13/04/2021

நர்சிம்

என்னை மறந்திருப்பாயோ
என்கிற நினைப்பே
போதுமானதாயிருக்கிறது
உன்னையென்
நினைவிலேயே வைத்திருப்பதற்கு

-நர்சிம்

ராஜா சந்திரசேகர்

உண்மையை காப்பாற்ற பொய் சொன்னேன்,பொய்யை காப்பாற்ற உண்மையை சொன்னேன், என்னை காப்பற்ற இரண்டையும் சொன்னேன்

-ராஜாசந்திரசேகர்

செல்வராஜ் ஜெகதீசன்

எழுத்தில் இருப்பதை
எடுத்துக் கொடுக்கும்
பணிதான்
என்றாலும்

இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி
இருக்கலாம்
இந்த
மருந்துக்கடை
விற்பன்னர்கள்

-செல்வராஜ் ஜெகதீசன்

ஜீவிதன்

தனித்துப் பறக்கும்
பறவையை கண்டால்
தவிப்பாய் இருக்கிறது

கொடியில் உலரும்
புடைவைகளிலிருந்து உயிரை
நுகர்ந்து கொள்ளலாம்
போலிருக்கிறது

நட்சத்திரங்களுக்கிடையில் கோடு கிழித்து விளையாடும்
மனம் இன்னும் மாறாதிருக்கிறது

மொத்தத்தில் சிறிதளவேனும்
மனிதனாயிருப்பதில்
மிகுந்த சந்தோஷமிருக்கிறது

-ஜீவிதன்

காந்தி

உங்கள் கோபத்தை
உங்களின் மெளனத்தால்
வெளிப்படுத்துங்கள்

-காந்தி

வேள்பாரி

பொறாமையும் வெறுப்பும் மனித மனத்தைக் குறைந்த அளவே இயக்கும் ஆற்றல் கொண்டவை. பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது.

-வேள்பாரி

ஜி சிவக்குமார்

சிறப்பு தரிசனத்தில் நான்
வெகுநேரம் காத்திருக்க
தர்ம தரிசனத்தில் நிற்பவரிடம்
பேசிக் கொண்டிருந்தார்
கடவுள்

-ஜி.சிவக்குமார்

வின்சென்ட் சர்ச்சில்

நாளைக்கு,அடுத்த வாரம், அடுத்த மாதம்,அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே சொல்ல வேண்டும். பின் அதெல்லாம் ஏன் நடக்கவில்லை என்பதை விளக்கத் தெரிய வேண்டும்

-அரசியல் செய்வதற்கான அடிப்படை இலக்கணமாய் வின்ஸ்டன்ட் சர்ச்சில் சொன்னது

பேயோன்

திட்டுபவர்கள் 3வகை: நிஜமாக திட்டுபவர்கள்; கும்பலோடு திட்டுபவர்கள்; திட்ட ஓரிரு காரணமாவது கிடைக்கிறதே என திட்டுபவர்கள்

-பேயோன்

ஆதவன் தீட்சண்யா

ஆனைமலையில் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.
... நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சி குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்...

ஆதவன் தீட்சண்யா.

மார்க் ட்வைன்

பொய்கள் மூன்று வகைப்படும் 
1 பொய்
2 பச்சைப் பொய்
3 புள்ளி விபரங்கள்

-மார்க் ட்வைன்

மனுஷ்யபுத்திரன்

தானும் ஒரு உதிரும் இலைதான் என
அறிந்துகொள்ளும் நாள்வரை
இலை நினைத்துக்கொண்டிருந்தது
தான்தான் மரமென..

அப்படியெனில்
மரம் என்பது என்ன?
அது ஆயிரம் ஆயிரம்
உதிரும் இலைகளின்
துயரக் கூட்டம்...

-மனுஷ்யபுத்திரன்

ஓஷோ

உன்னை இழந்தால் அடைவாய்
உன்னை பற்றிக் கொண்டால் இழப்பாய்

-ஓஷோ

சு.வெங்குட்டவன்

கையில் புல்லாங்குழல் இல்லை. தலைமீது தங்கக்கிரீடம் இல்லை. அதன் மீதிலே மயிற்பீலியுமில்லை. பதிலாக, விரலிடுக்கினில்  பத்தாம்நம்பர் பீடி புகைந்துகொண்டிருந்தது.  கை பற்றும் சமீபத்தில் ஒன்யூஸ் டம்ளரும் உள்நிறைந்த மானிட்டர் பிராந்தியும் இருந்தது.

