31/05/2021

எஸ்.ரா

அதிகாரத்திற்கு எதிராக மனிதனின் போராட்டம் என்பது ஞாபகமறதிக்கு எதிராக நினைவுகளின் போராட்டம்

-எஸ்.ரா

ராஜூ முருகன்

அறியாமையை விடவும் பெரிய சந்தோசம் எதுவும் இல்லை.இந்த வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க, அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது?

-ராஜூ முருகன்

வைரமுத்து

மனிதர்க்கு மனிதர்கள் மட்டுமே தேவை என்பது இரண்டு பருவத்தில்:ஒன்று வாழத்தெரியாத இளம்பருவம்; இன்னொன்று வாழ்ந்து முடித்த முதுமைபருவம்
-வைரமுத்து

ஓஷோ-பயம்

ஓஷோ 
கொரோனா போன்ற
நோய்களை வெல்வதற்கு, நமக்கு அற்புதமான அறிவைக் கொடுத்துள்ளார்:

 70 களில், காலராவும் ஒரு தொற்றுநோயாக உலகம் முழுவதும் பரவியது, அச்சமயத்தில், 
 
இந்த தொற்றுநோயிலிருந்து தப்பிப்பது எப்படி?

ஓஷோ விரிவாக விளக்கியது இன்று கொரோனாவுக்கும் மிகவும் பொருத்தமானது.

 இந்த பயத்தைத் தவிர்ப்பது எப்படி ...?

 வைரஸ்களைத் தவிர்ப்பது மிகவும் எளிதானதுதான்,
ஆனால் உங்களுக்கும் உலகின் பெரும்பாலான மக்களுக்கும் இடையில் அமர்ந்திருக்கும் பயத்தைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.

 இப்போது இந்த தொற்றுநோயால் குறைவான மக்கள்தான் இறப்பார்கள் ஆனால் பயத்தால் அதிகமாகனோர் இறந்துவிடுவார்கள்.

பயத்தை விட ஆபத்தான வைரஸ் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

 இந்த பயத்தை புரிந்து கொள்ளுங்கள்,
 இல்லையெனில் நீங்கள் மரணத்திற்கு முன்பே உயிருள்ள சடலமாக மாறுவீர்கள்.

இது ஒரு கூட்டு பைத்திய மனநிலை (Collective Unconsciousness)
இது எக்காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது, காரணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன, , சில சமயங்களில் இரு நாடுகளின் சண்டை, சில சமயங்களில் உயிரியல் ஆயுதங்களை சோதனை செய்தல், இப்படி!

 
 இதில், பலர் என்றென்றும் குழப்பமடைகிறார்கள் அல்லது இறந்துவிடுவார்கள்.

 இது இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான தடவைகள் நடந்தது, தொடர்ந்து நடக்கும், மேலும் வரும் ஆண்டுகளில், போர் பீரங்கிகளால் அல்ல, உயிரியல் ஆயுதங்களுடன் சண்டையிடப்படும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

 ஒவ்வொரு பிரச்சனையும் முட்டாளுக்கு பயம் என்று நான் மீண்டும் சொல்கிறேன், அதே நேரத்தில் அறிவுள்ளவர்களுக்கு வாய்ப்பு !

 இந்த தொற்றுநோய்களில், நீங்கள் வீட்டில் உட்கார்ந்து, புத்தகங்களை படிக்கலாம் உடலை உடற்பயிற்சியால் மேம்படுத்தலாம். திரைப்படங்களைப் பார்க்கலாம், யோகா செய்யலாம், ஒரு மாதத்தில்
உங்கள் பொழுதுபோக்குகளை நிறைவேற்றுங்கள்!

 என்னை 15 நாட்கள் வீட்டில் உட்காரச் சொன்னால், இந்த 15 நாட்களில் 30 புத்தகங்களைப் படிப்பேன், இல்லையென்றால் ஒரு புத்தகம் எழுதுவேன், இந்த மாபெரும் திருவிழாவில் பணத்தை முதலீடு செய்வேன், இது இருபது முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு வாய்ப்பு.  ஏன் நோயைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்கிறீர்கள்.

 'பயம் மற்றும் நெரிசல்' உளவியல் அனைவருக்கும் புரியவில்லை.

மக்கள் பயப்படுவதை ரசிக்கவில்லை என்றால் ஏன் பேய் படம் பார்க்கச் செல்கிறார்கள்?

 இது ஒரு வெகுஜன பைத்தியம், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி மூலம் கூட்டத்திற்கு விற்கப்படுகிறது.

