25/11/2020

எம் சி ராஜா

எப்பொழுதும் எனக்குத் தோல்வி இல்லை.ஏனெனில் என்றும் நான் முயற்சியை இழக்கப்போவதில்லை

-எம்.சி.ராஜா

ஓஷோ

முயற்சி எப்போதும் உங்களிடமிருந்து வரும்.அந்த முயற்சியைத் தடுக்கும் சோம்பேறித்தனம் உங்கள் மனதிலிருந்தே வரும்

-ஓஷோ

பாஷோ

எப்போதும் ஆட்டத்தில்
உங்களுக்குத் தெரிந்தவர்கள்தான்
எதிரிகளாக இருப்பவர்கள்

-பாஷோ

ஜெமோ

ஒரு ஊரை நடந்து பார்ப்பது மட்டுமே நீண்டகால அளவில் மனதில் நிற்கிறது. வாகனங்களில் பயணம் செய்து பார்க்கும் அனுபவம் மிக விரைவில் நினைவிலிருந்து அழிந்துவிடுகிறது.நடப்பது அந்த மண்ணுடன் ஓர் உறவை உருவாக்குகிறது.நம் கண்ணும் காதும் காட்சிகளை உள்வாங்கிக் கொள்ள கால அவகாசத்தை அளிக்கிறது

-ஜெமோ

மகுடேசுவரன்

எண்ணெய்

எண்ணை என்று எழுதாமல் எண்ணெய் என்று எழுத வேண்டும்.'எள்ளிலிருந்து பிழியப்படும் நெய்' என்பது பொருள்.எண்ணெய் என்பதே எல்லா விதைப் பிழிவுகளுக்கும் பொதுப்பெயராயிற்று.

-மகுடேசுவரன்

நெப்போலியன்

ஆயிரம் துப்பாக்கி முனைகளை விட நான்கு செய்திப் பத்திரிக்கைகளிடம் அதிக அளவில் பயப்பட வேண்டும்

-நெப்போலியன்

வைகறை

சாவிலிருந்து

ஒரு தூக்குக் கயிறென
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள் !

– வைகறை

ஓஷோ

ஓர் உணர்வின் அடிமட்டத்தைத் தொட்டுவிட்டால் அதன்பின் அதனைத் தாண்டி சென்றுவிடுவீர்கள்

-ஓஷோ

லஷ்மி சரவணகுமார்

ஒருவனோடு நண்பனாகும் போது அவனுக்கு மட்டுமே நண்பனாகிறோம்; எதிரியாகும்போது அவன் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமான எதிரியாகிறோம்

-லஷ்மி சரவணகுமார்

மனுஷ்ய புத்திரன்

நான் உன்னை இன்று
பார்க்க வரலாம் என்றிருந்தேன்
மழை வந்துவிட்டது
அதனால் வரவில்லை

இன்று ஒரு பயணத்தை
திட்டமிட்டிருந்தேன்
மழை வந்துவிட்டது
அதனால் பயணத்தை
ரத்து செய்து விட்டேன்

இன்று ஒரு முக்கியமான
வேலை இருந்தது
மழை வந்துவிட்டது
அதனால் அந்த வேலையை
நிறுத்தி விட்டேன்

இன்று ஒரு ஒப்பந்தத்தில்
கட்டாயமாக கையெழுத்திட வேண்டியிருந்தது
மழை வந்து விட்டது
அதனால் அது நடக்கவில்லை

இன்று சில முக்கியமான பொருள்களை
வாங்கப் போகலாம் என்றிருந்தேன்
மழை வந்து விட்டது
அதனால் ஒன்றையும் வாங்கவில்லை

நலமற்றிருந்த ஒருவரைக் காண வேண்டியிருந்தது
ஒரு திருமணத்திற்குப் போக வேண்டியிருந்தது
ஒரு துக்கம் கேட்க வேண்டியிருந்தது
ஒரு பிறந்த நாள் பூங்கொத்து வாங்க வேண்டியிருந்தது
மழை வந்து விட்டது
எங்கும் போக முடியவில்லை

மழை எல்லாவற்றிற்கும்
ஒரு சமாதானத்தைத் தருகிறது
எல்லா குற்றவுணர்விலிருந்தும் விடுவிக்கிறது

வாழ்வோடு இருக்கும்
மிகப் பெரிய சமரச ஏற்பாடே
இந்த மழைதான் என்று தோன்றும்படி
எல்லாவற்றிற்கும் பதிலியாய்
மழை பெய்து கொண்டேயிருக்கிறது

இந்த மழை மட்டும் இப்படியே 
பெய்து கொண்டிருந்தால் 
எல்லா பொறுப்புகளிலிருந்தும்
விடுபட்டு விடுவேன்

16.11.2020
மாலை 6.13
மனுஷ்ய புத்திரன்

பெட்ரண்ட் ரசல்

Education is not the imparting of a settled body of knowledge; but the inculcation of a spirit of enquiry"