ஆனாலும் அவனொரு கிருஷ்ணன். பிறகு என் கிருஷ்ணன் கூறினான். 'உனக்கு வேண்டுமானால் இந்த வாழ்வு சலித்துப் போயிருக்கலாம். உனக்கு வேண்டுமானால் இந்த உலகம் வெறுத்துப் போயிருக்கலாம். உனக்கு வேண்டுமானால் இந்த இருப்பு அர்த்தமற்றுப் போயிருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் எனக்கொன்றுமில்லை. 

நான் வரும் வழியில் ஒரு மாடு கன்று ஈன்றுகொண்டிருந்தது. ஒரு பன்றிக்குட்டி அதன் தாய்மடியில் அவ்வளவு ஆனந்தமாக பாலூட்டியபடியிருந்தது. வேலிக்காத்தானின் விதையொன்று அவ்வளவு பச்சையாக முளைத்திருந்தது. 

அந்த மாடும் கன்றும் இயற்கையின் படைப்பு. அந்தப் பன்றிக்குட்டியும் அதன் தாய்மடியும் இயற்கையின் படைப்பு. வேலிக்காத்தான் விதையும்,  அதன் முளைப்பும் பச்சையும் இயற்கையின் படைப்பு. 

ஏ... வெறுத்துப் போனவனே... ஏ.. சலித்துப் போனவனே.. உனக்கு வேண்டுமானால் இந்த இருப்பு வெறுத்துப் போயிருக்கலாம். உனக்கு வேண்டுமானால் இந்த வாழ்வு சலித்துப் போயிருக்கலாம். ஆனால், உனைப் படைத்த இயற்கைக்கு  சலிப்பில்லை. சலிப்பென்பதேயில்லை. உனைப் படைத்த இயற்கைக்கு வெறுப்பில்லை. வெறுப்பென்பதேயில்லை. அது தொடர்ந்து படைத்துக்கொண்டுதான் இருக்கிறது... மாட்டுக்கன்றை. பன்றிக்குட்டியை... வேலிக்காத்தானை... மேலும்மேலும் படைத்தபடியேதான் இருக்கவும்போகிறது மாட்டுக்கன்றை... பன்றிக்குட்டியை... வேலிக்காத்தானை...

ஓ.. உதறிவிடத் துடிப்பவனே... ஓ.. விலகிச்செல்லத் துடிப்பவனே...   உண்மையை உணர்ந்துகொள். உதறிவிட்டால் விலகிவிடும் என்பதைப் போன்ற அறியாமை வேறெதுவுமில்லை.

மேலுமொரு உண்மையையும் உணர்ந்துகொள். இதுவே ஞானம். இதுவே மோட்சம். இதுவே  வழி. இதுவே தடம். இதுவே பாதை.

சந்தோசமாயிருப்பதை தவிர வேறு வழியில்லை.'

_சு.வெங்குட்டவன்

பா.சிங்காரம்

"சாட்டை அவர்கள் கையில் இருக்கும் வரை நாம் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும்" 

- பா.சிங்காரம்

ஐன்ஸ்டீன்

வெளிச்சத்தின் வேகத்தில் செல்பவர்கள் வெளிச்சமாகி விடுவார்கள்

-ஐன்ஸ்டீன்

ராஜா சந்திரசேகர்

உண்மையை காப்பாற்ற பொய் சொன்னேன்,பொய்யை காப்பாற்ற உண்மையை சொன்னேன், என்னை காப்பற்ற இரண்டையும் சொன்னேன்

-ராஜாசந்திரசேகர்

ராஜா சந்திரசேகர்

தேடிக்கொண்டே இரு
கிடைக்கலாம்
ஆனால் ஒன்னு
உன்னைத்
தொலைந்து போகாமல்
பார்த்துக்கொள்

-ராஜா சந்திரசேகர்

ரூமி

யார் உன் இருப்புக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுடன் இரு 

ரூமி

வேள்பாரி

சிந்தனையின் வழியே அறிய எவ்வளவு முயன்றாலும் பிடிபடாத காதல், சின்ன தொடுதலில் எல்லாவற்றையும் அறியச் செய்துவிடுகிறது.

-வேள்பாரி

வைத்தீஸ்வரன்

அடிக்கடி 
வெயிலுக்குள் நகர்ந்துவிடும்
எங்கள் வீட்டை 
என்ன செய்வதென்று 
தெரியவில்லை.