டிவியில் செய்தி கேட்பது அல்லது செய்தித்தாள் படிப்பதை நிறுத்துங்கள்

உங்களில் பயத்தை உருவாக்கும் எந்த வீடியோ அல்லது செய்தியையும் பார்க்க வேண்டாம்.

தொற்றுநோய் பற்றி பேசுவதை நிறுத்துங்கள்.

 அதே வகையான சிந்தனை மீண்டும் மீண்டும் உடலுக்குள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது, மேலும் இந்த வேதியியல் மாற்றம் சில நேரங்களில் மிகவும் நச்சுத்தன்மையுடையதாக இருக்கலாம், அது உங்கள் உயிரைக் கூட எடுக்கும்.

தியானம், தேடுபவரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு பிரகாசத்தை உருவாக்குகிறது, இது வெளியில் இருந்து எதிர்மறை சக்தியை அதற்குள் அனுமதிக்காது,
சுத்தமான தண்ணீரை குடிக்கவும், தளர்வாக இருங்கள். 

 கடைசி விஷயம்:
 பொறுமையாக இருங்கள்,எல்லாம் விரைவில் மாறும். மரணம் வரும் வரை, அதைப்பார்த்து பயப்படத் தேவையில்லை, தவிர்க்க முடியாததை எண்ணி அஞ்சுதல் மடமை. 

 பயம் என்பது ஒரு வகையான முட்டாள்தனம், நீங்கள்  ஒரு தொற்றுநோயால் இறக்காவிட்டாலும், ஒரு நாள் கட்டாயம் இறக்க நேரிடும், அது எந்த நாளிலும் நிகழலாம். எனவே ஒரு அறிஞரைப் போல தெளிவான வாழ்க்கை வாழ்க, கூட்டத்தைப் போல குழம்பிய வாழ்க்கை அல்ல !!

 -ஓஷோ

பாவெல் சக்தி

என்னை அழைத்து
அவசர அவசரமாக
ஒருவருடைய
மரணச் செய்தியைச் 
சொல்லாதே நண்பா....

சுடச் சுட தெரிந்துகொண்டு
நான் என்ன செய்துவிடப் போகிறேன்.

நானாகத் தெரிந்துகொள்ளும் வரை
அவர்
உயிரோடு இருந்துவிட்டுப்
போகட்டும்.

-பாவெல் சக்தி

சுப.உதயகுமாரன்

அறிவற்றவர்களும், படிப்பாளிகளும்தான் தாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வகுப்பு எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.இது தவறான அணுகுமுறை.கற்றுக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு மட்டும்தான் பாடம் நடத்த வேண்டும்.

-சுப.உதயகுமாரன்

இறையன்பு

நம்மை யாரும் புறக்கணிக்காத அளவிற்கு நாம் வளர்வதற்கு அறிவு ஒன்றே அட்சயப் பாத்திரம்

-இறையன்பு

வேள்பாரி

வேள்பாரி

முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவேள் அருவி கல்கலைத் தொழுகும்
பறம்பிற் கோமான் பாரியும்;

-பெருஞ்சித்திரனார் (புறநானூறு 158; 1-4)


மயிலும் குதிரையும் தனது மொத்த அழகையும் நீண்டு திருப்பும் கழுத்தில் வைத்திருக்கிறது.

-வேள்பாரி

எங்களின் பாதங்கள் மண்ணைப் பிடித்து நடந்து பழகியவை. சமவெளியில் வாழும் உங்களின் பாதங்கள் மண்ணில் தேய்த்து நடந்து பழகியவை. பாதடியைக் கழட்டிவிட்டுப் பாதத்தை முன்னெடுத்து வையுங்கள். பற்களைப்போல விரல்களுக்கும் கவ்விப்பிடிக்கத் தெரியும்.

-வேள்பாரி

“பாரி அரசன் அல்ல… வேளீர் குலத் தலைவன். நாட்டை ஆள்வதைப்போல காடும் ஆளப்படுகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள். காட்டை யாராலும் ஆளமுடியாது. சின்னஞ்சிறு மனிதனால் என்ன செய்ய முடியும்? பகை, துரோகம், வீரம், சாவு, அவ்வளவுதான்.

-வேள்பாரி

இயற்கையின் அதிஅற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது.

-வேள்பாரி

எல்லோரும் அதிகம் புகழப்படும் ஓர் இடத்தில் பிழைகள் மலிந்திருக்கும். யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர்.

-வேள்பாரி

*தேங்கள்*

தேனில் இருந்து தயாரித்து, மூங்கில் குழாயில் இட்டு நன்கு புளிக்கவைத்த முற்றிய கள்.

ஒரு குப்பி கள் பல நேரம் வரலாற்றையே மாற்றியிருக்கிறது.

