அறிவுமதி பிறந்ததின பகிர்வு
*மணி
*இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது சந்தித்துக் கொள்ளட்டுமே"
-அறிவுமதி
#"காதல்வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை..
நாணக்குடை நீ பிடித்தும்
வேர்வரைக்கும் சாரல்மழை...!
-அறிவுமதி
#ஊருக்குள் உலவுகிறான்
மார்வாடி
ஒதுக்குப் புறத்தில் ஆதிதிராவிடன்
-அறிவுமதி
#நிகழ்கையில் சாரல்..
நினைக்க நினைக்கத்தான்
மழை.!
-அறிவுமதி.
#போகிற இடத்தில்
என்னைவிட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்துவிடுவானோ
என்கிற பயம்
நல்லவேளை
நட்பிற்கு இல்லை
-அறிவுமதி
#கொசு வலைக்குள் ஒரு
கொசு...அடடே
மனசாட்சி"!
-அறிவுமதி
#நூல் அறுத்த
பட்டம்
அனிதா.
- அறிவுமதி.
#இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.
-அறிவுமதி
#பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்.
-அறிவுமதி.
#எங்கள் தமிழர்கள் தொடர்ந்து திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் !
அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக !
-அறிவுமதி.
#கண்களை வாங்கிக் கொள்ள மறுக்கிறவள் காதலியாகிறாள்,
கண்களை வாங்கிக் கொண்டு உன்னை போல் கண்கள் தருகிறவள் தான் தோழியாகிறாள்
-அறிவுமதி
#அந்த நேரத்துக்கு மட்டும்
அவசியமாய் தேவைப்படுகின்றன
சில கெட்ட வார்த்தைகள்
-அறிவுமதி
#என் பலகீனங்களின் காட்டில் சுள்ளி பொறுக்காதே
-அறிவுமதி
-மணிகண்டபிரபு