27/03/2020

மணிகண்டபிரபு

எல்லாவற்றிற்கும் ஒரு மாற்றுக்கருத்து இருக்கும்.
அதையெல்லாம் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தைதவிர்க்கும் போது முதிர்ச்சி அடைந்திருப்போம்.
_மணிகண்டபிரபு

இளங்கோ ஏழுமலை

காலம் அதன்
வெள்ளை இழைகளை லேசாக
தலையில் இழைத்துவிடும்
இவ்வேளையில் தான்
சற்றே மங்கலாய் சில விசயங்கள் 
நினைவுக்கு வருகின்றன....
கல்லூரியின் 
சிறப்பு பேச்சாளர் 
தம் வாழ்க்கையை மாற்றியதாக குறிப்பிட்டாரே
அது என்ன புத்தகம்...
25 வருடங்களுக்கு முன்
அப்படி ஓடிய படமாயிற்றே
அதைப் பார்க்கவில்லையா
என்று கேட்கப்பட்ட திரைப்படம்...
ஒன்றாய் உண்டு உறங்கி
கூடித்திரிந்த நண்பன்
இப்போது எந்த வலைதளத்திலும் 
சிக்காது இருக்கிறானே
எங்கே அவன்....
படித்து ரசித்து நெகிழ்ந்து
சற்றே கிழிந்திருந்தாலும்
பரணில் பத்திரமாய் வைத்த கடிதங்கள்
அப்படியே இருக்கின்றனவா....
மேலும் எப்போதாவது
சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்
கேட்க வேண்டும் உன்னிடமும்
கல்லூரியின் கடைசி நாளன்று
ஏதோ சொல்ல வந்தாயோ?.
_இளங்கோ ஏழுமலை.

ராஜ சங்கீதன்

உடல் மனம் ஆகியவற்றின் வதை கொடுக்குகளில் மாட்டிய பின்பு உன்னதமான வாழ்க்கை வாழ குழந்தை தனம் வேண்டும்.
எப்போதும் எதுவாகவும் எதுவோடும் தன்னை நிறுத்திக்கொள்ளாத தெளிதல் கிட்ட வேண்டும்.
_ராஜ சங்கீதன்.

ஸ்டீபன் ஹாக்கிங்

அறிவாளி ஏதேனும் குறைபாட்டுடன் இருப்பான் என்ற கூற்றுக்கு நான் உதாரணமாக இருக்கிறேன்.
மக்களுக்கு நாயகர்கள் தேவைப்படுகிறார்கள்.
முதலில் அவர்கள் ஐன்ஸ்டீனை நாயகனாக்கினார்கள்.
இப்போது என்னை நாயகன் ஆக்குகிறார்கள்.அது எவ்விதத்திலும் நியாயம் இல்லையென்றாலும்.
_ஸ்டீபன் ஹாக்கிங்
_

நந்து tweets

உன்னைப்பற்றி
முழுமையாக தெரிந்து வைத்திருப்பது
உனது செல்போன் மட்டுமே.
_Nandhu twitts.

எஸ்.ஜெயகாந்தி

பார்த்தும் பாராமல்
அவ்வளவு எளிதாய்க் கடந்துவிட
இயலாமல்
பதைபதைக்கும் நெஞ்சுக்குள்
இனம்புரியா பாரத்தை ஏற்றி வைக்கிறது
விரைவுச்சாலையில் விழுந்து கிடக்கும்
குழந்தையின் ஒற்றைச்செருப்பு.
_எஸ்.ஜெயகாந்தி.

தன்மோகம்

#தன்மோகம்...

தன்மோகம் என்பது அதீதத் தற்பெருமை, அகங்காரம், தன்னைப் பற்றி வானளாவ உயர்வான எண்ணம், மற்றவர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு, பச்சாதாபம் அற்ற நிலை, தன்னை முதன்மைப்படுத்தும் சுயநலம், தன் நலத்துக்காகப் பிறரைப் பயன்படுத்தும் பண்பு போன்ற ஆளுமைக் கூறுகளை உள்ளடக்கியது.