-வைத்தீஸ்வரன்

லஷ்மி சரவணகுமார்

வாழ்க்கை பல சமங்களில்
பெருந்துரோகங்களை மறக்கச் செய்து விடுகிற அளவிற்கு சின்னச்சின்ன ஏமாற்றங்களை மறக்கச் செய்வதில்லை

-லஷ்மி சரவணகுமார்

மார்க்ட்வைன்

ஒரு விஷயத்தில் சந்தேகம் இருந்தால் உண்மையைச் சொல்லிவிடு

-மார்க் ட்வைன்

கண்டாரதித்தன்

சமயத்தில் பெருத்த
அவமானத்தை
ஏற்பதற்கு குற்றத்தை
நீ செய்திருக்க வேண்டிய
அவசியமில்லை.

-கண்டாரதித்தன்

முகுந்த் நாகராஜன்

பொம்மை வாங்க இயலாத ஒருவன்
தன் குழந்தைக்குச் சொல்ல ஒரு
நாய்க் கதையை உருவாக்கிக் கொண்டு
நகர்கிறான் கடையை விட்டு

-முகுந்த் நாகராஜன்

வண்ணதாசன்

"சந்தேகத்தின் பதற்றத்துடன் வாழ்ந்து சாவதை விட, சந்தேகப்படாமையின் அசட்டு நிம்மதியில் ஒவ்வொரு கட்டமாகக் கடந்துபோய்விடுவது நல்லது"

-வண்ணதாசன்

வேள்பாரி

பூவோ, மதுவோ எல்லாம் நினைவை உதிரச்செய்யும் மயக்கங்களைத்தான் உருவாக்கும். காதல் மட்டும்தான் மயங்க மயங்க நினைவைச் செழிக்கச் செய்யும்.

-வேள்பாரி

லி போ

பறவைகள் அனைத்தும் பறந்து மறைந்தன;
ஓர் ஒற்றை மேகம் மிதக்கிறது.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதில்
நாங்கள் சலிப்பதே இல்லை-
அந்த மலையும் நானும்

-லி போ

வண்ணதாசன்

ஞாபகங்களைத்

திறக்கிற சாவிகளை

மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள்

-வண்ணதாசன்

சுஜாதா

மீண்டும் பிறந்தால் யாராக பிறக்க ஆசை? 'குழந்தையாக'
 -சுஜாதா

நர்சிம்

அருந்தப்படாத தேநீரின்
சுருக்கங்கள் விழுந்த மேற்பரப்பில்
உறைந்து போயிருக்கலாம்
ஏதேனுமொரு
சோகமோ
கோபமோ

-நர்சிம்

வேள்பாரி

பார்க்காத பகுதியில்தான் உண்மையின் முழுமையிருக்கிறது.

-வேள்பாரி

ஜெயந்தன்

மக்கள் யாருக்கு வழிவிடுகிறார்கள் என்றால், யார் அவர்களை இடித்து இழுத்து, பின்னே தள்ளி முன்னேறிச் செல்கிறார்களோ அவர்களுக்கு என்று யாரோ சொன்னது மிகவும் சரிதான். உலகம் தன்னை அதட்டத் தெரிந்தவர்களின் ஆணைக்குத் தான் அடிப்பணிகிறது. அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது. நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது.

#ஜெயந்தன்

அபாய அறிவிப்பு

அபாய அறிவிப்பு

கிளைக்குக் கிளை தாவும்
குரங்குகளே....

தந்திரம் கற்றுணர்ந்த 
குள்ளநரிகளே.....

கம்பீரமாக உலாவரும்
சிங்கம் புலிகளே....

காட்டுக்குத் 
தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது...

கவனமாக இருங்கள்
ஓட்டுக்கேட்டு 
வேடன் 
எப்போது வேண்டுமானாலும்
வரலாம்!

நன்றி :ஆனந்த விகடன்

வேள்பாரி

இயல்பாய் அமைவதைக்கூட இயல்பானதென ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தோடு இயங்கும் ஆற்றல் காலத்துக்கு உண்டு.

-வேள்பாரி

பிரான்சிஸ் கிருபா

"துயருருவது பெரும் அவஸ்தை. அதை அடுத்தவரிடம் எடுத்துக் கூறுவது அதிலும் மகா அவஸ்தை.." 

 -பிரான்சிஸ் கிருபா

ப.பி

ஒவ்வொரு துறையினரும் தத்தம் பணிகளைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்த வேளையில் ஒருவன் பேசாமல் மலம் அள்ளிக் கொண்டிருந்தான்.

