பரிதவிப்போடு பற்றும் கரங்களை நாசூக்காக விளக்குவது எளிது..
கனவுகளோடு தரும் பரிசை இப்போது எனக்குப் பயன்படாது என மறுதலிப்பது எளிது..
நாளெல்லாம் காத்திருந்த ஒரு சந்திப்பை சிறிய காரணங்களுக்காக தவிர்ப்பது எளிது..
மனம் தளும்பி சொல்லும் ஒரு சொல்லை காதில் விழாதது போல் இருப்பது எளிது..
எத்தனை முறை அழைத்தாலும் ஒரு அழைப்பை ஏற்காது இருப்பது எளிது..
கடைசியில் மனம் தளர்ந்து ஒருவர் மெல்ல விலகிச் செல்கிறார்
ஒரு சிறு புள்ளியாய் எங்கோ மறைகிறார்..
அது எளிதல்ல ஒரு மனிதர் இல்லாமல் போவதை புரிந்து கொள்வது..
ஒருவர் போகும் போது நம் துரதிர்ஷ்டம் நீங்கியது என்றுதான் நினைக்கிறோம் நம் அதிர்ஷ்டத்தின் வைரம் ஒன்றையும் தன்னோடு அவர் கொண்டு செல்லக்கூடும..
நான் இல்லாமல் போகும்போது விட்டுச்செல்லும் வெற்றிடத்தில் எதிர்பாராத ஒரு பள்ளம் உருவாகலாம் கவனமாக கடந்து செல்..
மனுஷ்யபுத்திரன்.