தற்பெருமைகளைப் பறை சாற்றுவதும், உயர்பதவியில் உள்ள அதிகாரிகளின் மீது அதிகாரம் செலுத்துவதில் இன்பம் காண்பதும், மற்றவர்களை ஆட்டிப்படைப்பதும் இவர்களுக்குக் கைவந்த கலை. இதேபோல, துதி பாடும் கூட்டம் ஒன்றைத் தன்னைச் சுற்றி வைத்துக்கொள்வது, ‘ஆமாம் சாமி' போடும் நபர்களுக்குப் பதவிகள் அளிப்பது (கூழைக் கும்பிடு போடும் அவர்கள் தம் வன்மத்தைப் பிறர் மீது காட்டுவார்கள். சில வேளைகளில் சாது மிரள்வதும்கூட நடக்கும்!) - இவை எல்லாம் நாம் கண்ட, கண்டு வரும் தன்மோக ஆளுமையின் வெளிப்பாடுகள்.

சத்யஜித்ரே

ஏதோ மர்மம் இருப்பதும் நல்லது தானே. நம் கற்பனை வேலை செய்வதற்கு ஒரு வாய்ப்பு.

 -சத்யஜித்ரே

வித்யா ஷங்கர்

அங்கிருப்பதை
நலமென்பார் சிலர்
இங்கிருப்பதே
நலமென்பார் சிலர்
எங்கிருப்பதும்
நலமில்லை
இருப்பதைத் தவிர

-வித்யா ஷங்கர்

26/03/2020

ரூமி

எப்போதெல்லாம் எதிர்பார்ப்பில்லாமல், கணக்குப் பார்க்காமல், பேரம் நிகழ்த்தாமல் நேசிக்க முடிகிறதோ அப்போதெல்லாம் நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம்.

-ரூமி

வை.மு

செத்த அன்னிக்கி ஊர் சொல்ற ஒரு வார்த்த இருக்கே அதான் நாம பொழச்ச பொழப்பு

-வை.மு

கண்ணதாசன்

அயோக்கியனை நீ சுதந்திரமாக விட்டுவிட்டால், அவனது அடுத்த வேலை யோக்கியனை கேலி செய்வதே..!!

                                  -கண்ணதாசன்

23/03/2020

பா.சிங்காரம்

"சாட்டை அவர்கள் கையில் இருக்கும் வரை நாம் மாடுகளாகத்தான் இருக்க வேண்டும்" 

- பா.சிங்காரம்

19/03/2020

சுஜய்ரகு

மனுஷ்ய புத்திரன்

முதலில்
உன்னை
நினைத்துக் கொண்டேன்

பிறகு
உன்னையே
நினைத்துக் கொண்டிருந்தேன்

இப்போது
உன்னையும்
நினைத்துக் கொள்கிறேன்

ஞாபகங்களுக்கு
எப்போதும் மூன்று பருவங்கள்.

-மனுஷ்யபுத்திரன்

லாவோட்சு

அ.முத்துலிங்கம்

இவ்வளவு அழகையும் நீ ஒருத்தியே வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?

-அ.முத்துலிங்கம்

மனுஷ்ய புத்திரன்

நீ உன் அன்பின் சொல்லை விட்டு சென்று நீண்ட நேரம் ஆகிறது..
நான் அந்த சொல்லின் அருகிலேயே அமர்ந்து இருக்கிறேன்.. 

நீ ஒரு சிறிய காதல் முத்தத்திற்கு பிறகு எங்கோ நெடுந்தொலைவு சென்று விட்டாய்..
நான் அந்த முத்தத்தை நிலவொளி ஆக்கி மரங்களை ஒளிரச் செய்கிறேன்..

அன்பின் தருணங்கள் பனிக்கட்டியால் ஆனது அது உருகும்போது அதோடு சேர்ந்து நானும் உருக முடியாமல் மிகவும் தனிமை அடைகிறேன்...

 நீ நேற்று என்னிடம் எவ்வளவு அன்பாக இருந்தாய் என உன்னிடம் ஒரு வரலாற்று ஆவணத்தை நீட்டும் போது எனக்கு அவ்வளவு கூச்சமாக இருக்கிறது..