-படித்தது

யுகபாரதி

முன்முடிவு
*******
முழம்போட்ட மல்லிகையை நீளம்விட்டு நறுக்கும் பூக்காரி
நல்லவளாகத் தெரிகிறாள்

உணவு மேசையில் கேட்காமல் உபரியாய்ப் பரிமாறும் சிப்பந்தி
நல்லவனாகத் தெரிகிறான்

எதிர்ப்படுகையில் சிரிப்பவர்களும்
எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிறவர்களும்
நல்லவர்களாகத் தெரிகிறார்கள்

நாமும் இன்னொருவருக்கு நல்லவராகத் தெரிய விரும்புகிறோம்

நல்லது என்பது தெரிவதில் இல்லை
தெரியாததிலும் உண்டு என்பது நமக்குத் தெரியாது.

- யுகபாரதி

எஸ் ரா

இந்த உலகத்தைப் பீடித்துள்ள பெரிய நோய் பாசாங்குதான். அந்த நோய் மற்றவர்களிடம் நாம் அன்பாக இருப்பதுபோல் நடிக்கச்செய்கிறது. மனதில் அன்பாக இருப்பதுபோல் நம்பவைக்கிறது. ஆனால் அதன் அடியில் சுயநலம் ஒளிந்திருக்கிறது. அது யாரையும் எப்போதும் விட்டுக்கொடுக்கவும் காட்டிக்கொடுக்கவும் ஏமாற்றவும் தயாராக இருக்கிறது.!

எஸ்.ரா. (துயில்)

கவிதைமொழியன்

அப்பாக்களின் தேவதைகள்..

விஷேச வீடுகளில்,,
"அம்மா பிடிக்குமா
அப்பா பிடிக்குமா.."
எனக்கேட்டு
யாரேனும்
கன்னத்தை
கிள்ளினால்,,,
அம்மாக்களின்
இடுப்பில்
அமர்ந்திருந்தாலும்..
அப்பாக்களை
கை காட்டுவார்கள்..

காய்ச்சல்
வந்து,
குணமாகிவிட்ட
விடுமுறை
நாளில்,,
பொம்மையை
பாப்பாவாக்கி..
பொம்மைக்கு
அப்பாவாக
நடந்து
கொள்வார்கள்,,

அம்மாக்கள்
வீட்டிலிருந்தாலும்,,
அப்பாக்களிடம்
முதன்முதலில்
காட்டுவதற்காக,,
கோலப்போட்டியில்
வாங்கி வந்த
சில்வர் தட்டை,,
புத்தகப்பைக்குள்
ஒளித்து
வைப்பார்கள்...

அம்மாக்களும்
தம்பிகளும்
தூங்கிவிட்ட
இரவில்...
அப்பாக்களின்
வண்டிச்சத்தம்
கேட்டதும்
ஓடிவந்து
கதவு
திறப்பார்கள்...

பொட்டானிகல் கார்டனுக்கு
சுற்றுலா சென்றுவரும்
பேருந்தில்,
அத்தனை
தோழிகளும்
விதவிதமாய்
ரோஜா நாத்தை
பற்றியபடி
அமர்ந்திருக்க,,
அவர்கள் மட்டும்
அப்பாவிற்கு
பொருத்தமான
ஸ்வெட்டரோடு
அமர்ந்திருப்பார்கள்..,

ஐந்தாறு
அழகான
ஆண்களின்,
காதல்
கடிதங்களை
புறக்கணித்திருந்தாலும்..
அப்பாக்கள்
வீட்டிற்கு
அழைத்துவரும்,
சுமாரான
மாப்பிள்ளையை
வெட்கத்தோடு
பார்ப்பார்கள்..

சமையல்
குறிப்பிற்காக
அம்மாக்களின்
அலைபேசிக்கு
அழைத்துவிட்டு,,,
அப்பாக்களது
நாளொன்றின்
சிகரெட்
எண்ணிக்கை
குறித்து,,
விசாரித்துக்கொண்டு
இருப்பார்கள்..

பிரசவ அறையில்,,
இடுப்பு வலியை
மறந்து,,
அந்த
புதிய சிசுவிற்கு
அப்பாவின்
நாசி
அப்படியே
அமைந்திருப்பதை
ரசித்துக்கொண்டு
இருப்பார்கள்,,,

அண்ணன்கள்
ஆகவேண்டிய வேலையை
பார்த்திருக்க,,
மனைவிகள்
புகைப்படத்தில்
சிரித்திருக்க,,
பிரேதமாகிவிட்ட
அப்பாக்களின்
அருகிலமர்ந்து
நிஜமாய்
அழுதுகொண்டு
இருப்பார்கள்...

