30/04/2020

பிரெய்ன் டர்னர்

குழந்தை என்னிடம் கேட்டது மீன் உடம்பிற்குள் ஈரமாக இருக்குமா?
 இல்லை என்றேன் நான் 
அப்படியென்றால் வேறு எப்படியிருக்கும்.?
 சிவப்பாகவும் 
இளஞ்சிவப்பாகவும் காலை நேரத்து கல்லறையைப் போல குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றேன். குழந்தை மறுபடியும் கேட்டது உனக்கு எப்படி தெரியும் அது இறந்து போனாலன்றி?

_பிரெய்ன் டர்னர். 
தமிழில் எஸ்.பாபு

13/04/2020

எஸ் ரா

நமக்கென்ன ஆகப் போகிறது?’ என ஒதுங்கிப்போய்விடாமல் பறிக்கப்படும் உரிமைகள் குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதே வாழ்தலின் அர்த்தம்..

எஸ்.ரா..

எஸ் ரா

ஸ்பை கேமரா, ஸ்பை ரெக்கார்டர் போன்றவை இன்று அதிகமாக விற்பனையாகின்றன.. இவற்றை வாங்கிப் பயன்படுத்துகிறவர்கள் துப்பறியும் நிபுணர்கள் இல்லை சந்தேகவாதிகளே..
பரஸ்பர நம்பிக்கைகள் தகர்ந்துவருவதும், வீட்டுக்குள்ளாக ஒருவரையொருவர் ஏமாற்றி வாழமுடியும் என்ற கள்ளத்தனம் உருவானதும், அறம் அழிந்துபோன சமூகச் செயல்களுமே சந்தேகத்துக்கான முக்கிய காரணம்..

எஸ்.ரா..

ரோஸ்லின்

உனக்கு தேவைப்படாத
எனது பிரியங்களை
இலைகளைப் போல
உதிர்த்துப் போட்டேன்
அள்ளவியலாத சருகுகளால்
அடைந்து கிடக்கிறது என் வனம்

-ரோஸ்லின்

எஸ் ரா

ஒவ்வொரு வயதும் ஒரு ரகசியத்தைப் பாதுகாக்க நினைக்கிறது.ஒளித்து வைக்கிறது.ஆனால்,இன்னொரு வயது அந்த ரகசியத்தை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது

-எஸ்.ரா

எஸ் ரா

நீங்கள் எத்தனை ஆண்டுகளாக எத்தனையோ புத்தகங்களை வாசித்து எவ்வளவு தேர்வுகளை எழுதி கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று நினைவில் தேக்கி வைத்திருக்கும் அனைத்தையும் 
எது மறக்கடிக்கிறதோ
அதுவே சிறந்த கல்வி.

-ஜே. கிருஷ்ணமூர்த்தி

எஸ் ரா

என் வாசிப்பை வளப்படுத்திய எஸ்.ரா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இவரின் சிறிது வெளிச்சம் என் வாழ்வில் கிடைத்த பெரும் வெளிச்சம்.நான் ரசித்த அவரின் வரிகள்.இவரின் வரிகள் ரசித்து இட்ட  என் ட்விட்டர் பதிவுகள் @Manipmp

*"நல்ல எழுத்து எல்லா நேரங்களிலும்
தாமதமாகவே உலகின் கண்களில்
அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது.

-எஸ்.ராமகிருஷ்ணன்.

*சாலைகளுக்கு முடிவே இல்லை. அது உலகை நோக்கி பயணிக்கிறது
#எஸ்.ரா

*மெளனம் நிறைய விஷயங்களை எளிதாகச் சொல்லிவிடுகிறது
-எஸ்.ரா

*சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்பது எதனால்?
  படம் நல்லா இல்லை என்பதை மறக்கடிக்க!
-எஸ்.ரா

*பொய்யின் விதைகளாக இருப்பவை சொற்களே
-எஸ்.ரா

*கடந்த காலத்திற்குள் நம்மை அழைத்துப் போவதற்கு கால இயந்திரம் தேவையில்லை.ஒரு கருப்பு-வெள்ளை புகைப்படம் போதும்
-எஸ்.ரா

*வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான்
-எஸ்.ரா

*கஷ்டத்தைவிடவும் அதை மூடி மறைப்பதுதான் பெருந்துயரம்
-எஸ்.ரா

*ஒரு நாளின் தொடக்கம் என்பது பிரச்சனைகளின் ஆரம்பமாகவே இங்கே பலருக்கும் இருக்கிறது
-எஸ்.ரா

*சென்ற நூற்றாண்டில் ஒரு மனிதன் நடந்த தூரத்தில் 10%கூட இன்று நாம் நடப்பதில்லை.நடை சுருங்கிவிட்டது. கால்களின் ஓய்வுதான் மனச்சோர்வின் முதல்படி.நீண்டதூரம் நடத்தலைக் கால்களால் சிந்திப்பது என்கிறார்கள்...