-வேள்பாரி

வள்ளல் தன்மை என்பது நிர்வாகத்திறமை  அல்ல. அது குழந்தையின் அழுகுரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பைப் போன்றது.

-வேள்பாரி

காதல் சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால்தான் கைகூடும்.

மனிதனால் காதலை அழைத்துவர முடியாது; காதல்தான் மனிதரை அழைத்துவரும்.

-வேள்பாரி

ஊரின் மூத்த ஆண் 'பழையன்'
மூத்த பெண் 'பழைச்சி'

பழையனிடம் உன் வயது என்ன? என்ற கேள்வியை கபிலர் கேட்டார்...

97 வயது என பழையன் கூறினார்.

கபிலர் 'எப்படி துள்ளியமாக சொல்கிறீர்'

பழையன் "மேல்மலையில் இருக்கும் குறிஞ்சிச் செடியில் இரண்டாவது கணுவில் பூப்பூத்திருக்கும் போது, நான் பிறந்ததாக என் தாய் சொன்னாள். கடந்த ஆண்டு அந்தச் செடியில் பத்தாவது கணுவில் பூப்பூத்திருந்தது" என்றார்.

-வேள்பாரி

தீமையை கணப்பொழுதில் நன்மையாக மாற்றமுடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு  உண்டு. வார்த்தை தரும் ஆற்றலை வேறு எதுவும் தருவதில்லை. மனிதன் முதிரும் போதுதான் மனங்களை கையாளக் கற்றுக்கொள்கிறான். மனம் விழுந்த பின்னர் எழவைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால், வீழ்ந்து கொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்துவதுதான் மிக முக்கியம். வாழ்வின் சாரமேறிக் கிடக்கும் அனுபவ அறிவால்தான் அதைச் செய்ய முடியும்.

-வேள்பாரி

வார்த்தைகள் முதுகுத்தண்டை முறுக்கேற்றும் வல்லமை கொண்டவை.

-வேள்பாரி

அறியாமை ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகள்; அறிந்தவர்களுக்கு கிடைக்காது.

-வேள்பாரி

நம்பிய பிறகு ஒருவனை ஐயங்கொள்வது எளிதல்ல.

-வேள்பாரி

நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்.

அதிகாரம் உயிர் பெறாத இடத்தில் அன்பு மட்டுமே தழைத்திருக்கும்.

-வேள்பாரி

குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும் போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்.

-வேள்பாரி

ஆறாத் துயரைக் கலையாக்கும்போது கலைஞன் படும் வேதனைக்கு இணை கூறச் சொல்லில்லை.

-வேள்பாரி

பரிமாற்றம் என்பது தேவை சார்ந்தது. வணிகம் என்பது ஆதாயம் சார்ந்தது.

-வேள்பாரி

எதுவொன்றையும் தேவையானதாக மாற்றுவதுதான் வணிகம். வணிகத்திடம்தான் ஆசையின் திறவுகோல் உள்ளது.

-வேள்பாரி

தாழை மலர்

தாழை மலரில் பெண் பூ, ஆண் பூவென இருவகைகள் இருக்கின்றன. அவற்றுள் ஆண் பூவின் இதழ்களை ஆடைகளுக்குள் போட்டுவைத்தால், சிறு பூச்சிகள் ஆடைக்குள் நுழையாது. அது மட்டுமல்ல; நல்ல மணமூட்டியாகவும் அது இருக்கும்.

-வேள்பாரி

சொல் சுடும் போது சொல்லைச் சுடுவான் புலவன்.

-வேள்பாரி

ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.

-வேள்பாரி

ஒரே நேரத்தில் மண்ணுக்குள் வேர்விடவும் மேல்நோக்கி முளைவிடவும் தாவரங்களால் முடிவதைப் போல...

-வேள்பாரி

உரத்துச் சொல்லப்படுவதைவிடக் காதோடு காதாகப் பேசும் கதைக்கு வயது அதிகம்.

-வேள்பாரி

காதல் சொல்லால்தான் மலர்கிறது.

ஆணின் கண்கள் காதல் கொள்பவை; ஆனால், காதலைச் சொல்லக் கற்றவை அல்ல.

தொடுதலின் மூலம் ஆயிரம் விழிகள் உள்ளுக்குள் விழித்து அடங்குகின்றன.

-வேள்பாரி

பெருங்காட்டைச் சிறு பூவொன்று காதல் கொள்வதைப் போல...

-வேள்பாரி

நிலத்தை உழவேண்டும். அதற்குமுன் உழும் நிலத்தை உணர வேண்டும்.

-வேள்பாரி

தீயவர்களின் வீழ்ச்சி மகிழ்வை கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சியோ துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும்.

