக இருக்கும்.

-வேள்பாரி

கதை சொல்லும் போது பெருகக் கூடியது; நினைக்கும்போது திரளக் கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக் கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.

-வேள்பாரி

செல்வத்தை விஞ்சும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. செல்வத்தின் திளைப்பில் மிதக்கும் கண்களை, அதைவிட அதிகமான செல்வத்தைக் கொட்டுவதன் மூலம் கவனம் பெறவைக்க முடியாது. ஆனால், கலையின் நுணுக்கம் கண்களை அசைவற்று நிறுத்தும்.

-வேள்பாரி

மனிதன் கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனைக் குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.

-வேள்பாரி

அனுபவம் அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது.

-வேள்பாரி

காமத்துக்கு காட்சி வடிவம் கொடுக்க முடியுமா? அது காட்சி வயப்பட்டதன்று, கனவு வயப்பட்டது. பூவின் மலர்தலில் உருவாகும் மணம்போல, மனித மலர்தலில் உள்ளுருகும் நிகழ்வு. கனவைக் கண்கொண்டு பார்க்க நினைப்பது அறியாமை. அது கண்ணுள் பார்க்க வேண்டியது.

-வேள்பாரி

காமம் ஔியால் அல்ல... ஔி ஏற்படுத்தித்தரும் இருளுக்குள்தான் மலரத் தொடங்கும்.

-வேள்பாரி

காண்பவரின் கண்ணுக்குள் கனவை நிகழ்த்துவதுதான் கலை.

-வேள்பாரி

முன்னேறுவதைவிடக் கடினமானது பின்தொடர்வது.

-வேள்பாரி

மரத்தைத் தெரிந்துகொள்ள மரத்தைப் பார்த்தால் போதும். ஆனால், மரத்தை அறிந்துகொள்ள அதன் வேரைப் பார்க்க வேண்டும்.

-வேள்பாரி

கபிலர், அந்தக் கிளையை நோக்கிச் சென்றார். மயில், கிளையிலிருந்து தாவி மண்ணில் கால் பதித்த இடத்தில் அதன் காலடி படிந்திருந்தது. அதைப்பார்த்தபடி சொன்னார், "மயிலின் காலடியை நொச்சி இலைக்கு உவமை சொல்வர். வெண்ணொச்சி ஐந்து இலைகளை உடையது. மயிலுக்கு முன்பக்கம் மூன்று விரல்கள்தானே, அதனால் கருநொச்சியைத் தான் உவமை சொல்லியிருக்க வேண்டும். அதற்குத்தான் மூன்று இலை."

-வேள்பாரி

விழா என்றால், அறுவகைத் தராசும் தரை தட்டும் ஓசை நிற்காமல் கேட்க வேண்டும். அதுவே திருவிழா என்றால், இந்த அறுவகையோடு சேர்ந்து எழுவகை அளவையும் நில்லாமல் நீள வேண்டும். அதனினும் பெருவிழா என்றால், இந்த இரண்டோடு சேர்த்து எண்வகை இன்பத்தில் நகரம் திளைக்க வேண்டும். இதுவே விழாக்களுக்கு இலக்கணம் கண்டோர் சொன்ன சொல்.

(மாணிக்ககற்களை நிறுத்தும் சிறிய வகை மணித்தராசு, தங்கநகைகளை நிறுத்தும் பொற்தராசு, உலோகங்களை நிறுத்தும் உலோகத்தராசு, பண்டத்தராசு, மரத்தராசு, தூக்குத்தராசு...)
(ஆடை, அணி, உண்டி, தாம்பூலம், நறுமணம், காமம், இசை, கொண்டாட்டம் என இன்பம் எண்வகை...)

-வேள்பாரி

நெருஞ்சிப் பூவுக்கு இன்னொரு பெயர் ஞாயிறு திரும்பி. கதிரவன் எழுவதிலிருந்து மறைவது வரை அதைப் பார்த்தபடித் திரும்பக்கூடிய விந்தையான மலர். அதனால், இதைக் கதிரவன் மேல் காமம் கொண்ட மலர் என்று சொல்வார்கள்.

-வேள்பாரி

அறிவாலும் குணத்தாலும் எடுக்க வேண்டிய முடிவை, விதிகளாலும் கட்டளைகளாலும் எடுக்க முடியாது. மனிதன் எடுக்க வேண்டிய முடிவைச் சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம்.

கையில் எடுப்பவனுக்குத் தகுந்த கையுறைகள்தான் சட்டவிதிகள்.

-வேள்பாரி

முளைத்தது விளையும்... விளைந்தது கனியும். அதற்கு எதிராக எதுவொன்றையும் பக்குவப்படுத்தி விளையவைக்கவும் முடியாது; பதப்படுத்தி கனியவைக்கவும் முடியாது. அதுதான் இயற்கை.

-வேள்பாரி

இயற்கையை ஆள்வதற்காகத்தான் வெல்ல முயல்கிறோம். வெல்வதற்காகத்தான் அழிக்க முயல்கிறோம். அந்த அழிவுதான் அரசாட்சியின் சாட்சி.

-வேள்பாரி

தவறுகளை சிறப்பு என்று நீங்கள் பாராட்டுவதன் காரணம், சிறப்பானவற்றைத் தவறானதாக மாற்றிவைத்திருக்கும் உங்களின் அதிகாரம்தான்.

-வேள்பாரி

காலம் குறித்த அச்சம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. காலத்தை அறிந்தவனுக்கு அதிகாரத்தின் எல்லாக் கதவுகளும் திறக்கத்தானே செய்கின்றன.

-வேள்பாரி

கூடு என்பது பறவைக்கான தங்கும் இடம். வானம்தான் வாழ்விடம்.

-வேள்பாரி


*சென்றிக்கொடி*

காட்டுக்குள் இருக்கும் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், சென்றிக் கொடியைப் பறித்துத் தீக்கற்களால் தீ மூட்டுவார்கள். அந்தக் கொடியில் தீப்பற்றி எரியாது; புகை மட்டுமே வரும். உச்சி நோக்கி விடாமல் மேலெழும் ஊசிப்புகையைப் பார்த்து அவருக்கு உதவி செய்ய மக்கள் போய்விடுவார்கள்.

அருகில் மற்றொரு புகை மேலெழுந்தால், உதவிக்கு ஆள்கள் போய்விட்டார்கள். வேறுயாரும் வரவேண்டியதில்லை என்று பொருள்.

-வேள்பாரி

பசி கண்ணை மறைக்கலாம். ஆனால், கண்ணைக் கெடுத்துவிடக் கூடாது.

-வேள்பாரி

*வெற்றிலை*

வெற்றிலையின் பின்புறம் இருக்கும் நரம்புகள் மூன்றும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒன்றுபோல் இறங்கியிருந்தால், அது ஆண் வெற்றிலை. மேலே இருப்பது இறங்கியும் மற்ற நரம்புகள் விலகியும் இறங்கியும் இருந்தால் அது பெண் வெற்றிலை.

-வேள்பாரி

கதைகள் ஒருபோதும் முடிவதில்லை.

வலியையும் வேதனையையும் வெளிக்காட்டாமல் வாழ்வதுகூட ஒருவிதமான கலைதான்.

-வேள்பாரி


எங்கிருந்தும் வானத்தைப் பார்க்கலாம். ஆனால், எங்கிருந்து பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம்.

கடல் அதன் அலைகளின் வழியாக அறியப்படுவதைப் போல வானம், அதைக் காணும் கோணத்தின் வழியாகத்தான் காட்சிப்படுகிறது.

-வேள்பாரி

சனிக்கோள் நிலவுடனும் பிற விண்மீன் கூட்டங்களுடனும் ஒரே அமைப்புக்கு மீண்டும் வந்து சேர முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதனால்தான் நமது முன்னோர்கள் பகலை முப்பது நாழிகையாகவும், இரவை முப்பது நாழிகையாகவும் பகுத்தனர். அதனடிப்படையில் ஒரு நாளை அறுபது நாழிகையாகவும், காலச்சுழற்சியை அறுபது ஆண்டுகளெனவும் வரையறுத்தனர்.

யவணர்கள் வியாழன் கோளை அடிப்படையாக கொண்டு வரையறுத்திருக்கலாம். வியாழன் ஒரு சுழற்சியை முழுமைகொள்ள பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதையே சுழற்சி வட்டமாக கொண்டு பகலை பன்னிரண்டு பகுதிகளாவும், இரவை பன்னிரண்டு பகுதிகளாகவும் பிரித்திருக்கலாம்.

-வேள்பாரி


கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப் போலப் படிந்தே கிடக்க வேண்டும். காதலுக்குத்தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெருந்தண்டணையைக் கனவுகளே அளிக்கின்றன.

-வேள்பாரி

எது இலக்கியம், எது காதல், என்பதைப் பிரித்தறிய முடியாது. ஒன்றின் நிழலாக இன்னொன்று இருக்கும். ஆனால், எது நிழல் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

-வேள்பாரி

தஞ்சை பிரகாஷ்

எல்லா நோயும் , 
மனசில தான் 
தொடங்குது ...

உடம்பில தான் 
முடியுது .

-தஞ்சை பிரகாஷ்

கவிஜி

தகுதி அற்றவை தப்பிப் பிழைக்கையில்
தகுதி உள்ளவை
தவித்துப் பிழைக்கிறது
*
ரௌத்ரம் பழகுவது இருக்கட்டும்
அதற்கு முன்
எப்போதும் ' ம்' கொட்டிப் பழகு

- கவிஜி

ஆத்மாநாம்

மனிதன் வெற்றுடம்புடன் திரிகிறான்.நகரெங்கும் அன்பைத் தேடி அச்சத்துடன்

-ஆத்மாநாம்

தஸ்தயெவ்ஸ்கி

கடைசியாக மிச்சமிருப்பது 
இது ஒன்றுதான்.
நிஜ வாழ்க்கையின் யதார்த்தத்தோடு மோதிவிடுவது மட்டும் தான்.

-தஸ்தயெவ்ஸ்கி

வேள்பாரி

அதிகாரமும் அறமும் இரண்டு எல்லைகள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறம் பேணவே முடியாது.

-வேள்பாரி

டேவிட்

மணப்புரம் எதிரிலிருக்கும் வேப்பமரம் 
தினம் கம்மலை அடகுவைத்து செல்லும் எதோஒரு பெண்ணுக்கு சிறுகுச்சியை காதணியாய் அணிவிக்கிறது.

டேவிட்

நிசப்தன்

எல்லாவற்றையும்
புரிந்து கொள்ள முடிகிறது
ஆனால்
அவற்றை ஏற்றுக்கொள்ளத் தான்
அவ்வளவு சங்கடமாக உள்ளது

-நிசப்தன்

வேள்பாரி

எதிரி என்ன செய்கிறான் எனச் சிந்திக்கத் தொடங்குவதே அவனது நோக்கத்துக்குள் நாம் இழுபட்டதன் அடையாளம்தான்.

-வேள்பாரி

அ.முத்துலிங்கம்

திங்கட்கிழமை மீது எனக்கு ஒரு கோபமும் இல்லை! அது வரும்போதே நான்கு வேலை நாட்களையும் உடன் அழைத்து வருகிறதே? அதுதான் பிரச்சனை!
- அ.முத்துலிங்கம்

லெனின்

உன்னை விமர்சிப்பவர்களுக்கு நிரூபிக்கப் போராடாதே. உன்னை நம்பியிருப்பவர்களுக்கு உண்மையாக இருக்கப் போராடு

-லெனின்

ஐன்ஸ்டீன்

செய்வதையே திரும்பத் திரும்ப செய்துவிட்டு விளைவுகளை மட்டும் வேறுவேறாகக் கற்பனை செய்யாதீர்கள்

-ஐன்ஸ்டீன்

வேள்பாரி

களையும் பறவைகள் வெகுதொலைவு செல்வதில்லை. அருகில் இருக்கும் மரங்களிலேயே உட்கார்ந்து விடுகின்றன.

