19/03/2020

மனுஷ்ய புத்திரன்

முதலில்
உன்னை
நினைத்துக் கொண்டேன்

பிறகு
உன்னையே
நினைத்துக் கொண்டிருந்தேன்

இப்போது
உன்னையும்
நினைத்துக் கொள்கிறேன்

ஞாபகங்களுக்கு
எப்போதும் மூன்று பருவங்கள்.

-மனுஷ்யபுத்திரன்