அப்பாக்களின் தேவதைகள்..!

_கவிதை மொழியன்,

அருணா

ஒருக்களித்து படுத்தவளின் விசும்பல்கள்
முதுகில் பிரதிபலிக்கிறது!

-அருணா

ஜெயமோகன்

தன்மேல் சாய்ந்து அழும் பெண்தான் ஆணை முழு ஆண்மகனாக உணரவைக்கிறாள்.
 
-ஜெயமோகன்

நைமி

இங்கே சொற்கள் அல்ல முக்கியம்,
சொற்களால் என்ன அதிர்வு பிறக்கிறது என்பதே முக்கியம்!

- நைமி

நைமி

அன்பை
அளக்க முடிவு செய்தால்.. 
அது
நழுவிச் சென்றுவிடும்...

 -நைமி

நா.முத்துக்குமார்

அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்.தீயை படித்து தெரிந்து கொள்வதை விட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும்.

-நா.முத்துக்குமார்

ஐம்பொறி

ஐம்பொறி

*மூக்கின் வடிவம் நுரையீரலை ஒத்திருக்கிறது. நுரையீரல் மாறுபாட்டை மூக்கு பிரதிபலிக்கும்

*கண்களின் வடிவம் கல்லீரல் போல் இருக்கும்.மஞ்சள் காமாலை,மதுபழக்க அறிகுறிகளை கண்களே வெளிப்படுத்தும்

*கூம்பு வடிவ நாக்கு இதயம் போல.இதயத்தின் சக்தி மாறுபாட்டை வெளிப்படுத்தும்.

*மண்ணீரலோடு ஒத்திருப்பது உதடு.உதடு வறண்டிருந்தால் மண்ணீரலில் குளிர்ச்சி குறைந்திருப்பது எனப் பொருள்.உதட்டில் புண் இருந்தால் வயிற்றில் புண் இருக்கும்

*காதுகள் சிறுநீரகம் போல. காதுகேட்கும் திறன் குறைந்தால் சிறுநீரகம் பாதித்ததாக அறிகுறி

-பாறப்புற இராதாகிருஷ்ணன்

பாரதிதம்பி

" எல்லாப் பெண்களுக்குள்ளும் சொல்ல முடியாத கதைகளும், சொல்லித் தீராத கதைகளும் ஏராளம் நிரம்பிக் கிடக்கின்றன. அதைப் புரிந்து கொள்கிற, பகிர அனுமதிக்கிற ஆண்களை அவர்கள் கொண்டாடுகின்றனர்...

புரிதலும், பகிர்தலுமே பெண்ணின் ஆதித் தேவை "

- பாரதி தம்பி

நா.முத்துக்குமார்

அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்.தீயை படித்து தெரிந்து கொள்வதை விட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும்.

-நா.முத்துக்குமார்

சாக்ரடீஸ்

இன்பங்களில் தலையாயது அறிதலின் இன்பம்

-சாக்ரடீஸ்

வாலி

தமிழைத்
தான் வளர்ப்பதாக
சிலர் தம்பட்டம் அடிக்கிறார்கள்
இவர்கள்
வளர்ப்பதற்கும்
வழிப்பதற்கும்
தமிழென்ன
தாடியா?மீசையா?

-வாலி

நர்சிம்

ஒரு நிறப்பிரிகை போலத்தான்
விலகிப்போனாய் நீ
என் எல்லா வண்ணங்களையும்
எடுத்துக் கொண்டு

-நர்சிம்

வேள்பாரி

மன ஈடுபாடின்றிச் சொல்லும் ஒற்றைச் சொல்கூட ஒருவரைக் காட்டிக் கொடுக்கும்; இன்னொருவரால் கண்டறியப்படும்.

-வேள்பாரி

சூரியகுமார்

பெண் குழந்தை
பிறந்திருக்கிறதென
சந்தோஷமாக இனிப்பு
வழங்குகிறார்கள்
பெண் குழந்தையை
பெற்றவர்கள்..

சரி பரவாயில்லை
பெண் குழந்தைதான்
நல்லது என
ஆறுதல் சொல்கிறார்கள்
இனிப்பு எடுத்துக்கொள்பவர்கள்

-சூரியகுமார்

ஓஷோ

இருந்ததே தெரியாமல் இருந்துவிட்டுப் போனவர்கள்..அவர்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு நல்லவர்களாக இருந்தவர்கள்

-ஓஷோ

ப.பி

கதைப் புத்தகத்தின்
பக்கத்தில்
புலி துரத்திக் கொண்டோடும்
மானுக்குக் 
கூடுதலாக இரண்டு
கால்கள் வரைகிறது
குழந்தை

-படித்தது

நா.பார்த்தசாரதி

எங்கே நம்மை அடக்கியாள விரும்புகிறார்களோ அங்கே நாம் சுதந்திரமாக இருக்க முயல வேண்டும்.