-வேள்பாரி

வெ.இறையன்பு

ஆலோசனை என்பது அனுபவப் பகிர்வு.
அறிவுரை என்பது நாம் செய்யாததை அடுத்தவர்க்குக் கூறுவது

-வெ.இறையன்பு

வேள்பாரி

வலிமயான தாக்குதலை முறையற்று நடத்துவதைவிட, எளிய தாக்குதலை முறையான ஒழுங்கோடு நடத்துவதே எதிரிகளை வீழ்த்தும்.

-வேள்பாரி

ஈரோடு கதிர்

"எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்" என்ற சமாதானம் எத்தனை அழகியது அல்லது எளியது
-ஈரோடு கதிர்

வேள்பாரி

தனது புகழின் மீதான பெருமிதத்தை அடுத்தவன் கண்களின் வழியே பார்ப்பது அளவிட முடியாத மகிழ்வைத் தரக்கூடியது.

-வேள்பாரி

ராஜா சந்திரசேகர்

வாகனம் வாங்கனும்ங்கறது கனவு.அதுவரைக்கும் கனவுதான் வாகனம்.

-ராஜா சந்திரசேகர்

வேள்பாரி

வீரமும் வலிமையும் சிந்தனையில்தான் உள்ளன.

-வேள்பாரி

வேள்பாரி

பெருந்தாக்குதலுக்கான ஆயத்த முயற்சியில் இருப்பவர்கள், நாங்கள் அப்படியல்ல எனக் காட்டிக்கொள்ள முயல்வார்கள்.

-வேள்பாரி

ராஜா சந்திரசேகர்

மீனுக்கு உயரம் எல்லாம்
அது நீருக்குள் போகும்
ஆழம்தான்

- ராஜா சந்திரசேகர்

ஜெயகாந்தன்

மனசு சலிச்சுப்போச்சு, வெறுத்துப் போச்சுன்னு சும்மா சொல்லிக்கிறதுதான்.
அனுபவிச்சவனுக்கு எதுவும் வெறுக்கறதில்லே. வெறுத்துடனும்ன்னு ஓர் ஆசை

-ஜெயகாந்தன்

தமிழன்பன்

தான்
பூப்பதில்லை புல் …
தன்னைப்
பார்ப்பவரைப் பூத்துவிடச் செய்கிறதே
போதாதா?

-தமிழன்பன்

வேள்பாரி

உண்மை என்பது இருக்கும் இடம் சார்ந்தது. எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதேயில்லை.

-வேள்பாரி

எஸ்.ரா

ஊர் சுற்றுவதில் உங்களுக்கு உள்ள ஆர்வம் வெறும் பயணியின் ஆசையா, இல்லை எதையாவது தேடிச் சென்று கொண்டிருக்கிறீர்களா?

நான் சுற்றுலாபயணி அல்ல. இன்னும் சொல்லப்போனால் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் எதையும் நான் பார்த்ததே கிடையாது. தாஜ்மகாலைக்கூட யமுனையின் கரைகளை ஒட்டிய கிராமங்களில் சுற்றிக்கொண்டிருந்த போது வயல் வெளிகளின் பின்னிருந்துதான் பார்த்திருக்கிறேன். எனது தேடுதலின் காரணம் தெளிவற்றது. அது அவ்வப்போது கிளைக்கக் கூடியது. பயணத்தில் குறிப்பெடுப்பதோ, புகைப்படம் எடுத்துக் கொள்வதோ எதுவும் கிடையாது. இன்னும் சொல்வதானால் குறிப்பாக எந்த ஊருக்குப் போகப் போகிறேன் என்ற திட்டம் கூடக் கிடையாது. இமயமலையின் பதினெட்டாயிரம் அடி உயரம் வரை சென்றிருக்கிறேன். கிர்காட்டிற்குள் நடந்து திரிந்திருக்கிறேன். கீழ்வாலை குகை ஓவியங்களைக் கண்டிருக்கிறேன். அஜ்மீரின் தெருக்களில் உறங்கியிருக்கிறேன். புழுதிபடிந்த உடையும் பிளாட்பார கடைகளில் உணவுமாக வாழ்வது பழக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் எனது பயணம் இலக்கற்று எந்த நேரமும் புறப்படத் தயராகத்தானிருக்கிறது. ஒரேயொறு வேறுபாடு, பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல பயமற்று எந்த நகரிலும் சுற்றித்திரிய முடிவதில்லை. அத்தோடு பலவருடமாக ஊர் சுற்றியதால் சம்பாதித்த உடல்கோளாறுகள் பயண எல்லையை சுருக்கிக் கொண்டு விட்டிருக்கிறது.

பேட்டி: எஸ்.ராமகிருஷ்ணன் 

நன்றி: தீராநதி

கபீர்

ஒவ்வொன்றும்
அதனதன் கதியில்
மெல்ல மெல்ல நிகழ்கிறது
மனமே !
தோட்டக்காரன்
நூறு வாளிகள் 
நீருற்றினாலும் ,
பருவம் வரும்போதுதான்
கனி தோன்றும் .

- கபீர்

நர்சிம்

உன்
பயணத்தில் இடர்ப்பட்ட
முதல் கல் நான்

என்
நெடும்பயணத்தில்
நான் இளைப்பாறிய
நிழல் மரம்
நீ

-நர்சிம்

யாத்திரி

கருப்பு
சிவப்பு
மாநிற
அழகு பேதங்கள் அற்று
எல்லா பெண்களையும்
தேவதை என்றழைக்க
யாரோ ஒருவன் இருப்பான்
சிறுவயதில் கேட்டறிந்த
தேவதையின் தோற்றங்கள் குறித்த புரிதல்
மெல்லமாய் தகர்கிறது
தேவதை என்பவள் ப்ரியப்பட்ட பெண்!!
         ---யாத்திரி

ப.பி

நாளை வரப் போகும் துயரை தாங்கிக் கொள்வேன், ஆனால் இன்று அதை இரவல் வாங்க மாட்டேன்

-படித்தது

கற்றதும் பெற்றதும் கவிதைகள்

 எண்ணங்கள் ஒரு சுமையல்ல.
தேவையற்ற எண்ணங்களே சுமையானவை

-ஓஷோ

ஒரு சொல் போதுமானதாய்
இருக்கிறது
பிணைத்துக் கொள்ளவும்
பிய்த்து எறியவும்

சில புன்னகை
சில சொற்கள்
சில பகிர்வு
எத்தனை நெருக்கமாய்
இழையோடினாலும்
விபத்தைப் போல்
ஒரு இடறுதல் காத்திருக்கிறது
எப்போதும்.!

-படித்தது

இறுதியில் நம் நினைவில் இருக்கப்போவது நம் எதிரிகளின் சொற்கள் அல்ல, நண்பர்களின் மெளனங்களே".

-மார்ட்டின் லூதர்கிங்

 கருகிவிடுமெனும் பரபரப்பில்
கை சுட்டுக்கொண்டது
எத்தனையாவது முறையெனச்
சொல்ல முடியாது
அம்மாவால்.

-யுகபாரதி

 சர்வாதிகாரம் என்பது ஒரே ஒரு அயோக்கியனைச் சமாளிப்பது..!!

ஜனநாயகம் என்பது ஒவ்வொரு அயோக்கியனையும் சமாளிப்பது..!!

 -கண்ணதாசன்

 சஞ்சலம் உள்ள நெஞ்சின் புனைவுதான் ஜோதிடம் 

-விவேகானந்தர்

உலகையே உள்ளங்கையில் எளிதாக கொண்டு வந்துவிட்டார்கள் ஆனால் ,உணவை உள்ளங்கைக்கு கொண்டு வர உழவனால் மட்டுமே முடிகிறது!!!

- நம்மாழ்வார்

தந்தை பழைமைவாதி, என் மகனுக்கு நான் பழைமைவாதி...

 -வைரமுத்து

வாழ்வின் எல்லை வரை உடன் வருபவர்கள் ஒருபோதும் அதனை வாக்காகத் தருவதே இல்லை. இடையில் நின்றுகொள்ளப் போகின்றவர்கள்தான் காலம் முழுக்க இருப்பேனென்னும் நம்பிக்கையை அளிக்கிறார்கள்.

-யாத்திரி

 தனிமை என்பது
என்னுடன்
நானிருப்பது தான்

-வசுமித்ர: 

ஆணவம் என்பது ஒரு இருப்பு.நீ நான் என்ற தன்முனைப்புடன் சென்று கொண்டே இருக்கிறாய்.அது மிகவும் பொய்யானது.அது உன்னிடமிருந்து அதிக பொய்களை கேட்கும்.அதை நீ திருப்திப்படுத்த முற்றிலும் பொய்யானவனாக ஆக வேண்டியிருக்கும்

-ஓஷோ

 பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும்போது எல்லாம் குடைபிடித்துக் கொண்டு செல்லும் கயவர்கள் நாம்

-ராஜூ முருகன்

வண்ணதாசன்

கல்யாணப் பெண்ணின் 
பக்கத்திற்கு, பக்கத்திற்கு,
பக்கத்தில் இருந்த பெண்
கல்யாணப்பெண் போல இருக்கிறாள்.
பூக்காலச் செடியில்
இக்காம்பு, அக்காம்பு
எக் காம்பிலும் பூ.

-வண்ணதாசன்

13/04/2021

நர்சிம்

என்னை மறந்திருப்பாயோ
என்கிற நினைப்பே
போதுமானதாயிருக்கிறது
உன்னையென்
நினைவிலேயே வைத்திருப்பதற்கு

-நர்சிம்

ராஜா சந்திரசேகர்

உண்மையை காப்பாற்ற பொய் சொன்னேன்,பொய்யை காப்பாற்ற உண்மையை சொன்னேன், என்னை காப்பற்ற இரண்டையும் சொன்னேன்

-ராஜாசந்திரசேகர்

செல்வராஜ் ஜெகதீசன்

எழுத்தில் இருப்பதை
எடுத்துக் கொடுக்கும்
பணிதான்
என்றாலும்

இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி
இருக்கலாம்
இந்த
மருந்துக்கடை
விற்பன்னர்கள்

-செல்வராஜ் ஜெகதீசன்

ஜீவிதன்

தனித்துப் பறக்கும்
பறவையை கண்டால்
தவிப்பாய் இருக்கிறது

கொடியில் உலரும்
புடைவைகளிலிருந்து உயிரை
நுகர்ந்து கொள்ளலாம்
போலிருக்கிறது

நட்சத்திரங்களுக்கிடையில் கோடு கிழித்து விளையாடும்
மனம் இன்னும் மாறாதிருக்கிறது

மொத்தத்தில் சிறிதளவேனும்
மனிதனாயிருப்பதில்
மிகுந்த சந்தோஷமிருக்கிறது

-ஜீவிதன்

காந்தி

உங்கள் கோபத்தை
உங்களின் மெளனத்தால்
வெளிப்படுத்துங்கள்

-காந்தி

வேள்பாரி

பொறாமையும் வெறுப்பும் மனித மனத்தைக் குறைந்த அளவே இயக்கும் ஆற்றல் கொண்டவை. பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது.

-வேள்பாரி

ஜி சிவக்குமார்

சிறப்பு தரிசனத்தில் நான்
வெகுநேரம் காத்திருக்க
தர்ம தரிசனத்தில் நிற்பவரிடம்
பேசிக் கொண்டிருந்தார்
கடவுள்

-ஜி.சிவக்குமார்

வின்சென்ட் சர்ச்சில்

நாளைக்கு,அடுத்த வாரம், அடுத்த மாதம்,அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே சொல்ல வேண்டும். பின் அதெல்லாம் ஏன் நடக்கவில்லை என்பதை விளக்கத் தெரிய வேண்டும்

-அரசியல் செய்வதற்கான அடிப்படை இலக்கணமாய் வின்ஸ்டன்ட் சர்ச்சில் சொன்னது

பேயோன்

திட்டுபவர்கள் 3வகை: நிஜமாக திட்டுபவர்கள்; கும்பலோடு திட்டுபவர்கள்; திட்ட ஓரிரு காரணமாவது கிடைக்கிறதே என திட்டுபவர்கள்

-பேயோன்

ஆதவன் தீட்சண்யா

ஆனைமலையில் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.
... நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சி குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்...