-வேள்பாரி

நாடோடி நாகரிகம் எல்லா உயிர்களையும் தனதாக்கி நேசித்தது.

-வேள்பாரி

காதலின் கூர்மிகு ஆயுதம் நீர்சுரக்கும் நுனிநாக்கு.

-வேள்பாரி

உரசி நகரும் கிடை வாழ்க்கை எந்நேரமும் காதலைப் பற்றவைத்த படியே இருந்தது. கடையப்பட்ட தயிர் மத்தின் விளிம்புகளுக்கு இடையில் விரல் தேய்த்து வெண்ணெய் எடுப்பதைப்போல, திரளத் திரளக் காதலை எடுத்துக்கொண்டே நடந்தனர் செம்பாவும் கோவனும்.

-வேள்பாரி

வாசலில் கோலம் மலர்ந்துவிட்டால், கவலைக் எல்லாம் காற்றாகப் பறந்துபோகும்.

-வேள்பாரி

கடித்து இழுக்க விலங்குகளுக்கு பல் இருப்பதைப் போல் மனிதர்களுக்கு கதை.

-வேள்பாரி

ஈட்டியை விசைகொண்டு எறியும் எங்கள் வீரர்களின் கை தன்னிகரற்ற வலிமை கொண்டிருப்பது சதையால் அன்று கதையால்.

-வேள்பாரி

மனிதன் பாம்பைப் பற்றி பேசும் கணத்திலேயே அது அவனுக்குள்ளே வந்துவிடுகிறது.

-வேள்பாரி

எல்லாம் கண்டறியாதவர்கள் சொல்லும் கதைகள். ஆளுக்கு ஒன்றாக இருக்கும்.

-வேள்பாரி

கதை சொல்லும் போது பெருகக் கூடியது; நினைக்கும்போது திரளக் கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக் கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.

-வேள்பாரி

செல்வத்தை விஞ்சும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. செல்வத்தின் திளைப்பில் மிதக்கும் கண்களை, அதைவிட அதிகமான செல்வத்தைக் கொட்டுவதன் மூலம் கவனம் பெறவைக்க முடியாது. ஆனால், கலையின் நுணுக்கம் கண்களை அசைவற்று நிறுத்தும்.

-வேள்பாரி

மனிதன் கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனைக் குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.

-வேள்பாரி

அனுபவம் அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது.

-வேள்பாரி

காமத்துக்கு காட்சி வடிவம் கொடுக்க முடியுமா? அது காட்சி வயப்பட்டதன்று, கனவு வயப்பட்டது. பூவின் மலர்தலில் உருவாகும் மணம்போல, மனித மலர்தலில் உள்ளுருகும் நிகழ்வு. கனவைக் கண்கொண்டு பார்க்க நினைப்பது அறியாமை. அது கண்ணுள் பார்க்க வேண்டியது.

-வேள்பாரி

காமம் ஔியால் அல்ல... ஔி ஏற்படுத்தித்தரும் இருளுக்குள்தான் மலரத் தொடங்கும்.

-வேள்பாரி

காண்பவரின் கண்ணுக்குள் கனவை நிகழ்த்துவதுதான் கலை.

-வேள்பாரி

முன்னேறுவதைவிடக் கடினமானது பின்தொடர்வது.

-வேள்பாரி

மரத்தைத் தெரிந்துகொள்ள மரத்தைப் பார்த்தால் போதும். ஆனால், மரத்தை அறிந்துகொள்ள அதன் வேரைப் பார்க்க வேண்டும்.

-வேள்பாரி

கபிலர், அந்தக் கிளையை நோக்கிச் சென்றார். மயில், கிளையிலிருந்து தாவி மண்ணில் கால் பதித்த இடத்தில் அதன் காலடி படிந்திருந்தது. அதைப்பார்த்தபடி சொன்னார், "மயிலின் காலடியை நொச்சி இலைக்கு உவமை சொல்வர். வெண்ணொச்சி ஐந்து இலைகளை உடையது. மயிலுக்கு முன்பக்கம் மூன்று விரல்கள்தானே, அதனால் கருநொச்சியைத் தான் உவமை சொல்லியிருக்க வேண்டும். அதற்குத்தான் மூன்று இலை."

-வேள்பாரி

விழா என்றால், அறுவகைத் தராசும் தரை தட்டும் ஓசை நிற்காமல் கேட்க வேண்டும். அதுவே திருவிழா என்றால், இந்த அறுவகையோடு சேர்ந்து எழுவகை அளவையும் நில்லாமல் நீள வேண்டும். அதனினும் பெருவிழா என்றால், இந்த இரண்டோடு சேர்த்து எண்வகை இன்பத்தில் நகரம் திளைக்க வேண்டும். இதுவே விழாக்களுக்கு இலக்கணம் கண்டோர் சொன்ன சொல்.