எங்கே நம்மைச் சுதந்திரமாக விட்டு விடுகிறார்களோ அங்கே நாம் மிகவும் அடக்கமாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டும்

-நா.பார்த்தசாரதி

நாணற்காடன்

என் பார்வையை
இழுத்துச் செல்கிறது                                             சுவரேறும் கட்டெறும்பு
- நாணற்காடன்

பிரபஞ்சன்

எழுத்தை தொழிலாகப் பார்த்தால் சிக்கல் இல்லை. எழுத்தை அறமாகப் பார்த்தால் சிக்கல் தான்

-பிரபஞ்சன்

ஓஷோ

நான் ஒன்றைச் சொல்லும் போது அதை வரவேற்று நீங்கள் கைதட்டுகிறீர்கள் என்றால், நான் புதிதாகச் சொல்கிறேன் என்று அர்த்தம் அல்ல,
உங்களுக்குத் தெரிந்ததையே நானும் சொல்கிறேன் என்று அர்த்தம்

-ஓஷோ

அ.முத்துலிங்கம்

சண்டை என்று வந்தால் இறுதியில் சரணடையும் பெருமை ஆண்களுக்குத் தான்

-அ.முத்துலிங்கம்

ஓஷோ

இல்லாத ஒன்றைப் பற்றியதுதான் நம்பிக்கை

-ஓஷோ

வேள்பாரி

நெருப்பைவிட வேகமாகப் பரவக் கூடியது கதை. நெருப்பைவிட அதிகமாக சுடக்கூடியது கதை. நெருப்பைக் கொண்டும் எரிக்க முடியாதது கதை.

-வேள்பாரி

மு.மேத்தா

விளம்பரங்களுக்குத் தான்
வெளிச்சம் தேவை
வெளிச்சத்திற்கு
விளம்பரம் தேவை இல்லை

-மு.மேத்தா

கோ.வசந்தகுமாரன்

அரசாங்கம் செய்யாததை
நான் செய்திருக்கிறேன்
வரிகளைக் குறைத்திருக்கிறேன்
கவிதைகளில்

-கோ.வசந்தகுமாரன்

கு.விநாயகமூர்த்தி

இயலாதவன்
குழந்தைகளிருக்கிற வீடுகளில்
இந்த
வெறுங்கைகளை வைத்துக் கொண்டு
நுழையாமலே இருந்திருக்கலாம்

-கு.விநாயகமூர்த்தி

வேள்பாரி

அன்பு, உறவு, ஆசை, மகிழ்வு என உணர்வுகளால் நெருங்க முடியாததாக இருக்க வேண்டும் அரசாட்சி. அதன் விதிகள் எதன் பொருட்டும் கீழிறங்கக் கூடாது.

-வேள்பாரி

யுகபாரதி

உடன்போக்கு
*******
யார் யாரோடு இருக்கிறார்கள் என்பதுதான் பெரும் விவாதம்
அவரோடு இருந்தவர் இவரோடும்
இவரோடு இருந்தவர் அவரோடும்
போய்விட்டதாக புலம்பல்
யாரும் யாரோடும் வெகுநாள் இருக்க விரும்பாமல்தான் இருக்கிறார்கள்
யாரோடாவது இருப்பதில் எந்தத் தவறுமில்லை
இல்லாமல் போவதுதான் துக்கம்.

- யுகபாரதி

மகுடேசுவரன்

எல்லாரும் என்னை 
மறந்துவிட வேண்டும். 

அதன்பின் உங்கள்முன் 
நினைவுகூர முடியாத 
நீங்கா நினைவுபோல் 
தோன்றுவேன் !

-மகுடேசுவரன்

ஜானகிராமன்

யாரென்று தெரியாமலும்
கையசைத்து
வழியனுப்புகின்றன குழந்தைகள்

எல்லாம் தெரிந்து
இறுக்கமாக அமர்ந்திருக்கின்றனர்
சக பயணிகள்

அன்பைப் பகிர்ந்துகொள்ள
குழந்தைகளுக்கு மட்டும்தான்
காரணங்கள் தேவைப்படுவதில்லை

-ஜானகிராமன்

கல்யாண்ஜி

தண்ணீர்த் தொட்டியில்
செத்துக் கிடந்த
காக்கைக் குஞ்சுகளுக்கு
மனதார வருத்தப் பட்டாயிற்று.
வாசலில் நிற்கும்
வயசாளிக்கு …..
“ஒன்றுமில்லை” என்று
அனுப்பிவிடலாம்.
இன்றைக்கு …..
என்னால் முடிந்தது இவ்வளவே.