ஆதவன் தீட்சண்யா.

மார்க் ட்வைன்

பொய்கள் மூன்று வகைப்படும் 
1 பொய்
2 பச்சைப் பொய்
3 புள்ளி விபரங்கள்

-மார்க் ட்வைன்

மனுஷ்யபுத்திரன்

தானும் ஒரு உதிரும் இலைதான் என
அறிந்துகொள்ளும் நாள்வரை
இலை நினைத்துக்கொண்டிருந்தது
தான்தான் மரமென..

அப்படியெனில்
மரம் என்பது என்ன?
அது ஆயிரம் ஆயிரம்
உதிரும் இலைகளின்
துயரக் கூட்டம்...

-மனுஷ்யபுத்திரன்

ஓஷோ

உன்னை இழந்தால் அடைவாய்
உன்னை பற்றிக் கொண்டால் இழப்பாய்

-ஓஷோ

சு.வெங்குட்டவன்

கையில் புல்லாங்குழல் இல்லை. தலைமீது தங்கக்கிரீடம் இல்லை. அதன் மீதிலே மயிற்பீலியுமில்லை. பதிலாக, விரலிடுக்கினில்  பத்தாம்நம்பர் பீடி புகைந்துகொண்டிருந்தது.  கை பற்றும் சமீபத்தில் ஒன்யூஸ் டம்ளரும் உள்நிறைந்த மானிட்டர் பிராந்தியும் இருந்தது.

ஆனாலும் அவனொரு கிருஷ்ணன். பிறகு என் கிருஷ்ணன் கூறினான். 'உனக்கு வேண்டுமானால் இந்த வாழ்வு சலித்துப் போயிருக்கலாம். உனக்கு வேண்டுமானால் இந்த உலகம் வெறுத்துப் போயிருக்கலாம். உனக்கு வேண்டுமானால் இந்த இருப்பு அர்த்தமற்றுப் போயிருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் எனக்கொன்றுமில்லை. 

நான் வரும் வழியில் ஒரு மாடு கன்று ஈன்றுகொண்டிருந்தது. ஒரு பன்றிக்குட்டி அதன் தாய்மடியில் அவ்வளவு ஆனந்தமாக பாலூட்டியபடியிருந்தது. வேலிக்காத்தானின் விதையொன்று அவ்வளவு பச்சையாக முளைத்திருந்தது. 

அந்த மாடும் கன்றும் இயற்கையின் படைப்பு. அந்தப் பன்றிக்குட்டியும் அதன் தாய்மடியும் இயற்கையின் படைப்பு. வேலிக்காத்தான் விதையும்,  அதன் முளைப்பும் பச்சையும் இயற்கையின் படைப்பு. 

ஏ... வெறுத்துப் போனவனே... ஏ.. சலித்துப் போனவனே.. உனக்கு வேண்டுமானால் இந்த இருப்பு வெறுத்துப் போயிருக்கலாம். உனக்கு வேண்டுமானால் இந்த வாழ்வு சலித்துப் போயிருக்கலாம். ஆனால், உனைப் படைத்த இயற்கைக்கு  சலிப்பில்லை. சலிப்பென்பதேயில்லை. உனைப் படைத்த இயற்கைக்கு வெறுப்பில்லை. வெறுப்பென்பதேயில்லை. அது தொடர்ந்து படைத்துக்கொண்டுதான் இருக்கிறது... மாட்டுக்கன்றை. பன்றிக்குட்டியை... வேலிக்காத்தானை... மேலும்மேலும் படைத்தபடியேதான் இருக்கவும்போகிறது மாட்டுக்கன்றை... பன்றிக்குட்டியை... வேலிக்காத்தானை...

ஓ.. உதறிவிடத் துடிப்பவனே... ஓ.. விலகிச்செல்லத் துடிப்பவனே...   உண்மையை உணர்ந்துகொள். உதறிவிட்டால் விலகிவிடும் என்பதைப் போன்ற அறியாமை வேறெதுவுமில்லை.

மேலுமொரு உண்மையையும் உணர்ந்துகொள். இதுவே ஞானம். இதுவே மோட்சம். இதுவே  வழி. இதுவே தடம். இதுவே பாதை.

சந்தோசமாயிருப்பதை தவிர வேறு வழியில்லை.'

_சு.வெங்குட்டவன்

பா.சிங்காரம்

"சாட்டை அவர்கள் கையில் இருக்கும் வரை நாம் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும்" 

- பா.சிங்காரம்

ஐன்ஸ்டீன்

வெளிச்சத்தின் வேகத்தில் செல்பவர்கள் வெளிச்சமாகி விடுவார்கள்

-ஐன்ஸ்டீன்

ராஜா சந்திரசேகர்

உண்மையை காப்பாற்ற பொய் சொன்னேன்,பொய்யை காப்பாற்ற உண்மையை சொன்னேன், என்னை காப்பற்ற இரண்டையும் சொன்னேன்

-ராஜாசந்திரசேகர்

ராஜா சந்திரசேகர்

தேடிக்கொண்டே இரு
கிடைக்கலாம்
ஆனால் ஒன்னு
உன்னைத்
தொலைந்து போகாமல்
பார்த்துக்கொள்

-ராஜா சந்திரசேகர்

ரூமி

யார் உன் இருப்புக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுடன் இரு 

ரூமி

வேள்பாரி

சிந்தனையின் வழியே அறிய எவ்வளவு முயன்றாலும் பிடிபடாத காதல், சின்ன தொடுதலில் எல்லாவற்றையும் அறியச் செய்துவிடுகிறது.

-வேள்பாரி

வைத்தீஸ்வரன்

அடிக்கடி 
வெயிலுக்குள் நகர்ந்துவிடும்
எங்கள் வீட்டை 
என்ன செய்வதென்று 
தெரியவில்லை.

-வைத்தீஸ்வரன்

லஷ்மி சரவணகுமார்

வாழ்க்கை பல சமங்களில்
பெருந்துரோகங்களை மறக்கச் செய்து விடுகிற அளவிற்கு சின்னச்சின்ன ஏமாற்றங்களை மறக்கச் செய்வதில்லை

-லஷ்மி சரவணகுமார்

மார்க்ட்வைன்

ஒரு விஷயத்தில் சந்தேகம் இருந்தால் உண்மையைச் சொல்லிவிடு

-மார்க் ட்வைன்

கண்டாரதித்தன்

சமயத்தில் பெருத்த
அவமானத்தை
ஏற்பதற்கு குற்றத்தை
நீ செய்திருக்க வேண்டிய
அவசியமில்லை.

-கண்டாரதித்தன்

முகுந்த் நாகராஜன்

பொம்மை வாங்க இயலாத ஒருவன்
தன் குழந்தைக்குச் சொல்ல ஒரு
நாய்க் கதையை உருவாக்கிக் கொண்டு
நகர்கிறான் கடையை விட்டு

-முகுந்த் நாகராஜன்

வண்ணதாசன்

"சந்தேகத்தின் பதற்றத்துடன் வாழ்ந்து சாவதை விட, சந்தேகப்படாமையின் அசட்டு நிம்மதியில் ஒவ்வொரு கட்டமாகக் கடந்துபோய்விடுவது நல்லது"

-வண்ணதாசன்

வேள்பாரி

பூவோ, மதுவோ எல்லாம் நினைவை உதிரச்செய்யும் மயக்கங்களைத்தான் உருவாக்கும். காதல் மட்டும்தான் மயங்க மயங்க நினைவைச் செழிக்கச் செய்யும்.

-வேள்பாரி

லி போ

பறவைகள் அனைத்தும் பறந்து மறைந்தன;
ஓர் ஒற்றை மேகம் மிதக்கிறது.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதில்
நாங்கள் சலிப்பதே இல்லை-
அந்த மலையும் நானும்

-லி போ

வண்ணதாசன்

ஞாபகங்களைத்

திறக்கிற சாவிகளை

மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள்

-வண்ணதாசன்

சுஜாதா

மீண்டும் பிறந்தால் யாராக பிறக்க ஆசை? 'குழந்தையாக'
 -சுஜாதா

நர்சிம்

அருந்தப்படாத தேநீரின்
சுருக்கங்கள் விழுந்த மேற்பரப்பில்
உறைந்து போயிருக்கலாம்
ஏதேனுமொரு
சோகமோ
கோபமோ

-நர்சிம்

வேள்பாரி

பார்க்காத பகுதியில்தான் உண்மையின் முழுமையிருக்கிறது.

-வேள்பாரி

ஜெயந்தன்

மக்கள் யாருக்கு வழிவிடுகிறார்கள் என்றால், யார் அவர்களை இடித்து இழுத்து, பின்னே தள்ளி முன்னேறிச் செல்கிறார்களோ அவர்களுக்கு என்று யாரோ சொன்னது மிகவும் சரிதான். உலகம் தன்னை அதட்டத் தெரிந்தவர்களின் ஆணைக்குத் தான் அடிப்பணிகிறது. அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது. நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது.

#ஜெயந்தன்

அபாய அறிவிப்பு

அபாய அறிவிப்பு

கிளைக்குக் கிளை தாவும்
குரங்குகளே....

தந்திரம் கற்றுணர்ந்த 
குள்ளநரிகளே.....

கம்பீரமாக உலாவரும்
சிங்கம் புலிகளே....

காட்டுக்குத் 
தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது...

கவனமாக இருங்கள்
ஓட்டுக்கேட்டு 
வேடன் 
எப்போது வேண்டுமானாலும்
வரலாம்!

நன்றி :ஆனந்த விகடன்

வேள்பாரி

இயல்பாய் அமைவதைக்கூட இயல்பானதென ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தோடு இயங்கும் ஆற்றல் காலத்துக்கு உண்டு.

-வேள்பாரி

பிரான்சிஸ் கிருபா

"துயருருவது பெரும் அவஸ்தை. அதை அடுத்தவரிடம் எடுத்துக் கூறுவது அதிலும் மகா அவஸ்தை.." 

 -பிரான்சிஸ் கிருபா

ப.பி

ஒவ்வொரு துறையினரும் தத்தம் பணிகளைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்த வேளையில் ஒருவன் பேசாமல் மலம் அள்ளிக் கொண்டிருந்தான்.

-படித்தது

யுகபாரதி

முன்முடிவு
*******
முழம்போட்ட மல்லிகையை நீளம்விட்டு நறுக்கும் பூக்காரி
நல்லவளாகத் தெரிகிறாள்

உணவு மேசையில் கேட்காமல் உபரியாய்ப் பரிமாறும் சிப்பந்தி
நல்லவனாகத் தெரிகிறான்

எதிர்ப்படுகையில் சிரிப்பவர்களும்
எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிறவர்களும்
நல்லவர்களாகத் தெரிகிறார்கள்

நாமும் இன்னொருவருக்கு நல்லவராகத் தெரிய விரும்புகிறோம்

நல்லது என்பது தெரிவதில் இல்லை
தெரியாததிலும் உண்டு என்பது நமக்குத் தெரியாது.

- யுகபாரதி

எஸ் ரா

இந்த உலகத்தைப் பீடித்துள்ள பெரிய நோய் பாசாங்குதான். அந்த நோய் மற்றவர்களிடம் நாம் அன்பாக இருப்பதுபோல் நடிக்கச்செய்கிறது. மனதில் அன்பாக இருப்பதுபோல் நம்பவைக்கிறது. ஆனால் அதன் அடியில் சுயநலம் ஒளிந்திருக்கிறது. அது யாரையும் எப்போதும் விட்டுக்கொடுக்கவும் காட்டிக்கொடுக்கவும் ஏமாற்றவும் தயாராக இருக்கிறது.!