மனிதனைத் தேடவைப்பது தான் கல்வி. தேடிக்கொண்டே இருப்பது கல்வி. தேடல்தான் கல்வி

-பெட்ரண்ட் ரசல்

அறிவுமதி

அறிவுமதி பிறந்ததின பகிர்வு
*மணி

*இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது சந்தித்துக் கொள்ளட்டுமே"

-அறிவுமதி

#"காதல்வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை..
நாணக்குடை நீ பிடித்தும்
வேர்வரைக்கும் சாரல்மழை...!
-அறிவுமதி

#ஊருக்குள் உலவுகிறான்
மார்வாடி
ஒதுக்குப் புறத்தில் ஆதிதிராவிடன்
-அறிவுமதி

#நிகழ்கையில் சாரல்..
நினைக்க நினைக்கத்தான்
மழை.! 

-அறிவுமதி.

#போகிற இடத்தில்
என்னைவிட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்துவிடுவானோ
என்கிற பயம்
நல்லவேளை
நட்பிற்கு இல்லை

-அறிவுமதி

#கொசு வலைக்குள் ஒரு
கொசு...அடடே
மனசாட்சி"!
-அறிவுமதி

#நூல் அறுத்த 
பட்டம்
அனிதா.
- அறிவுமதி.

#இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள் 
வள்ளுவனிடம்.

-அறிவுமதி

#பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்.

-அறிவுமதி.

#எங்கள் தமிழர்கள் தொடர்ந்து திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் !
அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக !

-அறிவுமதி.

#கண்களை வாங்கிக் கொள்ள மறுக்கிறவள் காதலியாகிறாள்,
கண்களை வாங்கிக் கொண்டு உன்னை போல் கண்கள் தருகிறவள் தான் தோழியாகிறாள்
-அறிவுமதி

#அந்த நேரத்துக்கு மட்டும்
அவசியமாய் தேவைப்படுகின்றன
சில கெட்ட வார்த்தைகள்
-அறிவுமதி

#என் பலகீனங்களின் காட்டில் சுள்ளி பொறுக்காதே
-அறிவுமதி

-மணிகண்டபிரபு

ஓஷோ

பயத்தோடு போராடாதே. அப்படிப் போராடினால் மேலும் மேலும் பயப்படத்தான் செய்வாய்.அவ்வாறு பயப்படுவது பயத்தைப் பற்றிய பயம்.

தைரியம் என்பது பயமின்றி இருப்பதல்ல.பயத்தைப் பத்திரமாக வைத்திருப்பதுதான் தைரியம்.

-ஓஷோ

யுகபாரதி

இப்போதுள்ள சிக்கல்
ஒரே மாதிரியானவர்களில்
ஒருவரைத் தேர்ந்தெடுப்பது

-யுகபாரதி

இன்குலாப்

ஏதோ ஒரு மூலையில்
நானும் பூக்கிறேன்
பார்வையில் படவும்
படாமல் உதிரவும்

-இன்குலாப்

பிக்காசோ

என்னால் செய்யமுடியாததையே நான் எப்போதும் செய்கிறேன், அதை எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக.. 

-பிக்காசோ.

கோ.வசந்தகுமாரன்

அரிவாள் மீதேறி,
ஆடு குடித்து,
சந்நதம் கொண்டு ஆடிய
சாமியாடிக்கு,
கூட்டத்தில் ஒருத்தியாய்
மனைவியை கண்டதும்.....
மலையேறியது சாமி.

-கோ வசந்தகுமாரன்

போகன்

உறக்கமா சோகமா
என்று 
கணிக்க முடியாத 
பள்ளிக்குழந்தைகளின் முகங்களை
ஏந்திச் செல்லும்
பேருந்துகள்
வரத் துவங்கும் முன்பு
நாம் நடையை முடித்துக்கொள்ள வேண்டும்.

-போகன்

மகுடேசுவரன்

விடைபெற்றுச் செல்கையில் 
தெருவினின்று 
கண்மறையும் 
கடைசித் திருப்பம்வரை 
என் முதுகைத் தொற்றியபடி 
உடன்வருபவை 
உன்னிரு கண்கள்தாம் என்று 
உறுதியாய் 
அறிவேன் கண்ணே..

மகுடேஸ்வரன்..

வண்ணநிலவன்

எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்து கொண்டேதான் இருக்கிறது.