 - கல்யாண்ஜி

வைக்கம் முகமது பஷீர்

இந்த வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சுகமாக இருக்கணும்னா சொந்தமான கருத்து எதுவும் நமக்கு இருக்கக்கூடாது

-வைக்கம் முகம்மது பஷீர்

பாடலேர்

எல்லா மாறுதல்களிலும் ஒரே சமயத்தில் வெறுக்கத்தக்கதும் விரும்பத்தக்கதும் இருக்கும்

-பாடலேர்

தஞ்சாவூர் கவிராயர்

பரிமாறியவுடன் கை வைத்துவிடாதிர் இலையில் முதலில் பரிமாறிய கைகளைப்பார்த்து நன்றி சொல்லுங்கள் அது வீடானாலும் ஓட்டலானாலும் சரி... (தஞ்சாவூர் கவிராயர்)

பிஸ்மார்க்

ஒரு விஷயத்தை கொள்கை அளவில்
ஒப்புக்கொள்வதாக அரசு சொல்லிற்றென்றால் அதை செயல்படுத்தப் போவதில்லை என்று அர்த்தம்
-பிஸ்மார்க்

பிரபஞ்சன்

மனிதர்களை வேடிக்கைப் பார்ப்பதிலும் சுவாரஸ்யமானது எனக்கு வேறு ஒன்றும் இல்லை

-பிரபஞ்சன்

வேள்பாரி

வணிகம் சூழ்ச்சியை அடி உரமாகக் கொண்டது. அது கொடுத்துவாங்கும் இரு கைகளுக்குள்ளும் குருதியைப் போல் ஓடுவது.

-வேள்பாரி

விக்ரமாதித்யன்

ஊருக்குள்!

கோவிலில் தெய்வம்
சுடுகாட்டில் பிசாசுகள்
ஊருக்குள்
இரண்டும் கெட்டான்கள்

-விக்ரமாதித்யன்

சுஜாதா

ஒரு மனிதனை ஆன்மிகம் எப்போது பற்றிக்கொள்கிறது?

நிறையப் பணமும் நிறைய பயமும் வரும்போது

-சுஜாதா

மனுஷ்யபுத்திரன்

யாரும் தேற்ற வரமாட்டார்கள் என்பதற்காக
அழாமலே இருக்க முடியுமா

நனைகிறவர்கள் இல்லாத இடத்திலும்
பெய்கிறது மழை

- மனுஷ்ய புத்திரன்

வேள்பாரி

அடங்காத வெறியோடு பொறுமையைக் கைக்கொள்வது மட்டுமே மனம் பக்குவப்பட்டதன் உச்ச அடையாளம்.

-வேள்பாரி

கண்மணி குணசேகரன்

கருப்பசாமியோ
கசாப்புக் கடையோ
வெட்டும் கத்திகள்தான் வேறுபாடு
எப்போதுமே
ஆடுகள்
பலியாடுகள்தான்.
 ----கண்மணி குணசேகரன்

எம் ஆர் ராதா

உண்மையான கலைஞன் எப்படி இருக்கனும்?

ஆடியன்சுக்கு லஞ்சம் தருபவனாய் இருக்க கூடாது. அறிவை தருபவனாய் இருக்கனும்

#எம்.ஆர்.ராதா

இரா முருகன்

நல்ல மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் காணாமல் போகிறார். மோசமான மொழிபெயர்ப்பில் மூல நூலாசிரியர் காணாமல் போய் விடுகிறார்.
  
-இரா. முருகன்

வேள்பாரி

தேனின் சுவை சுவைப்பதில் அல்ல, சுவைத்ததில் இருக்கிறது. காமமும் அப்படித்தான்.

-வேள்பாரி

சாங் கிசாய்

தேநீர் அருந்துவது என்பதே
கற்பனை விரல்களின்
கணநேர தீண்டல்தான்

- சாங் கிசாய்

வேள்பாரி

விலகுதலும் இணைதலும் எப்பொழுது என்பதைக் கணிப்பதில் தான் இருக்கிறது காமத்தைக் கைகொள்ளும் வித்தை.