எஸ்.ரா. (துயில்)

கவிதைமொழியன்

அப்பாக்களின் தேவதைகள்..

விஷேச வீடுகளில்,,
"அம்மா பிடிக்குமா
அப்பா பிடிக்குமா.."
எனக்கேட்டு
யாரேனும்
கன்னத்தை
கிள்ளினால்,,,
அம்மாக்களின்
இடுப்பில்
அமர்ந்திருந்தாலும்..
அப்பாக்களை
கை காட்டுவார்கள்..

காய்ச்சல்
வந்து,
குணமாகிவிட்ட
விடுமுறை
நாளில்,,
பொம்மையை
பாப்பாவாக்கி..
பொம்மைக்கு
அப்பாவாக
நடந்து
கொள்வார்கள்,,

அம்மாக்கள்
வீட்டிலிருந்தாலும்,,
அப்பாக்களிடம்
முதன்முதலில்
காட்டுவதற்காக,,
கோலப்போட்டியில்
வாங்கி வந்த
சில்வர் தட்டை,,
புத்தகப்பைக்குள்
ஒளித்து
வைப்பார்கள்...

அம்மாக்களும்
தம்பிகளும்
தூங்கிவிட்ட
இரவில்...
அப்பாக்களின்
வண்டிச்சத்தம்
கேட்டதும்
ஓடிவந்து
கதவு
திறப்பார்கள்...

பொட்டானிகல் கார்டனுக்கு
சுற்றுலா சென்றுவரும்
பேருந்தில்,
அத்தனை
தோழிகளும்
விதவிதமாய்
ரோஜா நாத்தை
பற்றியபடி
அமர்ந்திருக்க,,
அவர்கள் மட்டும்
அப்பாவிற்கு
பொருத்தமான
ஸ்வெட்டரோடு
அமர்ந்திருப்பார்கள்..,

ஐந்தாறு
அழகான
ஆண்களின்,
காதல்
கடிதங்களை
புறக்கணித்திருந்தாலும்..
அப்பாக்கள்
வீட்டிற்கு
அழைத்துவரும்,
சுமாரான
மாப்பிள்ளையை
வெட்கத்தோடு
பார்ப்பார்கள்..

சமையல்
குறிப்பிற்காக
அம்மாக்களின்
அலைபேசிக்கு
அழைத்துவிட்டு,,,
அப்பாக்களது
நாளொன்றின்
சிகரெட்
எண்ணிக்கை
குறித்து,,
விசாரித்துக்கொண்டு
இருப்பார்கள்..

பிரசவ அறையில்,,
இடுப்பு வலியை
மறந்து,,
அந்த
புதிய சிசுவிற்கு
அப்பாவின்
நாசி
அப்படியே
அமைந்திருப்பதை
ரசித்துக்கொண்டு
இருப்பார்கள்,,,

அண்ணன்கள்
ஆகவேண்டிய வேலையை
பார்த்திருக்க,,
மனைவிகள்
புகைப்படத்தில்
சிரித்திருக்க,,
பிரேதமாகிவிட்ட
அப்பாக்களின்
அருகிலமர்ந்து
நிஜமாய்
அழுதுகொண்டு
இருப்பார்கள்...

அப்பாக்களின் தேவதைகள்..!

_கவிதை மொழியன்,

அருணா

ஒருக்களித்து படுத்தவளின் விசும்பல்கள்
முதுகில் பிரதிபலிக்கிறது!

-அருணா

ஜெயமோகன்

தன்மேல் சாய்ந்து அழும் பெண்தான் ஆணை முழு ஆண்மகனாக உணரவைக்கிறாள்.
 
-ஜெயமோகன்

நைமி

இங்கே சொற்கள் அல்ல முக்கியம்,
சொற்களால் என்ன அதிர்வு பிறக்கிறது என்பதே முக்கியம்!

- நைமி

நைமி

அன்பை
அளக்க முடிவு செய்தால்.. 
அது
நழுவிச் சென்றுவிடும்...

 -நைமி

நா.முத்துக்குமார்

அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்.தீயை படித்து தெரிந்து கொள்வதை விட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும்.

-நா.முத்துக்குமார்

ஐம்பொறி

ஐம்பொறி

*மூக்கின் வடிவம் நுரையீரலை ஒத்திருக்கிறது. நுரையீரல் மாறுபாட்டை மூக்கு பிரதிபலிக்கும்

*கண்களின் வடிவம் கல்லீரல் போல் இருக்கும்.மஞ்சள் காமாலை,மதுபழக்க அறிகுறிகளை கண்களே வெளிப்படுத்தும்

*கூம்பு வடிவ நாக்கு இதயம் போல.இதயத்தின் சக்தி மாறுபாட்டை வெளிப்படுத்தும்.

*மண்ணீரலோடு ஒத்திருப்பது உதடு.உதடு வறண்டிருந்தால் மண்ணீரலில் குளிர்ச்சி குறைந்திருப்பது எனப் பொருள்.உதட்டில் புண் இருந்தால் வயிற்றில் புண் இருக்கும்

*காதுகள் சிறுநீரகம் போல. காதுகேட்கும் திறன் குறைந்தால் சிறுநீரகம் பாதித்ததாக அறிகுறி

-பாறப்புற இராதாகிருஷ்ணன்

பாரதிதம்பி

" எல்லாப் பெண்களுக்குள்ளும் சொல்ல முடியாத கதைகளும், சொல்லித் தீராத கதைகளும் ஏராளம் நிரம்பிக் கிடக்கின்றன. அதைப் புரிந்து கொள்கிற, பகிர அனுமதிக்கிற ஆண்களை அவர்கள் கொண்டாடுகின்றனர்...

புரிதலும், பகிர்தலுமே பெண்ணின் ஆதித் தேவை "

- பாரதி தம்பி

நா.முத்துக்குமார்

அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்.தீயை படித்து தெரிந்து கொள்வதை விட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும்.

-நா.முத்துக்குமார்

சாக்ரடீஸ்

இன்பங்களில் தலையாயது அறிதலின் இன்பம்

-சாக்ரடீஸ்

வாலி

தமிழைத்
தான் வளர்ப்பதாக
சிலர் தம்பட்டம் அடிக்கிறார்கள்
இவர்கள்
வளர்ப்பதற்கும்
வழிப்பதற்கும்
தமிழென்ன
தாடியா?மீசையா?

-வாலி

நர்சிம்

ஒரு நிறப்பிரிகை போலத்தான்
விலகிப்போனாய் நீ
என் எல்லா வண்ணங்களையும்
எடுத்துக் கொண்டு

-நர்சிம்

வேள்பாரி

மன ஈடுபாடின்றிச் சொல்லும் ஒற்றைச் சொல்கூட ஒருவரைக் காட்டிக் கொடுக்கும்; இன்னொருவரால் கண்டறியப்படும்.

-வேள்பாரி

சூரியகுமார்

பெண் குழந்தை
பிறந்திருக்கிறதென
சந்தோஷமாக இனிப்பு
வழங்குகிறார்கள்
பெண் குழந்தையை
பெற்றவர்கள்..

சரி பரவாயில்லை
பெண் குழந்தைதான்
நல்லது என
ஆறுதல் சொல்கிறார்கள்
இனிப்பு எடுத்துக்கொள்பவர்கள்

-சூரியகுமார்

ஓஷோ

இருந்ததே தெரியாமல் இருந்துவிட்டுப் போனவர்கள்..அவர்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு நல்லவர்களாக இருந்தவர்கள்

-ஓஷோ

ப.பி

கதைப் புத்தகத்தின்
பக்கத்தில்
புலி துரத்திக் கொண்டோடும்
மானுக்குக் 
கூடுதலாக இரண்டு
கால்கள் வரைகிறது
குழந்தை

-படித்தது

நா.பார்த்தசாரதி

எங்கே நம்மை அடக்கியாள விரும்புகிறார்களோ அங்கே நாம் சுதந்திரமாக இருக்க முயல வேண்டும்.

எங்கே நம்மைச் சுதந்திரமாக விட்டு விடுகிறார்களோ அங்கே நாம் மிகவும் அடக்கமாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டும்

-நா.பார்த்தசாரதி

நாணற்காடன்

என் பார்வையை
இழுத்துச் செல்கிறது                                             சுவரேறும் கட்டெறும்பு
- நாணற்காடன்

பிரபஞ்சன்

எழுத்தை தொழிலாகப் பார்த்தால் சிக்கல் இல்லை. எழுத்தை அறமாகப் பார்த்தால் சிக்கல் தான்

-பிரபஞ்சன்

ஓஷோ

நான் ஒன்றைச் சொல்லும் போது அதை வரவேற்று நீங்கள் கைதட்டுகிறீர்கள் என்றால், நான் புதிதாகச் சொல்கிறேன் என்று அர்த்தம் அல்ல,
உங்களுக்குத் தெரிந்ததையே நானும் சொல்கிறேன் என்று அர்த்தம்

-ஓஷோ

அ.முத்துலிங்கம்

சண்டை என்று வந்தால் இறுதியில் சரணடையும் பெருமை ஆண்களுக்குத் தான்

-அ.முத்துலிங்கம்

ஓஷோ

இல்லாத ஒன்றைப் பற்றியதுதான் நம்பிக்கை

-ஓஷோ

வேள்பாரி

நெருப்பைவிட வேகமாகப் பரவக் கூடியது கதை. நெருப்பைவிட அதிகமாக சுடக்கூடியது கதை. நெருப்பைக் கொண்டும் எரிக்க முடியாதது கதை.

-வேள்பாரி

மு.மேத்தா

விளம்பரங்களுக்குத் தான்
வெளிச்சம் தேவை
வெளிச்சத்திற்கு
விளம்பரம் தேவை இல்லை

-மு.மேத்தா

கோ.வசந்தகுமாரன்

அரசாங்கம் செய்யாததை
நான் செய்திருக்கிறேன்
வரிகளைக் குறைத்திருக்கிறேன்
கவிதைகளில்

-கோ.வசந்தகுமாரன்

கு.விநாயகமூர்த்தி

இயலாதவன்
குழந்தைகளிருக்கிற வீடுகளில்
இந்த
வெறுங்கைகளை வைத்துக் கொண்டு
நுழையாமலே இருந்திருக்கலாம்

-கு.விநாயகமூர்த்தி

வேள்பாரி

அன்பு, உறவு, ஆசை, மகிழ்வு என உணர்வுகளால் நெருங்க முடியாததாக இருக்க வேண்டும் அரசாட்சி. அதன் விதிகள் எதன் பொருட்டும் கீழிறங்கக் கூடாது.

-வேள்பாரி

யுகபாரதி

உடன்போக்கு
*******
யார் யாரோடு இருக்கிறார்கள் என்பதுதான் பெரும் விவாதம்
அவரோடு இருந்தவர் இவரோடும்
இவரோடு இருந்தவர் அவரோடும்
போய்விட்டதாக புலம்பல்
யாரும் யாரோடும் வெகுநாள் இருக்க விரும்பாமல்தான் இருக்கிறார்கள்
யாரோடாவது இருப்பதில் எந்தத் தவறுமில்லை
இல்லாமல் போவதுதான் துக்கம்.

- யுகபாரதி

மகுடேசுவரன்

எல்லாரும் என்னை 
மறந்துவிட வேண்டும். 

அதன்பின் உங்கள்முன் 
நினைவுகூர முடியாத 
நீங்கா நினைவுபோல் 
தோன்றுவேன் !