மனுஷ்யபுத்திரன்..

ரூமி

எதையும் உற்று ஆராயாதே!

அதனால் அதன் ஜீவனை நீ இழந்துவிடக்கூடும்!

-ரூமி

பொன்மொழி

நோயின் தந்தை யாரென்று தெரியாது

ஆனால் தவறான உணவுதான் அதன் தாய்

-பொன்மொழி

மனுஷ்ய புத்திரன்

கூசும் படி 
கண்ணியம் குறைந்த ஒரு பார்வை பார்த்ததில்லை
ஒரு தீண்டல் செய்ததில்லை 
என்பதில் 
பெரிய மரியாதை 
அவளுக்கு இருந்தும்
 
ஒரு முறை தயங்கி தயங்கி கேட்டாள் 
ஒருமுறையேனும் என்னை நீ ஒரு பெண்ணாக உணர்ந்ததே இல்லையா..

மனுஷ்ய புத்திரன்..

சுகுமாரன்

பட்டினி வயிற்றுக்கு தன்மானம் ஆடம்பரம்

-சுகுமாரன்

நைமி

"நிதானம் வேகத்தின் தாய்"
      

-நைமி

13/03/2020

சுஜய்ரகு

💥போலியான அன்புதான் தன்னை நிரூபிக்க நாளும்நாளும் மெனக்கெடுகிறது...எந்தப் பாடுகளும் இருப்பதில்லை தூய அன்பிற்கு!

-சுஜய் ரகு-

மார்க்வெஸ்

எதற்காகவும் அதிகம் போராட வேண்டாம். நல்ல விஷயங்கள் எதிர்பாராதபோது தானாகவே நடக்கும்.

-மார்க்வெஸ்

ஓஷோ

எதையும் அடக்கி வைத்திருப்பவன் துயரப்படத்தான் செய்வான். ஏனென்றால் எதையெல்லாம் அடக்கி வைத்திருக்கிறானோ அதுவெல்லாம் வெளிவரத் துடித்துக் கொண்டிருக்கத்தான் செய்யும்

-ஓஷோ

நைமி

அன்பை
அளக்க முடிவு செய்தால்.. 
அது
நழுவிச் சென்றுவிடும்...

 -நைமி

ராஜா சந்திரசேகர்

நிரப்பிக் கொள்ள
எவ்வளவோ இருக்கிறது
காலியாக இருப்பதுதான்
கடினமாக இருக்கிறது

-ராஜா சந்திரசேகர்

கலீல் ஜிப்ரான்

அதிகம் 
விலகிச்செல்லாதே.. 
திரும்புவது கடினமாகி விடும்.

-கலீல்_ஜிப்ரான்

பாரதிதம்பி

" எல்லாப் பெண்களுக்குள்ளும் சொல்ல முடியாத கதைகளும், சொல்லித் தீராத கதைகளும் ஏராளம் நிரம்பிக் கிடக்கின்றன. அதைப் புரிந்து கொள்கிற, பகிர அனுமதிக்கிற ஆண்களை அவர்கள் கொண்டாடுகின்றனர்...

புரிதலும், பகிர்தலுமே பெண்ணின் ஆதித் தேவை "

- பாரதி தம்பி

ஓஷோ

யாரும் யாரையும் மாற்ற முடியாது.இது ஒரு மிகப்பெரிய அனுபவம். மிகப்பெரிய புரிந்து கொள்தலாகும்

ஆகவேதான்,வயதானவர்கள் மிகவும் பொறுமையாகவும், சகித்துக்கொண்டும் போகிறார்கள்.ஆனால் இளமையில் அவர்கள் இருவரும் மிகவும் தீவிரமாக இருந்தார்கள். ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.அவர்கள் தனக்கு பிடிக்காத எல்லாவற்றையும் மாற்ற முனைகிறார்கள். அவர்களது விருப்பப்படி, இந்த உலகம் அமையவேண்டும் என நினைக்கிறார்கள். கடுமையாகப் போராடுகிறார்கள்.ஆனால் நினைத்தது நடக்காது.ஏனெனில் இயற்கையே அப்படித்தான்

-ஓஷோ

சூரிய குமார்

பெண் குழந்தை
பிறந்திருக்கிறதென
சந்தோஷமாக இனிப்பு
வழங்குகிறார்கள்
பெண் குழந்தையை
பெற்றவர்கள்..