-வேள்பாரி

நேசமித்ரன்

அதற்குமேல் ஒன்றும்
இல்லை
என்கிறவர்களுக்குத்
தெரியாது
ஈமத்தின் கடைசிக்
கங்குவரை
காத்திருப்பவன்
எத்தனைமுறை
ஆகாசம் 
பார்க்கிறான் என்பது

-நேசமித்ரன்

வேள்பாரி

பேச்சு எந்தக் கணம் காமத்தின் பக்கம் போகிறதோ, அதன்பின் அதிலிருந்து விலகுதலை அதுதான் முடிவுசெய்யும்; நாம் முடிவுசெய்ய முடியாது.

-வேள்பாரி

மகுடேசுவரன்

உன்னை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எங்கோ பார்ப்பதுபோல்
இருக்கும் நீ
அப்படியே இரு
திரும்பாதே.
களவுப் பார்வைகள்
அனுமதிக்கப்படும் வரைதான்
உளவுகாணமுடியும்
உள்ளத்தை!

-மகுடேசுவரன்

வேள்பாரி

காட்டில் பிற எந்த ஆயுதத்தையும்விட வலிமைமிக்கது காடு பற்றிய அறிவு தான்.

-வேள்பாரி

தாவோ

அடுத்தவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை அறிந்தால் அது அறிவு. நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் அது ஞானம்

-தாவோ

12/04/2021

ஓஷோ

ஆணவம் என்பது ஒரு இருப்பு.நீ நான் என்ற தன்முனைப்புடன் சென்று கொண்டே இருக்கிறாய்.அது மிகவும் பொய்யானது.அது உன்னிடமிருந்து அதிக பொய்களை கேட்கும்.அதை நீ திருப்திப்படுத்த முற்றிலும் பொய்யானவனாக ஆக வேண்டியிருக்கும்

-ஓஷோ

ராஜூ முருகன்

பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும்போது எல்லாம் குடைபிடித்துக் கொண்டு செல்லும் கயவர்கள் நாம்

-ராஜூ முருகன்

ஆண்யனியோ கிராம்சி

அடுத்த மனிதனை அடக்கி ஒடுக்கி தன் கட்டளைகளை ஏற்க வைப்பதில் மனிதர்களுக்கு எப்போதுமே ஓர் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது. அந்த மனப்பாங்கு குடும்பம்,சமூகம் என்று பேதமில்லாமல் நடைமுறையில் இருக்கிறது

-ஆண்டனியோ கிராம்சி

வேள்பாரி

வளைய மறுக்கும் கிளை ஒடிவதும், வளைந்து கொடுக்கும் கிளை நீண்டு தழைப்பதும்தான் இயற்கையின் அமைப்பு.

-வேள்பாரி

ப.பி

அறிந்துகொள்ளல் என்பது இரு வகை.ஒன்று புரிந்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்வது(கதை,கவிதை)

 மற்றொன்று உணர்ந்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்வது(இசை,ஓவியம்)

-படித்தது

அதிகாரம்

அதிகாரம்

ஒரு நாள் உயரமான கோட்டை சுவர் ஒன்றின் மீது ஆடு ஒன்று நின்று கொண்டிருந்தது.அவ்வழியெ போன ஓநாயை நிற்கச் சொன்னது.

"ஏய் இங்கே வா"..எனக்கு பசிக்கிறது அந்தச் செடியில் நாலு இலை பறித்துவா என்றது..இதை செய்யாததால் ஆடு கோபத்துடன் மீண்டும் மீண்டும் சொன்னது.

ஓநாய் சொன்னது"நீ ஏறி நிற்கிற உயரம்தான் இப்படி பேச வைக்குது.இறங்கி வா அப்போது நீயார் எனும் உண்மை புரியும் என்றது

-நாட்டுப்புற கதை

லா.ச.ரா

படிப்படியாக ஏறும் வார்த்தை தடிப்பில், சண்டையின் காரணம் மறந்துபோய் வெற்றிக்கொடி கடைசி வார்த்தை யாருக்கு எனும் வீராப்புதான் மிச்சம்.

-லா.ச.ரா

பெரு.விஷ்ணுகுமார்

உரையாடுகையில் உங்கள் முன்னே
கொட்டாவியை விழுங்க தெரிந்த நானே
கைதேர்ந்த நடிகன்

-பெரு.விஷ்ணுகுமார்

வேள்பாரி

கேள்விகள் உருவாகிவிட்டால், அவை பதிலின்றி உதிராது.

-வேள்பாரி