-மகுடேசுவரன்

ஜானகிராமன்

யாரென்று தெரியாமலும்
கையசைத்து
வழியனுப்புகின்றன குழந்தைகள்

எல்லாம் தெரிந்து
இறுக்கமாக அமர்ந்திருக்கின்றனர்
சக பயணிகள்

அன்பைப் பகிர்ந்துகொள்ள
குழந்தைகளுக்கு மட்டும்தான்
காரணங்கள் தேவைப்படுவதில்லை

-ஜானகிராமன்

கல்யாண்ஜி

தண்ணீர்த் தொட்டியில்
செத்துக் கிடந்த
காக்கைக் குஞ்சுகளுக்கு
மனதார வருத்தப் பட்டாயிற்று.
வாசலில் நிற்கும்
வயசாளிக்கு …..
“ஒன்றுமில்லை” என்று
அனுப்பிவிடலாம்.
இன்றைக்கு …..
என்னால் முடிந்தது இவ்வளவே.

 - கல்யாண்ஜி

வைக்கம் முகமது பஷீர்

இந்த வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சுகமாக இருக்கணும்னா சொந்தமான கருத்து எதுவும் நமக்கு இருக்கக்கூடாது

-வைக்கம் முகம்மது பஷீர்

பாடலேர்

எல்லா மாறுதல்களிலும் ஒரே சமயத்தில் வெறுக்கத்தக்கதும் விரும்பத்தக்கதும் இருக்கும்

-பாடலேர்

தஞ்சாவூர் கவிராயர்

பரிமாறியவுடன் கை வைத்துவிடாதிர் இலையில் முதலில் பரிமாறிய கைகளைப்பார்த்து நன்றி சொல்லுங்கள் அது வீடானாலும் ஓட்டலானாலும் சரி... (தஞ்சாவூர் கவிராயர்)

பிஸ்மார்க்

ஒரு விஷயத்தை கொள்கை அளவில்
ஒப்புக்கொள்வதாக அரசு சொல்லிற்றென்றால் அதை செயல்படுத்தப் போவதில்லை என்று அர்த்தம்
-பிஸ்மார்க்

பிரபஞ்சன்

மனிதர்களை வேடிக்கைப் பார்ப்பதிலும் சுவாரஸ்யமானது எனக்கு வேறு ஒன்றும் இல்லை

-பிரபஞ்சன்

வேள்பாரி

வணிகம் சூழ்ச்சியை அடி உரமாகக் கொண்டது. அது கொடுத்துவாங்கும் இரு கைகளுக்குள்ளும் குருதியைப் போல் ஓடுவது.

-வேள்பாரி

விக்ரமாதித்யன்

ஊருக்குள்!

கோவிலில் தெய்வம்
சுடுகாட்டில் பிசாசுகள்
ஊருக்குள்
இரண்டும் கெட்டான்கள்

-விக்ரமாதித்யன்

சுஜாதா

ஒரு மனிதனை ஆன்மிகம் எப்போது பற்றிக்கொள்கிறது?

நிறையப் பணமும் நிறைய பயமும் வரும்போது

-சுஜாதா

மனுஷ்யபுத்திரன்

யாரும் தேற்ற வரமாட்டார்கள் என்பதற்காக
அழாமலே இருக்க முடியுமா

நனைகிறவர்கள் இல்லாத இடத்திலும்
பெய்கிறது மழை

- மனுஷ்ய புத்திரன்

வேள்பாரி

அடங்காத வெறியோடு பொறுமையைக் கைக்கொள்வது மட்டுமே மனம் பக்குவப்பட்டதன் உச்ச அடையாளம்.

-வேள்பாரி

கண்மணி குணசேகரன்

கருப்பசாமியோ
கசாப்புக் கடையோ
வெட்டும் கத்திகள்தான் வேறுபாடு
எப்போதுமே
ஆடுகள்
பலியாடுகள்தான்.
 ----கண்மணி குணசேகரன்

எம் ஆர் ராதா

உண்மையான கலைஞன் எப்படி இருக்கனும்?

ஆடியன்சுக்கு லஞ்சம் தருபவனாய் இருக்க கூடாது. அறிவை தருபவனாய் இருக்கனும்

#எம்.ஆர்.ராதா

இரா முருகன்

நல்ல மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் காணாமல் போகிறார். மோசமான மொழிபெயர்ப்பில் மூல நூலாசிரியர் காணாமல் போய் விடுகிறார்.
  
-இரா. முருகன்

வேள்பாரி

தேனின் சுவை சுவைப்பதில் அல்ல, சுவைத்ததில் இருக்கிறது. காமமும் அப்படித்தான்.

-வேள்பாரி

சாங் கிசாய்

தேநீர் அருந்துவது என்பதே
கற்பனை விரல்களின்
கணநேர தீண்டல்தான்

- சாங் கிசாய்

வேள்பாரி

விலகுதலும் இணைதலும் எப்பொழுது என்பதைக் கணிப்பதில் தான் இருக்கிறது காமத்தைக் கைகொள்ளும் வித்தை.

-வேள்பாரி

நேசமித்ரன்

அதற்குமேல் ஒன்றும்
இல்லை
என்கிறவர்களுக்குத்
தெரியாது
ஈமத்தின் கடைசிக்
கங்குவரை
காத்திருப்பவன்
எத்தனைமுறை
ஆகாசம் 
பார்க்கிறான் என்பது

-நேசமித்ரன்

வேள்பாரி

பேச்சு எந்தக் கணம் காமத்தின் பக்கம் போகிறதோ, அதன்பின் அதிலிருந்து விலகுதலை அதுதான் முடிவுசெய்யும்; நாம் முடிவுசெய்ய முடியாது.

-வேள்பாரி

மகுடேசுவரன்

உன்னை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எங்கோ பார்ப்பதுபோல்
இருக்கும் நீ
அப்படியே இரு
திரும்பாதே.
களவுப் பார்வைகள்
அனுமதிக்கப்படும் வரைதான்
உளவுகாணமுடியும்
உள்ளத்தை!

-மகுடேசுவரன்

வேள்பாரி

காட்டில் பிற எந்த ஆயுதத்தையும்விட வலிமைமிக்கது காடு பற்றிய அறிவு தான்.

-வேள்பாரி

தாவோ

அடுத்தவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை அறிந்தால் அது அறிவு. நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் அது ஞானம்

-தாவோ

12/04/2021

ஓஷோ

ஆணவம் என்பது ஒரு இருப்பு.நீ நான் என்ற தன்முனைப்புடன் சென்று கொண்டே இருக்கிறாய்.அது மிகவும் பொய்யானது.அது உன்னிடமிருந்து அதிக பொய்களை கேட்கும்.அதை நீ திருப்திப்படுத்த முற்றிலும் பொய்யானவனாக ஆக வேண்டியிருக்கும்

-ஓஷோ

ராஜூ முருகன்

பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும்போது எல்லாம் குடைபிடித்துக் கொண்டு செல்லும் கயவர்கள் நாம்

-ராஜூ முருகன்

ஆண்யனியோ கிராம்சி

அடுத்த மனிதனை அடக்கி ஒடுக்கி தன் கட்டளைகளை ஏற்க வைப்பதில் மனிதர்களுக்கு எப்போதுமே ஓர் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது. அந்த மனப்பாங்கு குடும்பம்,சமூகம் என்று பேதமில்லாமல் நடைமுறையில் இருக்கிறது

-ஆண்டனியோ கிராம்சி

வேள்பாரி

வளைய மறுக்கும் கிளை ஒடிவதும், வளைந்து கொடுக்கும் கிளை நீண்டு தழைப்பதும்தான் இயற்கையின் அமைப்பு.

-வேள்பாரி

ப.பி

அறிந்துகொள்ளல் என்பது இரு வகை.ஒன்று புரிந்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்வது(கதை,கவிதை)

 மற்றொன்று உணர்ந்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்வது(இசை,ஓவியம்)

-படித்தது

அதிகாரம்

அதிகாரம்

ஒரு நாள் உயரமான கோட்டை சுவர் ஒன்றின் மீது ஆடு ஒன்று நின்று கொண்டிருந்தது.அவ்வழியெ போன ஓநாயை நிற்கச் சொன்னது.

"ஏய் இங்கே வா"..எனக்கு பசிக்கிறது அந்தச் செடியில் நாலு இலை பறித்துவா என்றது..இதை செய்யாததால் ஆடு கோபத்துடன் மீண்டும் மீண்டும் சொன்னது.

ஓநாய் சொன்னது"நீ ஏறி நிற்கிற உயரம்தான் இப்படி பேச வைக்குது.இறங்கி வா அப்போது நீயார் எனும் உண்மை புரியும் என்றது

-நாட்டுப்புற கதை

லா.ச.ரா

படிப்படியாக ஏறும் வார்த்தை தடிப்பில், சண்டையின் காரணம் மறந்துபோய் வெற்றிக்கொடி கடைசி வார்த்தை யாருக்கு எனும் வீராப்புதான் மிச்சம்.

-லா.ச.ரா

பெரு.விஷ்ணுகுமார்

உரையாடுகையில் உங்கள் முன்னே
கொட்டாவியை விழுங்க தெரிந்த நானே
கைதேர்ந்த நடிகன்

-பெரு.விஷ்ணுகுமார்

வேள்பாரி

கேள்விகள் உருவாகிவிட்டால், அவை பதிலின்றி உதிராது.

-வேள்பாரி

16/02/2021

ஈரோடு கதிர்

ஒரு தவறான புரிதலுக்கு விநாடிப் பொழுது போதும். விளக்கம் பெற / தர ஒரு யுகம் தேவைப்படுகிறது!
-ஈரோடு கதிர்

யுகபாரதி

நைந்து மக்கிய 
புடைவையைத் திரியாகத் திரித்தே
விளக்கேற்றுவாள் அம்மா 
சிம்னி வாங்கவும் வக்கற்ற வீட்டில் காதலென்பது காஸ்ட்லி குத்துவிளக்கு..
_யுக பாரதி

போர்ஹே

காலத்தை அளப்பதற்கு என்னிடமிருக்கும் ஒரேயொரு வழி
உன்னுடன் இருப்பதும்;
உன்னுடன் இல்லாதிருப்பதும்.

போர்ஹே

யுகபாரதி

இந்தத் தொன்மையான மொழியின் முதல் காதல் கடிதம் இப்போது எங்கே இருக்கும்?

 காலத்தால் அழியாது போகவே பெண்களின் கண்களிலும் ஆண்களின் இதயத்திலும் அது மடித்துவைக்கப்பட்டிருக்கும்

-யுகபாரதி

நா.பார்த்தசாரதி

"மனித வாழ்க்கையின்
மிகப்பெரிய ஆச்சர்யம்
அன்புக்கு உரியவர்களை
எந்த இடத்தில்
எப்படி சந்திக்கப் போகிறோம் என்பதும்
எங்கே
எப்போது
எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும்
முன்கூட்டியே
தெரியாமல் இருப்பதுதான்""

-நா.பார்த்தசாரதி

வேள்பாரி

எவ்வளவு ஒன்றினாலும் விலகவேண்டிய இடமுண்டு என்பதை உணரும் நேரம் சற்றே கடுமையானது.

-வேள்பாரி

படித்தது

மெளனமாயிருந்தால் முட்டாளென்று சந்தேகித்தார்கள்
பேச ஆரம்பித்தேன் – இப்போது
யாருக்கும் சந்தேகமில்லை

-படித்தது

யுகபாரதி

ஒவ்வோர் அதிகாலையிலும்
வீடு வீடாக பாலூற்றும்
அந்த முதியவருக்கு
கஞ்சி ஊற்றத் தவறிய பிள்ளைகள் கடைசியில் அவருக்கு ஊற்றும் பால்
திரிந்திருக்கும் அல்லது பிரிந்திருக்கும்

-யுகபாரதி

லதாமகன்

கவனம் தவறி
புத்தகத்தில் சிறைபட்ட
ஈயொன்று
எத்தனை பக்கங்கள் படித்திருக்கும்?

- லதாமகன்

க.சீ.சிவகுமார்

பல பேர் திருடுகிறார்கள்.மாட்டிக்கொண்டவர்கள் திருடர்கள் என அறியப்படுகிறார்கள்‍‍‍‍‍‍‍

-க.சீ.சிவகுமார்

இளந்தென்றல் திரவியம்

பத்து பேர் கொண்ட நண்பர் குழுவில் நமக்கு மட்டும் ஒருவன் ரகசியம் பகிரும் போது 

நமக்கு ஒரு கிரீடம் கிடைக்கிறது 

குழுவுக்கு ஒரு கிரீடம் குறைகிறது.