சரி பரவாயில்லை
பெண் குழந்தைதான்
நல்லது என
ஆறுதல் சொல்கிறார்கள்
இனிப்பு எடுத்துக்கொள்பவர்கள்

-சூரியகுமார்

04/03/2020

ஓஷோ

இல்லாத ஒன்றைப் பற்றியதுதான் நம்பிக்கை

-ஓஷோ

ப.பி

காகங்களேதும் கரைந்திடாத காலை
பெரும் விபத்தைப் போல் விடிகிறது

-படித்தது

அ.வெண்ணிலா

உள்ளே வீசப்படும்
செய்தித்தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்
கீரை விற்பவன் வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்
கற்றுக் கொள்கிறது குழந்தை
யாரும் கற்றுத் தராமலேயே

-அ.வெண்ணிலா

காரல் மார்க்ஸ்

நின் வழியே செல், உளருவோர் உளரட்டும்

-கார்ல் மார்க்ஸ்

வைரமுத்து

பண்டிகையின் பசிக்கு
அவனது சம்பளம்
ஓர் உலர்ந்த பருக்கை

-வைரமுத்து

முத்துவேல்

சாமிக்கு நேர்ந்துவிட்ட
கிடா
மகிழ்ந்துகிடக்கிறது
மந்தை ஆடுகளுடன்

-முத்துவேல்

மார்க்சிம் கார்க்கி

மற்ற மனிதர்களோடு பேசும்போது தீவிரமாகப் பேசாதே.
மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும்.
அவர்கள் ஒருவரை ஒருவர் 
வெறுக்கிறார்கள்.
பொறாமையாலும், பகைமையாலுமே வாழ்கிறார்கள்.
அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள்.
நீ அதை எடுத்துக்காட்டி அவர்களிடம் இந்த உண்மையை கூறத் தொடங்கினால், உடனே அவர்கள் உன்னைத்தான் பகைப்பார்கள்.
உன்னை அழித்தே விடுவார்கள்.
ஆகவே,
மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும்..!

-மார்க்சிம் கார்க்கி

ஜிம் ஆலன்

புகழ் வார்த்தைகள் நிஜமென நம்பத் தொடங்கும்போது, உனக்கு கேடுகாலம் துவங்குகிறது

-ஜிம் ஆலன்

ரஸ்ஸல்

பிச்சைக்காரர்கள் ஒருபோதும் கோடீஸ்வரர்களைக் கண்டு பொறாமைப்படுவதில்லை. தன்னை விட அதிகமாய் பிச்சையெடுப்போரை கண்டுதான் பொறாமைப்படுகிறார்கள்
-ரஸ்ஸல்

ஜானகிராமன்

யாரென்று தெரியாமலும்
கையசைத்து
வழியனுப்புகின்றன குழந்தைகள்

எல்லாம் தெரிந்து
இறுக்கமாக அமர்ந்திருக்கின்றனர்
சக பயணிகள்

அன்பைப் பகிர்ந்துகொள்ள
குழந்தைகளுக்கு மட்டும்தான்
காரணங்கள் தேவைப்படுவதில்லை

-ஜானகிராமன்

அ.வெண்ணிலா

அன்புகொண்ட உன்முன்
நிற்கும்போது
பேரழிகின் தோரணை
வந்துவிடுகிறது எனக்கு

-அ.வெண்ணிலா

ஜெயகாந்தன்

தனிமனிதனை ஒழிப்பதற்கு அவனைக் கொன்றுதான் போட வேண்டுமென்பதில்லை.
அவனை ஒரு தலைவனாக்கினாலே போதும்! அந்த மனிதனின் தனித்துவமெல்லாம் கொலையுண்டு போகும்.

-ஜெயகாந்தன்