(மாணிக்ககற்களை நிறுத்தும் சிறிய வகை மணித்தராசு, தங்கநகைகளை நிறுத்தும் பொற்தராசு, உலோகங்களை நிறுத்தும் உலோகத்தராசு, பண்டத்தராசு, மரத்தராசு, தூக்குத்தராசு...)
(ஆடை, அணி, உண்டி, தாம்பூலம், நறுமணம், காமம், இசை, கொண்டாட்டம் என இன்பம் எண்வகை...)

-வேள்பாரி

நெருஞ்சிப் பூவுக்கு இன்னொரு பெயர் ஞாயிறு திரும்பி. கதிரவன் எழுவதிலிருந்து மறைவது வரை அதைப் பார்த்தபடித் திரும்பக்கூடிய விந்தையான மலர். அதனால், இதைக் கதிரவன் மேல் காமம் கொண்ட மலர் என்று சொல்வார்கள்.

-வேள்பாரி

அறிவாலும் குணத்தாலும் எடுக்க வேண்டிய முடிவை, விதிகளாலும் கட்டளைகளாலும் எடுக்க முடியாது. மனிதன் எடுக்க வேண்டிய முடிவைச் சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம்.

கையில் எடுப்பவனுக்குத் தகுந்த கையுறைகள்தான் சட்டவிதிகள்.

-வேள்பாரி

முளைத்தது விளையும்... விளைந்தது கனியும். அதற்கு எதிராக எதுவொன்றையும் பக்குவப்படுத்தி விளையவைக்கவும் முடியாது; பதப்படுத்தி கனியவைக்கவும் முடியாது. அதுதான் இயற்கை.

-வேள்பாரி

இயற்கையை ஆள்வதற்காகத்தான் வெல்ல முயல்கிறோம். வெல்வதற்காகத்தான் அழிக்க முயல்கிறோம். அந்த அழிவுதான் அரசாட்சியின் சாட்சி.

-வேள்பாரி

தவறுகளை சிறப்பு என்று நீங்கள் பாராட்டுவதன் காரணம், சிறப்பானவற்றைத் தவறானதாக மாற்றிவைத்திருக்கும் உங்களின் அதிகாரம்தான்.

-வேள்பாரி

காலம் குறித்த அச்சம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. காலத்தை அறிந்தவனுக்கு அதிகாரத்தின் எல்லாக் கதவுகளும் திறக்கத்தானே செய்கின்றன.

-வேள்பாரி

கூடு என்பது பறவைக்கான தங்கும் இடம். வானம்தான் வாழ்விடம்.

-வேள்பாரி


*சென்றிக்கொடி*

காட்டுக்குள் இருக்கும் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், சென்றிக் கொடியைப் பறித்துத் தீக்கற்களால் தீ மூட்டுவார்கள். அந்தக் கொடியில் தீப்பற்றி எரியாது; புகை மட்டுமே வரும். உச்சி நோக்கி விடாமல் மேலெழும் ஊசிப்புகையைப் பார்த்து அவருக்கு உதவி செய்ய மக்கள் போய்விடுவார்கள்.

அருகில் மற்றொரு புகை மேலெழுந்தால், உதவிக்கு ஆள்கள் போய்விட்டார்கள். வேறுயாரும் வரவேண்டியதில்லை என்று பொருள்.

-வேள்பாரி

பசி கண்ணை மறைக்கலாம். ஆனால், கண்ணைக் கெடுத்துவிடக் கூடாது.

-வேள்பாரி

*வெற்றிலை*

வெற்றிலையின் பின்புறம் இருக்கும் நரம்புகள் மூன்றும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒன்றுபோல் இறங்கியிருந்தால், அது ஆண் வெற்றிலை. மேலே இருப்பது இறங்கியும் மற்ற நரம்புகள் விலகியும் இறங்கியும் இருந்தால் அது பெண் வெற்றிலை.

-வேள்பாரி

கதைகள் ஒருபோதும் முடிவதில்லை.

வலியையும் வேதனையையும் வெளிக்காட்டாமல் வாழ்வதுகூட ஒருவிதமான கலைதான்.

-வேள்பாரி


எங்கிருந்தும் வானத்தைப் பார்க்கலாம். ஆனால், எங்கிருந்து பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம்.

கடல் அதன் அலைகளின் வழியாக அறியப்படுவதைப் போல வானம், அதைக் காணும் கோணத்தின் வழியாகத்தான் காட்சிப்படுகிறது.