இளந்தென்றல் திரவியம்

தாஸ்தாயெவ்ஸ்கி

நூறு சந்தேகங்கள் ஒரு ஆதாரத்தை உருவாக்கிட முடியாது

-தஸ்தாயெவ்ஸ்கி

வேள்பாரி

மனதுதான் பெரும்பாலும் மகிழ்வை உணர்கிறது. உடல் தேவையை மட்டுமே உணர்கிறது.

-வேள்பாரி

கம்பன்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது

*யாரோடும் பகை இல்லை என்ற பின் போர் இல்லாது போகும்; ஆனால் புகழ் இல்லாது போகாது

-கம்பன்

படித்தது

பருக்கையோடு சேர்த்து
கனவையும் ஊட்டுகிறார்கள்.
எதை,மென்று விழுங்குவதென திணறுகிறார்கள் குழந்தைகள்...:-

-படித்தது

தயாளன்

கூடவே பிறந்தது காலதாமதம்
வாட்ச் - ல்
பத்து நிமிடம் கூட்டி வைத்தும்
பிரயோசனமில்லை

மணிப் பார்க்கும் போதெல்லாம்
அந்த பத்து நிமிடம்
ஞாபகம் வந்து விடுகிறது

-தயாளன்

ராஜா சந்திரசேகர்

ஒரு மகத்தான 
தொலைதலுக்கு 
நிறைய தொலைதல்கள் தேவைப்படுகின்றன

-ராஜா சந்திரசேகர்

வேள்பாரி

ஆசையின் வழியே பயணப்படக் கூடாது. அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும். இயற்கை ஆசைக்கான பொருளன்று.

-வேள்பாரி

வேள்பாரி

மனம் உண்மையைப் பற்றி நிற்கும் விலங்கு. அதைச் சூழலுக்குப் பழக்குதல் எளிதல்ல.

-வேள்பாரி

வைரமுத்து

நீங்கள் எதிர்பார்க்கும் பாசம் இங்கே இருக்கும்.அதை காட்டுவதற்குதான் நேரம் இருக்காது
-வைரமுத்து

முகுந்த் நாகராஜன்

கார்ட்டூன் சேனலை
கண் விரித்துப் பார்க்க
பூனைக்குப் பயந்து ஓடிய
எலியைத் தேடுகிறாள்
பிடிபடாமல்
ஓடும்போது கை தட்டிச் சிரிக்கிறாள்

பாவம் பெரியவர்கள்
அழுகிற தொடர்களைப் பார்க்க
ஆவலாய் இருக்கிறார்கள்.

-முகுந்த் நாகராஜன்

கண்மணி குணசேகரன்

உதிர்ந்து கிடந்த
பூக்கள்...
அழகு.
கூட்டும்போதுதான்
குப்பையாகிவிட்டது.

-கண்மணி குணசேகரன்

வேள்பாரி

அரசர்கள் நாட்டை ஆள்கிறார்கள். வணிகர்கள் அரசர்களை ஆள்கிறார்கள்.

-வேள்பாரி

முகுந்த் நாகராஜன்

கை, கால், முகத்தை எல்லாம்
ஈரம் போக துடைத்துக் கொண்டேன்.
இந்த நாக்கை என்ன செய்வது.

-முகுந்த் நாகராஜன்

மகுடேசுவரன்

‘உங்கள் திருமணத்தன்று 
நான் எங்கிருந்தேன் ?’
மகளின் கேள்விக்கு 
விடைகூற முயன்றேன்.
“அந்தத் தீயின் 
நடுச்சுடராக ஒளிர்ந்திருந்தாய்.
எம் தலைமீது தூவப்பட்ட 
அட்சதையில் 
ஒரு மணியாக இருந்தாய்.
சூடிய மாலை நறுமணத்தில் 
இருந்ததும் நீதான்.
தாத்தா பாட்டியரின் 
கண்களில் 
நீர்த்துளியாக நீ திரண்டு நின்றாய்.
உன் தாயைக் கரம்பற்றிய 
என் உள்ளங்கைக்குள் 
வெப்பமாக இருந்ததும் 
நீயே...!”

-மகுடேசுவரன்

அறிவுமதி

சந்திப்பதற்காக
இனியும்
ஆசை வளர்க்காதே
வா

அவரவர்
இடத்திலிருந்தே
புறப்படுவோம்
எங்கேனும்
முள் தைத்தால்
வலியில் முகம் பார்த்துக்
கொள்ளலாமே

-அறிவுமதி

ஓஷோ

ஒவ்வொருவரும் ஜனாதிபதியாகி அதிகாரம் செலுத்த முடியாது.ஆனால் கணவனாகி மனைவி மீதும், மனைவி தாயாகி குழந்தை மீதும், குழந்தை விளையாட்டு பொம்மை மீதும் அதிகாரம் செலுத்தலாம்.பாவம் பொம்மைக்கு தான் கீழே ஒருவரும் இல்லை.இது ஒரு அதிகாரத்துவம் மிகுந்த சமூகம்.

-ஓஷோ

ராஜாராம்

எல்லோருக்கும் பொதுவான
நீதி ஒன்று இருந்தது.
பிரச்சினை என்னவெனில்
அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.

-ராஜாராம்

கவிதைகள்

1. "என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!"
- கனிமொழி

2. "பறிக்க முடியாத
பட்டுப்பூச்சியை மறக்க
பறக்க முடியாத பூக்களை
வெடுக்கெனெக் கிள்ளி
வீசின விரல்கள்"
3. "சிலைகளை விட
மலைகளை விட
பாறைகள் அழகானவை
கூழாங்கற்களும் கூட"
- கல்யாண்ஜி

4." கல்லெறிபட்டும்
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு"
- தேவதேவன்

5. "அதை அவ்வளவுதான்
புரிந்துகொள்ள முடிந்தது
நண்பர்களுக்கு
எதிரியே! உன் கைகளை
முத்தமிட அனுமதி
என் நண்பர்களைவிடவும்
அதை நீ புரிந்து கொண்டதற்கு!"
- மனுஷ்யபுத்திரன்


6. "அநேகமாய்
பார்க்க மறந்தாலும்
தலைக்கு மேல் வானம்
என் நினைவுக்குள்
நீயும்!"
- இரா. சேதுபதி

7. "கவிதைக்குள் வராத
எந்தவொன்றும் உலகில் இல்லை
உன்னை நான்
முத்தமிட்டு உயிர் பெற்ற
எனது காலத்தின்
முதற்கணத்தைத் தவிர"
-ரமேஷ் - ப்ரேம்

8. "எனக்கு யாருமில்லை
நான் கூட"
- நகுலன்

9. "எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"
- தபூ சங்கர்

10. "விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"
- இரா. பார்த்திபன்


11. "இன்னும் உடையாத
ஒரு நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு கடலாய்
இதழ்விரிய உடைகிறது
மலர் மொக்கு"
-பிரமிள்

12. "கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே
தோன்றவில்லை.
அவரும் புன்னகைத்துப்
போய் விட்டார்.
ஆனாலும்
மனதிலே ஒரு நிம்மதி"
- ஆத்மாநாம்

13. "இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"
-அறிவுமதி


14."..... ஆயத்தங்களில்
கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்.."
-பசுவய்யா (சு.ரா)


15. "கூந்தலின்
ஒற்றை முடியென
சந்திப்பின் குறுகிய வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்..."
- சல்மா

16. "....ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன. "

- குட்டி ரேவதி


17. "பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு உண்டேன்
இன்றை"


- தேவதச்சன்

18. "அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை."


- கலாப்ரியா


19. "உன் பெயர்
இந்த இரவில்
காலி அறையில்
மாட்டிய கடிகாரம்"

-சுகுமாரன்


20. "சுற்றிலும் இருட்டைவீசி
தயாராக நிற்கிறது இரவு
மனிதர்கள் சுவர்களுக்குள் ஒடுங்க
அனாதைகளாக அழும் தெருக்கள்"

- சமயவேல்

தவோ

தாழ்மையாக இரு;
அப்போது நீ முழுமையாக இருப்பாய்

வளைந்திரு;
அப்போது நீ நேராக இருப்பாய்
காலியாக இரு;
அப்போது நீ நிரம்பி இருப்பாய்
தேய்ந்துபோய் இரு;
அப்போது நீ புதிதாக இருப்பாய்’

-தாவோ

பாவண்ணன்

ஒரு எழுத்தாளனுக்கு தொடர்ச்சியாக புதிய விஷயங்கள் கிடைத்தபடியே இருக்க வேண்டும்.பேங்க் பேலன்ஸ் மாதிரி அவன் மனம் புத்தம் புது விஷயங்களால் நிறைந்திருக்க வேண்டியது முக்கியமான தகுதி

-பாவண்ணன்

ரூமி

"உன் வாழ்வில் தீப்பிடிக்க வை
உன் தழல்களுக்கு ஊதி விடுவோரைத் தேடு"

ரூமி

வேள்பாரி

கதைகள் ஒருபோதும் முடிவதில்லை.

வலியையும் வேதனையையும் வெளிக்காட்டாமல் வாழ்வதுகூட ஒருவிதமான கலைதான்.

-வேள்பாரி

இளந்தென்றல் திரவியம்

அப்படி ஒன்றும் 
கனம் இல்லை தான்...

இருந்தாலும் அவ்வப்போது 
பறந்து பறந்து
பூமியின் எடையை
குறைத்துக்கொடுக்கிறது
பட்டாம்பூச்சி.

இளந்தென்றல் திரவியம்

வெற்றிலை

*வெற்றிலை*

வெற்றிலையின் பின்புறம் இருக்கும் நரம்புகள் மூன்றும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒன்றுபோல் இறங்கியிருந்தால், அது ஆண் வெற்றிலை. மேலே இருப்பது இறங்கியும் மற்ற நரம்புகள் விலகியும் இறங்கியும் இருந்தால் அது பெண் வெற்றிலை.

-வேள்பாரி

மகுடேசுவரன்

யானையை 
என்றாவது 
ஆழ்ந்து ஊன்றிப் 
பார்த்திருக்கிறாயா ? 

அது 
எத்துணை அரிய 
மெல்லுயிர் என்று  
உணர்ந்திருக்கிறாயா ?

ஒற்றடங் கொடுக்கும் 
மெத்துதுணி போன்ற 
அதன் காலடி மொழுமொழுப்பு 
சிறுமுள் குத்தலைக்கூடத் 
தாங்காது, தெரியுமா ?

ஓர் எறும்பு 
அதன் காதிற்குள் புகுந்து
உட்சந்துகளில் ஊர்ந்தால் 
அதன் நிற்சமநிலை குலைந்து 
வலிபொறுக்க முடியாமல் 
இறந்தேவிடும் என்று 
அறிவாயா ? 

உயிரினங்களில் 
உயர்வான கழிவுடையது  
யானையே என்று 
கேள்விப்பட்டதுண்டா ? 

நூறு வகை
இலைதழைகளைத் தின்று 
வயிற்றுள் செறிவாய்த் தொகுத்து
இடும் எச்சத்தை 
நம் மக்கள் கால்குளிர மிதிப்பார்கள்,  
தெரியுமா ? 

அந்தச் சாணத் தேய்ப்பில் 
தொடைமுதல் 
காலடிவரையிலான 
அனைத்துத் தொந்தரவுகளும் 
நீங்குவதை நினைத்ததுண்டா ? 

அவ்வளவு ஏன், 
யானை இட்ட சாணத்தில் 
பட்டுப்பூச்சி மொய்ப்பதைப்  
பார்த்திருக்கிறாயா ? 