-எஸ்.ரா

*அவசரம்,வைரஸ் கிருமிகளை விட மோசமானது.அது உடலுக்குள் புகுந்த மறு நிமிடம் கை கால்கள் உதற துவங்கிவிடுகின்றன
-எஸ்.ரா

*குடும்ப பிரச்சனை என்பது வெளியே தெரியாமல் தொந்தரவு தரக்கூடிய பல்வலி போன்றதே
-எஸ்.ரா

*ஒவ்வொரு வயதும் ஒரு ரகசியத்தைப் பாதுகாக்க நினைக்கிறது.ஒளித்து வைக்கிறது.ஆனால்,இன்னொரு வயது அந்த ரகசியத்தை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது

-எஸ்.ரா

* @manipmp: உண்மையில் சந்தோசத்தை கொண்டாட நமக்குத் தெரியல,சேர்ந்து குடிப்பதை தவிர
-எஸ்.ரா

* புத்தகங்கள் கணப்பது காகிதங்களால் அல்ல, சொற்களால்..!
#எஸ்.ரா”

*காகிதம் இரண்டு இடங்களில் புகழடைகிறது. ஒன்று பணமாகும்போது,மற்றொன்று புத்தகமாகும்போது
-எஸ்.ரா"

*பொய் ஒரு விதையில்லாத் தாவரம்

இன்னும் இன்னுன் அதிகம் வரிகள் மனதில் இருக்கின்றன.நினைவில்.நின்ற வரிகள் இவை.

தோழமையுடன் மணிகண்ட பிரபு

எஸ் ரா

சிங்கம் மதிக்கப்படுவதற்குக் காரணம் அது தனித்துச் செயல்படுவதே ஆகும்..
தன்னைச் சுற்றிலும் ஜால்ராக்களை வைத்துக்கொண்டு நான் ஒரு அஞ்சாத சிங்கம் என ஒருபோதும் அது துதி பாட விடுவதில்லை.. தன் வலிமையை அறிந்தவன் அடுத்தவரின் அங்கீகாரத்துக்காகக் காத்திருப்பதே இல்லை.. அவன் தன்னை நிரூபணம் செய்துகொள்வதன் வழியே ஒன்றை வெற்றிகொள்கிறான்.. ஆனால் சமகால சூழல் அப்படிப்பட்டது இல்லை.. துறைதோறும் உதவாக்கரைகளே மேதைகளாக முன்னிறுத்தப்படுகிறார்கள்..


எஸ்.ரா..

எஸ் ரா

மனிதர்களுக்குப் பிடித்தமான விலங்குகள் அடிமைப்படுத்தப்பட்டு விடுகின்றன...
பிடிக்காத விலங்குகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன.. இதுதான் மனிதகுல வரலாற்றில் தொடர்ந்து நாம் காணும் உண்மை...

எஸ்.ரா..

எஸ் ரா

தவறு செய்யப் பழகுகிறவன், அதை நியாயப்படுத்த எவ்வளவு காரணங்களைக் கண்டுபிடித்துக் கொள்கிறான்.. தான் நிரபராதி, தன்னைவிட மோசமானவர்கள் அதிகமிருக்கிறார்கள் என்று வெளியே சுட்டுவிரலை நீட்டிக் காட்டுகிறான்...

எஸ்.ரா..

எஸ் ரா

அறிவை துணையாகக் கொண்டவர்கள் அளந்து பேசுவார்கள்...
எதையும் செய்வதற்கு முன்பு நிதானமாக அணுகுவார்கள். கோபத்தால் ஒரு பயனும் இல்லை.. வீண்விரோதமே எழும் என அறிந்திருப்பார்கள்.. ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டி இறைப்பதை விடவும் மவுனமாக நடந்து ஜெயித்துவிடமுடியும் என உணர்ந்திருப்பார்கள்...

எஸ்.ரா..

எஸ் ரா

ஆவேசமாக கூச்சலிடுபவர்கள், கோபம் கொள்கிறவர்கள், அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.. பலவான் தனது பேச்சிலும், செயலிலும் அமைதியாகவே இருப்பான்.. உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்.. ஆனால் தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்..

எஸ்.ரா..

எஸ் ரா

ஆயுதத்தைவிட பல மடங்கு வலிமை யானது நிதானம்.. எதிரி நாம் செய்யப்போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.. வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டுதான் இருப்பான்..

எஸ்.ரா..

எஸ் ரா

மனிதனோட மிகப் பெரிய துயரமே அவனது நினைவுகள்தான்.. ஆனா அந்த நினைவுகள் இல்லாம மனிதனால வாழ முடியாது..
நம்மள அடுத்த கட்டத்துக்கு கூட்டிப் போறதும் நினைவுகள்தான்...

எஸ்.ரா..

எஸ் ரா

ஒரு பக்கம் மனிதர்கள் அன்புக்காக ஏங்குகிறார்கள்.. இன்னொரு பக்கம் சகமனிதனை உதாசீனம் செய்து அவமதித்து விரட்டுகிறார்கள்.. 
இந்த முரணே இன்றைய வாழ்க்கை..

எஸ்.ரா..

எஸ் ரா

நம் காலம் தீமையின் யுகம்.. 
எல்லா தீமைகளும் பொதுவெளி யில் களியாட்டம் புரிகின்றன.. 
தீமையின் அலங்காரமும் வசீகரமும் அனைவரையும் ஈர்க்கின்றன.. 
ஆயிரம் வேஷங்கள் புனைந்தாலும் தீமை ஒருபோதும் நன்மையாகி விடாதே..

எஸ்.ரா..