"முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் யூதனல்ல.
பிறகு கம்யூனிஸ்ட்களை தேடி வந்தார்கள்.
நான் குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் ஓர் கம்யூனிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழற்சங்கத்தினரை தேடி வந்தார்கள்.
நான் குரல் கொடுக்கவில்லை.
ஏனென்றால் நான் தொழிற் சங்கத்தினன் அல்ல.
பின்னர் அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்.
அப்போது....
அங்கு ஒருவரும் மிஞ்சியிருக்கவில்லை
எனக்காக குரல் கொடுக்க. "
-மார்ட்டின் நீம்லர்