யானை என்பது 
ஒற்றை உயிரா ? 
அதன் தோற்பரப்பு  
நூற்றுக்கணக்கான 
நுண்ணுயிர்கள் 
தொற்றி வாழ்கின்ற
தோப்பு என்பதையேனும் 
அறிவாயா ?  

உன்னுடைய வரலாறெங்கும் 
நிகழ்ந்த 
ஆயிரக்கணக்கான போர்களில்
தலைவனைத் தூக்கிச் சுமந்தபடி 
களங்களில் ஓடிய 
களிறு யானைதானே ?  

கைவேற் செருநர்
கடிதோச்சி எறிந்த  
நெய்வேல் முனைகள் 
மெய்மேல் புக
பிளிறிச் செத்ததும் அதுதானே ? 

போர்நடுக்களத்தில் 
படுகாயமுற்று 
உயிர்க்கு இறைஞ்சுவோரைப்  
படைகிழித்துப் 
பாய்ந்தோடித் 
தன் தும்பிக்கையால் தூக்கி வந்து
மருத்துவக் கூடாரத்தில் 
சேர்த்ததும் யானையடா ! 

நீ பழக்கிய 
யானையைச் சுற்றி 
வட்டமொன்று வரைந்து 
“வரும்வரைக்கும் 
அப்படியே நில்” என்றால் 
அங்கேயே 
ஆடாது அசையாது நிற்குமடா !

அவர் கொடுக்கும் 
காசை வாங்காதே என்றால் 
வாங்காதடா !
கரும்புத் துண்டைத் தொடாதே 
என்றால் தின்னாதடா !
அன்பே உருவான பெண்போல் 
அளப்பரிய நேயம் காட்டுமடா ! 

அதன் காடு எங்கே ? 
அதன் நீர்வளம் எங்கே ? 
ஒரு வாழையிலையை 
முறித்துத் தின்றுவிடும் 
என்றுதானே 
மின்வேலியிட்டு 
வைத்திருக்கிறாய் ?  

காட்டின் 
நீர்ச்சுனைகள் அனைத்தையும் 
முன்னேற்ற மாசுபெருக்கித் 
தூர்த்துவிட்ட நீ
நீர்விடாய் பொறாது 
நிலமிறங்கி வந்த  
யானைமீது 
நெருப்பள்ளிப் போட்டாயே, 
உயிரினமாடா நீ ? 

உனக்குப் பயன்படாவிட்டல் 
உன் பண்ணை வளர்ப்புக்குள் வராவிட்டால் 
நீ அறுத்துத் தின்ன முடியாவிட்டால் 
உன் எதிரே வந்து நின்றால்கூட 
இவ்வுலகில் 
ஓர் அஃறிணை 
உயிர் வாழக் கூடாதாடா ? 

மனிதனாடா நீ ...

_கவிஞர் மகுடேசுவரன்

மார்ட்டின் நீம்லர்

"முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்

நான் குரல் கொடுக்கவில்லை 

ஏனென்றால் நான் யூதனல்ல.


பிறகு கம்யூனிஸ்ட்களை தேடி வந்தார்கள்.

நான் குரல் கொடுக்கவில்லை 

ஏனென்றால் நான் ஓர் கம்யூனிஸ்ட் அல்ல.


பின்னர் அவர்கள் தொழற்சங்கத்தினரை தேடி வந்தார்கள்.

 நான் குரல் கொடுக்கவில்லை.

 ஏனென்றால் நான் தொழிற் சங்கத்தினன் அல்ல.


பின்னர் அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள். 

அப்போது....

அங்கு ஒருவரும் மிஞ்சியிருக்கவில்லை 

எனக்காக குரல் கொடுக்க. "


-மார்ட்டின் நீம்லர்

அகராதி

நரியிடம் தின்னக்கொடுத்த வடையோடு
சிறகிலிருந்து சிறிது வானத்தையும்
பரிசளித்தது காகம்
நரி பாடிக்கொண்டிருக்கிறது
நீங்கள் ஊளை என்கிறீர்கள்

-அகராதி

பேயோன்

நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது
அது அரசாங்கம் தான்,
கவலை வேண்டாம்.

-பேயோன்

அம்பேத்கர்

புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க முடியும் என்றாலும், அந்த அறிவை பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்பட வேண்டும்

-அம்பேத்கர்
(அம்பேத்கர் அன்றும் என்றும்)

அசோகமித்திரன்

மொழியும் சொற்களும் பயன்படாத போது அழுகைதான் மொழியாக இருக்கிறது.அதுதான் யாருமே சந்தேகமறப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக இருக்கிறது

-அசோகமித்திரன்

சுந்தர ராமசாமி

எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது. சில சமயம் தூரத்தின் இடைவெளி, சிலசமயம் காலத்தின் இடைவெளி. 
     
-சுந்தர ராமசாமி

சுஜாதா

எவ்வளவு தான் காபி புராணம் பாடினாலும், வீட்டில் மனைவி தரும் காபிக்கு இன்னொரு கூடுதல் சிறப்பு உண்டு. 'டொங்க்' என்று டம்ளரை கீழே வைக்கும் வேகத்தில் அன்றைய நாள் ராசிபலனை தெரிந்து கொண்டு விடலாம்!

-சுஜாதா

வனவை தூரிகா

கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!

-  வனவை தூரிகா

ராஜாராம்

யாருமில்லை என்பதால்
பேசிக்கொண்டு இருந்தேன்.
வருத்தப்படுவேனே என்பதால்
கேட்டுக்கொண்டும் இருந்தேன்.

-ராஜாராம்

வேள்பாரி

காலம் குறித்த அச்சம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. காலத்தை அறிந்தவனுக்கு அதிகாரத்தின் எல்லாக் கதவுகளும் திறக்கத்தானே செய்கின்றன.

-வேள்பாரி

சச்சிதானந்தன்

நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்
அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.

அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன. அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.
அதன் சிந்தனைகள் காட்டுப்
பாதைகளில் குதித்தோடுகின்றன.
நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.
என் நினைவில் காடுகள் உள்ளன"

-சச்சிதானந்தன்

வேள்பாரி

கூடு என்பது பறவைக்கான தங்கும் இடம். வானம்தான் வாழ்விடம்.

-வேள்பாரி

ராஜாராம்

போதும் என்பதை
சொல்லத் தெரிவதில்லை.
வேணும் என்பதும்
அது போலவே.

-ராஜாராம்

தொ.ப

சமூகத்தின் 90 விழுக்காடு மக்கள் தெய்வ நம்பிக்கையில் இருக்கும்போது..பெரியார் எந்த கடவுளை எதிர்த்தார் என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை அவர் எதிர்த்ததில்லை.

ராமரை செருப்பால் அடித்தார், விநாகர் சிலை உடைத்தாரே தவிர சிறு தெய்வங்களான அய்யனார் சிலையோ, அம்மன் வழிபாட்டையோ பெரியார் எப்போதும் எதிர்க்கவில்லை

-தொ.ப

கோ.வசந்தகுமாரன்

உதிர்ந்து கிடக்கும் பறவையின் இறகை மிதித்து விடாதீர்
ஒரு காலத்தில் அது உயரத்தில் இருந்தது

-கோ.வசந்தகுமாரன்

ராஜ கௌதமன்

தப்புகளை தராதரம் பிரிப்பதில் அறிவைவிட மனம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது

-ராஜ் கெளதமன்
(சிலுவைராஜ் சரித்திரம்)

ஆல்பர்ட் கோல்ஹா

எதிலும் நம்பிக்கையின்றி
சும்மா அமர்ந்திருக்கிறேன்,
என் சுவாசத்தைக் கவனித்தவாறு.
முப்பது வருடங்களுக்கு பிறகும்
அது
வெளியில் போகவும்
உள்ளே வரவுமாக
இருக்கிறது
0

ஆல்பர்ட் கோல்ஹோ
(ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு)

வேள்பாரி

இயற்கையை ஆள்வதற்காகத்தான் வெல்ல முயல்கிறோம். வெல்வதற்காகத்தான் அழிக்க முயல்கிறோம். அந்த அழிவுதான் அரசாட்சியின் சாட்சி.

-வேள்பாரி

ஜெயகாந்தன்

அழகின் அளவுகோல்

அந்த அளவுகோல் பெண்ணை பெற்றவர்க்கு ஒருவிதமும்,
பெண் தேடுவோர்க்கு ஒரு விதமாகவும் மாறுகிறது
-ஜெயகாந்தன்

வேள்பாரி

முளைத்தது விளையும்... விளைந்தது கனியும். அதற்கு எதிராக எதுவொன்றையும் பக்குவப்படுத்தி விளையவைக்கவும் முடியாது; பதப்படுத்தி கனியவைக்கவும் முடியாது. அதுதான் இயற்கை.

-வேள்பாரி

மார்ட்டின் லூதர் கிங்

” வாழ்க்கையில் தொடர்ந்து ஒலிப்பதும் , மிக அவசரமானதுமான  ஒரு கேள்வி :
நீ மற்றவர்களுக்காக என்ன செய்கிறாய்? “ 

-மார்ட்டின் லூதர் கிங்

அ.முத்துலிங்கம்

வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்"

- அ.முத்துலிங்கம்

கபிலன்

கூவிப் பூவிற்க முடியாமல்
முந்தானைத் தொட்டிலில்
தூங்கும் குழந்தை

-கபிலன்

ராஜாராம்

குழந்தைகளை கூட்டிக்கொண்டு
அம்மா வீட்டிற்கு போகிற மகள்கள்
மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.

-ராஜாராம்

சுஜாதா

வரலாற்றுநாவல் என்பது ‘கச்சணிந்த பெண்களும், திமிறும் குதிரைகளும், உறைவாள்களும், உறையூர் ஒற்றர்களும் அல்ல’. வரலாற்றுநாவல் என்பது திருப்பிச்சொல்லப்பட்ட வரலாறேதான்.

-சுஜாதா

02/02/2021

ராஜராம்

குழந்தைகளை கூட்டிக்கொண்டு
அம்மா வீட்டிற்கு போகிற மகள்கள்
மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.

-ராஜாராம்

14/01/2021

பராரிகள்

சரியான பாதையில் செல்வதில் என்ன இருக்கிறது. தொலைந்து போவதும், திசைமாறிப்போவதும் தான்
அழகான பயணம்

-பராரிகள்

ராஜாராம்

இழுத்துக் கொண்டு
ஓடிப்போன தங்கமுத்து மாமா
அத்தையை சாகக்கொடுத்த பிறகு
திரும்ப வந்து விட்டார்.

இப்ப அத்தை மட்டுமே
ஓடிப் போனவளாகவே
இருக்கிறாள்.