-வேள்பாரி

சனிக்கோள் நிலவுடனும் பிற விண்மீன் கூட்டங்களுடனும் ஒரே அமைப்புக்கு மீண்டும் வந்து சேர முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதனால்தான் நமது முன்னோர்கள் பகலை முப்பது நாழிகையாகவும், இரவை முப்பது நாழிகையாகவும் பகுத்தனர். அதனடிப்படையில் ஒரு நாளை அறுபது நாழிகையாகவும், காலச்சுழற்சியை அறுபது ஆண்டுகளெனவும் வரையறுத்தனர்.

யவணர்கள் வியாழன் கோளை அடிப்படையாக கொண்டு வரையறுத்திருக்கலாம். வியாழன் ஒரு சுழற்சியை முழுமைகொள்ள பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதையே சுழற்சி வட்டமாக கொண்டு பகலை பன்னிரண்டு பகுதிகளாவும், இரவை பன்னிரண்டு பகுதிகளாகவும் பிரித்திருக்கலாம்.

-வேள்பாரி


கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப் போலப் படிந்தே கிடக்க வேண்டும். காதலுக்குத்தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெருந்தண்டணையைக் கனவுகளே அளிக்கின்றன.

-வேள்பாரி

எது இலக்கியம், எது காதல், என்பதைப் பிரித்தறிய முடியாது. ஒன்றின் நிழலாக இன்னொன்று இருக்கும். ஆனால், எது நிழல் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

-வேள்பாரி

தஞ்சை பிரகாஷ்

எல்லா நோயும் , 
மனசில தான் 
தொடங்குது ...

உடம்பில தான் 
முடியுது .

-தஞ்சை பிரகாஷ்

கவிஜி

தகுதி அற்றவை தப்பிப் பிழைக்கையில்
தகுதி உள்ளவை
தவித்துப் பிழைக்கிறது
*
ரௌத்ரம் பழகுவது இருக்கட்டும்
அதற்கு முன்
எப்போதும் ' ம்' கொட்டிப் பழகு

- கவிஜி

ஆத்மாநாம்

மனிதன் வெற்றுடம்புடன் திரிகிறான்.நகரெங்கும் அன்பைத் தேடி அச்சத்துடன்

-ஆத்மாநாம்

தஸ்தயெவ்ஸ்கி

கடைசியாக மிச்சமிருப்பது 
இது ஒன்றுதான்.
நிஜ வாழ்க்கையின் யதார்த்தத்தோடு மோதிவிடுவது மட்டும் தான்.

-தஸ்தயெவ்ஸ்கி

வேள்பாரி

அதிகாரமும் அறமும் இரண்டு எல்லைகள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறம் பேணவே முடியாது.

-வேள்பாரி

டேவிட்

மணப்புரம் எதிரிலிருக்கும் வேப்பமரம் 
தினம் கம்மலை அடகுவைத்து செல்லும் எதோஒரு பெண்ணுக்கு சிறுகுச்சியை காதணியாய் அணிவிக்கிறது.

டேவிட்

நிசப்தன்

எல்லாவற்றையும்
புரிந்து கொள்ள முடிகிறது
ஆனால்
அவற்றை ஏற்றுக்கொள்ளத் தான்
அவ்வளவு சங்கடமாக உள்ளது

-நிசப்தன்

வேள்பாரி

எதிரி என்ன செய்கிறான் எனச் சிந்திக்கத் தொடங்குவதே அவனது நோக்கத்துக்குள் நாம் இழுபட்டதன் அடையாளம்தான்.

-வேள்பாரி

அ.முத்துலிங்கம்

திங்கட்கிழமை மீது எனக்கு ஒரு கோபமும் இல்லை! அது வரும்போதே நான்கு வேலை நாட்களையும் உடன் அழைத்து வருகிறதே? அதுதான் பிரச்சனை!
- அ.முத்துலிங்கம்

லெனின்

உன்னை விமர்சிப்பவர்களுக்கு நிரூபிக்கப் போராடாதே. உன்னை நம்பியிருப்பவர்களுக்கு உண்மையாக இருக்கப் போராடு

-லெனின்

ஐன்ஸ்டீன்

செய்வதையே திரும்பத் திரும்ப செய்துவிட்டு விளைவுகளை மட்டும் வேறுவேறாகக் கற்பனை செய்யாதீர்கள்

-ஐன்ஸ்டீன்

வேள்பாரி

களையும் பறவைகள் வெகுதொலைவு செல்வதில்லை. அருகில் இருக்கும் மரங்களிலேயே உட்கார்ந்து விடுகின்றன.