-ராஜாராம்

மனுஷ்யபுத்திரன்

உலகத்தில் மிகவும் 
சவாலானது 
நம்மைப் பற்றிய பிறரது கற்பனைகளோடு 
நாம் போராடுவது தான்

-மனுஷ்யபுத்திரன்

சுஜாதா

ஒரு டெலிபோன் உரையாடல்
நண்பர்: hello
மகள்: நான் சந்தியா பேசறேன். 2ம் வகுப்பு
நண்பர்: அப்பா இல்லையா
மகள்: ம்..ம்.. இல்லை
நண்பர்: வீட்டில வேற யாரு இருக்காங்க
மகள்: சேகர் இருக்கான். இருங்க போனை கொடுக்கிறேன்
நண்பர்: ஹலோ சேகர்.
சேகர்: ம்ம ல லா
(சேகர் 2வயது குழந்தை)

-சுஜாதா

படித்தது

ஒவ்வொரு ரயிலும் கலைத்து விட்டுத்தான் போகிறது.ஏதாவொரு ஸ்டேசனில் சொல்ல முடியாத சோகத்தோடு தனித்து அமர்ந்திருக்கும் யாரோ ஒருவரின் இறுக்கத்தை!-P

ராஜா சந்திரசேகர்

தொடர்பு எல்லைக்குள்
எல்லோரும் இருந்தார்கள்
தொடர்பற்று

-ராஜா சந்திரசேகர்

மகுடேசுவரன்

செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை

பஞ்சுக்குப்பை
மண்டிய தலை
அரிக்கிறது

பனியன் கம்பெனி உஷ்ணத்தில்
சன்னமாய்ச் சுரக்கும் வியர்வையில்
ரவிக்கைக் கையிடுக்கு ஊறி
உறுத்துகிறது

சமயத்தில்
கொண்டுவந்த பழஞ்சோறு
ஊசிப்போய் ஏமாற்றுகிறது

விடிய விடிய பணியிருக்கிறது
கண்ணுக்குள் மண்ணறுக்கிறது

துணி உதறி உதறி
கைகளிரண்டும்
கதறுகிறது

அவ்வப்போது
பூவாத்தா மடித்துத்தரும் வெற்றிலையில்
அன்பு தடவியிருக்கிறது

தங்கமணியக்கா
தன் குடும்பக் கதை சொன்னால்
எனக்கும் அழுகை வருகிறது

மேற்பார்வையிடும்
மெர்ச்சண்டைசரின் பார்வையில்
இன்பத்திற்கான யாசிப்பு
எப்பொழுதும் தென்படுகிறது

இடையிடையே நினைவும் வருகிறது
குடிகாரப் புருஷ முகம்
ஸ்கூல் போகும் சுப்பரமணி முகம்

– மகுடேசுவரன்

வேள்பாரி

முன்னேறுவதைவிடக் கடினமானது பின்தொடர்வது.

-வேள்பாரி

மா.சே.துங்

பழம் பெருமைகளை
பேசி கொண்டிருக்கும்...
ஒரு இனம் நிகழ் காலத்தையும், 
எதிர் காலத்தையும் தொலைக்கும்.

-மா சே துங்

சுப.வீ

'பொறி வழிச் செல்லாமல் நிற்றலே தவம்'

மனம் ஐம்பொறிகளின் வழியாகப் பல்வேறு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கும்.கண்வழி,செவி வழி, நாசிவழி போகிறது.இப்படிச் செல்லும் மனத்தை நிறுத்தலே தவம்.அதாவது கவனக்குவிப்பு எனலாம்.

-சுப.வீ

வேள்பாரி

மனிதன் கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனைக் குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.

-வேள்பாரி

க.நா.சு

தவறு செய்பவனைப் போல் நியாயமும் தத்துவமும் பேசுவதில் தீவிரமுள்ளவன் வேறு யாரையும் காண முடியாது

-க.நா.சு

ஓஷோ

Discussion is an Exchange Of Knowledge
Argument is an Exchange Of Ignorance

-Osho

வேள்பாரி

எல்லாம் கண்டறியாதவர்கள் சொல்லும் கதைகள். ஆளுக்கு ஒன்றாக இருக்கும்.

-வேள்பாரி

ஓஷோ

ஒரு பொருளை நீங்கள் தேடாவிட்டால் அது முன்னால் இருந்தாலும் உங்களுக்குத் தெரியாது.அதை உரசிக்கொண்டும் போகலாம். நீங்கள் இன்னது வேண்டும் என்று தேடினால்தான் அதை பார்க்க முடியும்

-ஓஷோ

வேள்பாரி

மனிதன் பாம்பைப் பற்றி பேசும் கணத்திலேயே அது அவனுக்குள்ளே வந்துவிடுகிறது.

-வேள்பாரி

01/01/2021

ஓஷோ

உச்சியில் இருக்க வேண்டும் என்றால் மென்மையாக இரு. பலவீனமாக இரு.ஒரு புல்லைப் போல மென்மையாக இரு. பெரிய மரத்தைப் போல பலமாக அல்ல

-ஓஷோ

சுப.வீ

தேவைக்குப் பொருள் வாங்குவதற்கும்..ஆசைக்குப் பொருள் வாங்குவதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.ஏனென்றால் தேவைகளை நிரப்ப முடியும்.ஆசைகளை நிரப்ப முடியாது

-சுப.வீ

அம்பேத்கர்

இந்தியா ஏற்றத் தாழ்வுகளின் தாயகம். பல தளங்கள் உள்ள கட்டிடம் போன்றது. அதற்கு நுழைவாயில் கிடையாது. படிக்கட்டுகளும் இல்லை. அந்தந்த தளத்தில் பிறந்தவன் சாகும் வரை வெளியேற முடியாமல் அந்த தளத்திலேயே இருக்க வேண்டியதுதான்."

- அம்பேத்கர்,

வேள்பாரி

எல்லோரும் அதிகம் புகழப்படும் ஓர் இடத்தில் பிழைகள் மலிந்திருக்கும். யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர்.

-வேள்பாரி

வேள்பாரி

இயற்கையின் அதிஅற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது.

-வேள்பாரி

வேள்பாரி

வள்ளல் தன்மை என்பது நிர்வாகத்திறமை  அல்ல. அது குழந்தையின் அழுகுரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பைப் போன்றது.

-வேள்பாரி

ஓஷோ

வாழ்வின் சிறிய தருணங்களையும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்..

ஏனெனில்..
தவறவிடப்பட்ட பேரின்பமாக அவை நாளை தெரியக்கூடும்..

- ஓஷோ

ரால்ஃப் வால்டோ எமர்சன்

நம் ஒவ்வொருவருக்குள்ளும் வழிகாட்டுதல் உள்ளது. நாம் உன்னிப்பாகக் காதுகொடுத்துக் கேட்டால்.. சரியான வார்த்தை நம் காதுகளில் விழும்

-ரால்ஃப் வால்டோ எமர்சன்

ஜெயகாந்தன்

நம்மிடமுள்ள மாபெரும் தீயகுணம்,
நாம் எதையுமே கோயிலாக்கி
தெய்வமாக்கிவிடுவது..
எனவே நாம் வழிபடுவதில் சமர்த்தர்கள்,வளர்வதில் இல்லை
-ஜெயகாந்தன்

பேயோன்

மனைவி தரப்பைக் கேட்கையில் மனைவிக்கு ஆதரவாகிறேன்
தாயின் தரப்பைக் கேட்கையில்
தாய்க்கு ஆதரவாகிறேன்
என் தரப்பென எதுவும் இல்லை
எனக்கு யாரும் ஆதரவில்லை

-பேயோன்

வேள்பாரி

குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும் போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்.

-வேள்பாரி

சுஜாதா

_விசேஷங்களில்_
_அழகான இளம்_
_பெண்களைக் கண்டால்_

`` _அடடா அவசரப்பட்டுட்டோமே_ ``
_என்று நினைப்பது போய்…_

_சித்தி பையன் பாலாவுக்கு_
_இந்தப் பொண்ண கேக்கலாமே_
_எனத் தோன்றுகிறதா.??_

            ~ *÷÷÷÷*~

_சண்டை போட்ட_
_உறவினர்களின் மேல்_

_காழ்ப்பணர்ச்சி விகிதம்_
_கரைய ஆரமபித்திருக்கிறதா???_

             ~ *÷÷÷÷÷* ~

_உறவுகளில்_
_சம வயதினர்_
_அமெரிக்காவில்_
_செட்டில் ஆனால்_

_பொறாமைப்படுவது நின்று_

_நம்ம பையனுக்கு_
_பின்னாடி_ _பிரச்சினையில்லை…..,_
_REFER பண்ண_ _ஆளிருக்கு_
_என மனது_ _சாந்தப்படுகிறதா. ??_

             ~ *÷÷÷÷* ~

_மனைவியை_
_கவனிக்க_ _தவறிவிட்டதாக_
_உள் மனது ஒப்பாரி இடுகிறதா??_

              ~ *÷÷÷÷* ~

_திரைப்படங்களின்_
_முதல் நாள் முதல் காட்சி_
_பார்க்கும் எண்ணம் போய்விட்டதா.??_

            ~ *÷÷÷÷* ~

_வெள்ளை முடி கவலை_
_அப்பிக் கொள்ள_
_ஆரம்பித்துவிட்டதா???_

             ~ *÷÷÷÷* ~

_மியூசிக் சேனல் பார்ப்பது_
_குறைந்து_

_செய்தி சேனல் பார்ப்பது_
_அதிகரித்திருக்கிறதா??_

            ~ *÷÷÷÷* ~

_ஞாயிற்றுக்கிழமை_
_யார் வற்புறுத்தலும்_ _இன்றி_

_காலையில் WALKING_
_போகிறீர்களா??._

           ~ *÷÷÷÷* ~

_இன்னிக்கு அமாவாசை,_
_ஏகாதசி,_
_சஷ்டின்னு_
_ஏதாச்சும்_ _இருக்கான்னு_

_மனசு பார்க்க வைக்கிறதா?._

              ~ *÷÷÷÷*~

_பாலிஸி DUE DATE_
_பாக்க_
_ஆரம்பித்து விட்டீர்களா??_

               ~ *÷÷÷÷*~

_ஒரு மருந்துக்கடைக்காரர்,_
_ஒரு சிறு உணவக முதலாளியின்_
_நட்பு_
_நிச்சயம்_ _ஏற்பட்டிருக்கிறதா??_

               ~ *÷÷÷÷* ~

_கவலையை மறக்க_
_காமெடி சானல்_ _பார்ப்பது_
_சிறந்த சாய்ஸ்_
_எனத்தோன்றுகிறதா??._

                ~ *÷÷÷÷* ~

_வண்ணத்திரை, சினிக்கூத்து_
_வாங்கிய கடைகளில்_

_சக்தி விகடனும்,_ 
_நாணயம் விகடனும்_
_வாங்க வைக்கிறதா??._

                 ~ *÷÷÷÷* ~

_பல் விளக்க,_
_சேவிங் செய்ய,_
_குளிக்க_
_வழக்கத்தை விட_

_அதிக நேரம் ஆகிறதா?_

             ~ *÷÷÷÷* ~

_பிள்ளைகளின் ஆசை,_
_சோம்பல் மீதான_ _கோபம்_
_வடிந்து_

_``இப்போ அனுபவிக்காட்டி_
_எப்போ, ……_
_போய்ட்டு போகுது ``_

_என்ற எண்ணம் வருகிறதா??._

            ~ *÷÷÷÷* ~

_அலுவலகத்தில்_
_சனி,ஞாயிறு அன்று_
_நண்பர்கள்_
_ஏதாவது அவுட்டிங்_ _பிளான்_
_செய்தால்_

_தகுந்த காரணமின்றி_
_ஜகா வாங்க_ _வைக்கிறதா??._

            ~ *÷÷÷÷* ~

_சாலை கடக்க_
_பயப்படத் தொடங்கி_

_PEAK HOURS_
_அவாய்ட் பண்ணினால் என்ன_

_என்று மனைவியடம்_
_தர்க்கம் பண்ண தொடங்கி விட்டீர்களா??_

            ~ *÷÷÷÷* ~

_பேருந்து வழக்கமாக_
_வரும் நேரத்திற்கு_

_ஒரு நிமிடம் தாமதமாய் போய்_ _ஓடிச்சென்று ஏறுவது நின்று,_

_ஐந்து நிமிடம் முன்னரே_
_பஸ்ஸ்டாண்டில் காக்க முடிகிறதா??_

             ~ *÷÷÷÷* ~

_என்னால் எல்லாம் முடியும்,_
_யார் தயவும் தேவையில்லை_
_என்ற எண்ணம் போய்„_
_உலக மக்கள்_ _அனைவரின்_
_கூட்டு உழைப்பால்_ _தான்_
_நமக்கு இந்த_ _வாழ்க்கை_ 
_சாத்தியமாயிற்று என்ற எண்ணம்_
 _வருகிறதா??_

             ~ *÷÷÷÷* ~

_அப்ப நீங்க_
*"UNCLE"* / *AUNTY*
_ஆகிவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இவைதான்…!_

- #சுஜாதா. 

😃😃😛
ஐய்யய்யோ 
எல்லாமே இருக்கிற  மாதிரி தோணுதா?