-வேள்பாரி

வெ.இறையன்பு

ஆலோசனை என்பது அனுபவப் பகிர்வு.
அறிவுரை என்பது நாம் செய்யாததை அடுத்தவர்க்குக் கூறுவது

-வெ.இறையன்பு

வேள்பாரி

வலிமயான தாக்குதலை முறையற்று நடத்துவதைவிட, எளிய தாக்குதலை முறையான ஒழுங்கோடு நடத்துவதே எதிரிகளை வீழ்த்தும்.

-வேள்பாரி

ஈரோடு கதிர்

"எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்" என்ற சமாதானம் எத்தனை அழகியது அல்லது எளியது
-ஈரோடு கதிர்

வேள்பாரி

தனது புகழின் மீதான பெருமிதத்தை அடுத்தவன் கண்களின் வழியே பார்ப்பது அளவிட முடியாத மகிழ்வைத் தரக்கூடியது.

-வேள்பாரி

ராஜா சந்திரசேகர்

வாகனம் வாங்கனும்ங்கறது கனவு.அதுவரைக்கும் கனவுதான் வாகனம்.

-ராஜா சந்திரசேகர்

வேள்பாரி

வீரமும் வலிமையும் சிந்தனையில்தான் உள்ளன.

-வேள்பாரி

வேள்பாரி

பெருந்தாக்குதலுக்கான ஆயத்த முயற்சியில் இருப்பவர்கள், நாங்கள் அப்படியல்ல எனக் காட்டிக்கொள்ள முயல்வார்கள்.

-வேள்பாரி

ராஜா சந்திரசேகர்

மீனுக்கு உயரம் எல்லாம்
அது நீருக்குள் போகும்
ஆழம்தான்

- ராஜா சந்திரசேகர்

ஜெயகாந்தன்

மனசு சலிச்சுப்போச்சு, வெறுத்துப் போச்சுன்னு சும்மா சொல்லிக்கிறதுதான்.
அனுபவிச்சவனுக்கு எதுவும் வெறுக்கறதில்லே. வெறுத்துடனும்ன்னு ஓர் ஆசை

-ஜெயகாந்தன்

தமிழன்பன்

தான்
பூப்பதில்லை புல் …
தன்னைப்
பார்ப்பவரைப் பூத்துவிடச் செய்கிறதே
போதாதா?

-தமிழன்பன்

வேள்பாரி

உண்மை என்பது இருக்கும் இடம் சார்ந்தது. எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதேயில்லை.

-வேள்பாரி

எஸ்.ரா

ஊர் சுற்றுவதில் உங்களுக்கு உள்ள ஆர்வம் வெறும் பயணியின் ஆசையா, இல்லை எதையாவது தேடிச் சென்று கொண்டிருக்கிறீர்களா?

நான் சுற்றுலாபயணி அல்ல. இன்னும் சொல்லப்போனால் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் எதையும் நான் பார்த்ததே கிடையாது. தாஜ்மகாலைக்கூட யமுனையின் கரைகளை ஒட்டிய கிராமங்களில் சுற்றிக்கொண்டிருந்த போது வயல் வெளிகளின் பின்னிருந்துதான் பார்த்திருக்கிறேன். எனது தேடுதலின் காரணம் தெளிவற்றது. அது அவ்வப்போது கிளைக்கக் கூடியது. பயணத்தில் குறிப்பெடுப்பதோ, புகைப்படம் எடுத்துக் கொள்வதோ எதுவும் கிடையாது. இன்னும் சொல்வதானால் குறிப்பாக எந்த ஊருக்குப் போகப் போகிறேன் என்ற திட்டம் கூடக் கிடையாது. இமயமலையின் பதினெட்டாயிரம் அடி உயரம் வரை சென்றிருக்கிறேன். கிர்காட்டிற்குள் நடந்து திரிந்திருக்கிறேன். கீழ்வாலை குகை ஓவியங்களைக் கண்டிருக்கிறேன். அஜ்மீரின் தெருக்களில் உறங்கியிருக்கிறேன். புழுதிபடிந்த உடையும் பிளாட்பார கடைகளில் உணவுமாக வாழ்வது பழக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் எனது பயணம் இலக்கற்று எந்த நேரமும் புறப்படத் தயராகத்தானிருக்கிறது. ஒரேயொறு வேறுபாடு, பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல பயமற்று எந்த நகரிலும் சுற்றித்திரிய முடிவதில்லை. அத்தோடு பலவருடமாக ஊர் சுற்றியதால் சம்பாதித்த உடல்கோளாறுகள் பயண எல்லையை சுருக்கிக் கொண்டு விட்டிருக்கிறது.

பேட்டி: எஸ்.ராமகிருஷ்ணன் 

நன்றி: தீராநதி

கபீர்

ஒவ்வொன்றும்
அதனதன் கதியில்
மெல்ல மெல்ல நிகழ்கிறது
மனமே !
தோட்டக்காரன்
நூறு வாளிகள் 
நீருற்றினாலும் ,
பருவம் வரும்போதுதான்
கனி தோன்றும் .

- கபீர்

நர்சிம்

உன்
பயணத்தில் இடர்ப்பட்ட
முதல் கல் நான்

என்
நெடும்பயணத்தில்
நான் இளைப்பாறிய
நிழல் மரம்
நீ

-நர்சிம்

யாத்திரி

கருப்பு
சிவப்பு
மாநிற
அழகு பேதங்கள் அற்று
எல்லா பெண்களையும்
தேவதை என்றழைக்க
யாரோ ஒருவன் இருப்பான்
சிறுவயதில் கேட்டறிந்த
தேவதையின் தோற்றங்கள் குறித்த புரிதல்
மெல்லமாய் தகர்கிறது
தேவதை என்பவள் ப்ரியப்பட்ட பெண்!!
         ---யாத்திரி

ப.பி

நாளை வரப் போகும் துயரை தாங்கிக் கொள்வேன், ஆனால் இன்று அதை இரவல் வாங்க மாட்டேன்

-படித்தது

கற்றதும் பெற்றதும் கவிதைகள்

 எண்ணங்கள் ஒரு சுமையல்ல.
தேவையற்ற எண்ணங்களே சுமையானவை

-ஓஷோ

ஒரு சொல் போதுமானதாய்
இருக்கிறது
பிணைத்துக் கொள்ளவும்
பிய்த்து எறியவும்

சில புன்னகை
சில சொற்கள்
சில பகிர்வு
எத்தனை நெருக்கமாய்
இழையோடினாலும்
விபத்தைப் போல்
ஒரு இடறுதல் காத்திருக்கிறது
எப்போதும்.!

-படித்தது

இறுதியில் நம் நினைவில் இருக்கப்போவது நம் எதிரிகளின் சொற்கள் அல்ல, நண்பர்களின் மெளனங்களே".

-மார்ட்டின் லூதர்கிங்

 கருகிவிடுமெனும் பரபரப்பில்
கை சுட்டுக்கொண்டது
எத்தனையாவது முறையெனச்
சொல்ல முடியாது
அம்மாவால்.

-யுகபாரதி

 சர்வாதிகாரம் என்பது ஒரே ஒரு அயோக்கியனைச் சமாளிப்பது..!!

ஜனநாயகம் என்பது ஒவ்வொரு அயோக்கியனையும் சமாளிப்பது..!!

 -கண்ணதாசன்

 சஞ்சலம் உள்ள நெஞ்சின் புனைவுதான் ஜோதிடம் 

-விவேகானந்தர்

உலகையே உள்ளங்கையில் எளிதாக கொண்டு வந்துவிட்டார்கள் ஆனால் ,உணவை உள்ளங்கைக்கு கொண்டு வர உழவனால் மட்டுமே முடிகிறது!!!

- நம்மாழ்வார்

தந்தை பழைமைவாதி, என் மகனுக்கு நான் பழைமைவாதி...

 -வைரமுத்து

வாழ்வின் எல்லை வரை உடன் வருபவர்கள் ஒருபோதும் அதனை வாக்காகத் தருவதே இல்லை. இடையில் நின்றுகொள்ளப் போகின்றவர்கள்தான் காலம் முழுக்க இருப்பேனென்னும் நம்பிக்கையை அளிக்கிறார்கள்.

-யாத்திரி

 தனிமை என்பது
என்னுடன்
நானிருப்பது தான்

-வசுமித்ர: 

ஆணவம் என்பது ஒரு இருப்பு.நீ நான் என்ற தன்முனைப்புடன் சென்று கொண்டே இருக்கிறாய்.அது மிகவும் பொய்யானது.அது உன்னிடமிருந்து அதிக பொய்களை கேட்கும்.அதை நீ திருப்திப்படுத்த முற்றிலும் பொய்யானவனாக ஆக வேண்டியிருக்கும்

-ஓஷோ

 பிரியத்தின் பெருமழையை அவர்கள் பொழியும்போது எல்லாம் குடைபிடித்துக் கொண்டு செல்லும் கயவர்கள் நாம்

-ராஜூ முருகன்

வண்ணதாசன்

கல்யாணப் பெண்ணின் 
பக்கத்திற்கு, பக்கத்திற்கு,
பக்கத்தில் இருந்த பெண்
கல்யாணப்பெண் போல இருக்கிறாள்.
பூக்காலச் செடியில்
இக்காம்பு, அக்காம்பு
எக் காம்பிலும் பூ.

-வண்ணதாசன்