-வண்ணநிலவன்

23/11/2020

பிரமிள்

சிறகு பறந்து செல்லும் திசையெல்லாம் 
சுதந்திரம்

-பிரமிள்

ஓஷோ

மனத்தின் முரண்பாடுகளில் ஒன்று
எது கிடைத்தாலும் நீ சலிப்படைவாய்,
எது கிடைக்காவிட்டாலும் அதற்காக ஏங்குவாய்
-ஓஷோ

ஸ்டீபன் ஹாக்கிங்

நாத்திகவாதம் ஒரு குற்றம் போல அணுகப்படுவது வேடிக்கையாக உள்ளது. சொர்க்கம் போன்றவை மிக அழகான பொய்களாக நிருபிக்கிறார்கள்.அப்படியான அழகான பொய்களை விட என் போன்றவர்க்கு அவலட்சமான உண்மைகளே அதிக ஈர்ப்புடையது

-ஸ்டீபன் ஹாக்கிங்

08/11/2020

ஓஷோ

மனத்தின் முரண்பாடுகளில் ஒன்று
எது கிடைத்தாலும் நீ சலிப்படைவாய்,
எது கிடைக்காவிட்டாலும் அதற்காக ஏங்குவாய்
-ஓஷோ

ஸ்டீபன் ஹாக்கிங்

நாத்திகவாதம் ஒரு குற்றம் போல அணுகப்படுவது வேடிக்கையாக உள்ளது. சொர்க்கம் போன்றவை மிக அழகான பொய்களாக நிருபிக்கிறார்கள்.அப்படியான அழகான பொய்களை விட என் போன்றவர்க்கு அவலட்சமான உண்மைகளே அதிக ஈர்ப்புடையது

-ஸ்டீபன் ஹாக்கிங்

07/11/2020

ஆன்டன் செக்காவ்

ஒரு துப்பாக்கி சுவரின் மீது மாட்டப்பட்டிருப்பதாகக் கதை துவக்கத்தில் நீ வர்ணிப்பாயானால் கதையின் முடிவில் அது கட்டாயம் வெடித்தாக வேண்டும்.அது வெடிக்கவில்லையெனில் நீ கதையின் முற்பகுதியில் குறிப்பிட்டிருக்கவே கூடாது

-ஆன்டன் செக்காவ்

RT @ivivasai 22

வயசுக்கு மேல ஒருத்தன் ..
எனக்கு பணத்தாசை இல்லைனு சொல்லி சுத்துனானா....
அவன் உழைக்க பயப்படுறானு அர்த்தம்..

RT @erode_kathir

விபரீதமான கற்பனைகளில் இருக்கும் மிக முக்கியமான பயம் 
அதிலிருக்கும் துல்லியம் தான்!

RT @expertsathya

 எல்லாம் தெரிந்தவனிடம் கர்வம் இருந்தால், எதுவும் தெரியாதவனிடம் சுதந்திரம் இருக்கிறது.

RT @Vinuthaas

பெண் பிள்ளை இல்லாத வீடுகளில் அவர்கள் இழப்பது ஒன்றுமில்லை. ஏனெனில் இழப்பதற்கு அங்கு எதுவுமில்லை.

நிர்மலா

நேரத்தோடு உறங்கிப் போகும்
குழந்தைக்காக
மரங்கள்
சேமித்து வைக்கின்றன
நடுநிசி மழையை!

-நிர்மலா

யாத்திரி

நேர்நின்று எதிர்கொள்ளத் துணிவின்றி எங்கோ ஓரமாய் தூரமாய் உனக்கெதிராய் வாள் சுழற்றுபவர்களை அப்படியே விடு, 
அவர்கள் ஏற்கனவே உன்னிடம் தோற்றாயிற்று.

-யாத்திரி

நர்சிம்

ஒரு நிறப்பிரிகை போலத்தான் நீ விலகிப்போனாய் என் எல்லா வண்ணங்களையும் எடுத்துக்கொண்டு

- நர்சிம்

கலீல் ஜிப்ரான்

உன் 
வலியின் 
பெரும்பகுதி 
உன்னால் சுயமாகத் 
தேர்ந்தெடுக்கப்பட்டவையே.!!

~ கலீல்ஜிப்ரான் ~

ராபர்ட் ஃ ப்ராஸ்ட்

உலகில் பாதிப்பேருக்கு சொல்வதற்கு ஏதோ இருக்கிறது.ஆனால் அவர்களுக்கு அதை சொல்லத் தெரியவில்லை.மீதிப்பேருக்குச்
சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனாலும் வாய் ஓயாமல் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

-ராபர்ட் ஃப்ராஸ்ட்

அப்துல் ரகுமான்

Naked truth வெளிப்படையான, நிர்வாண உண்மை

ஒருநாள் பொய்யும்,உண்மையும் குளிக்கச் சென்றன.பொய் குளித்துவிட்டு கரையிலிருந்த உண்மையின் ஆடையை அணிந்து சென்றது.கரைக்கு வந்த உண்மை ஆடையின்றி நிர்வாணமாகவே புறப்பட்டுச் சென்றது.உண்மையிடம் மறைக்க வேண்டியது எதுவும் இல்லை

-அப்துல்ரகுமான்

கலீல் ஜிப்ரான்

உன் 
வலியின் 
பெரும்பகுதி 
உன்னால் சுயமாகத் 
தேர்ந்தெடுக்கப்பட்டவையே.!!

~ கலீல்ஜிப்ரான் ~

யாத்திரி

எங்கோ ஏதோர் குழந்தை துயருறுகையில்
தம் பிள்ளைகளை இழுத்து 
அருகில் போட்டு படுத்துக்கொள்வது
ஒவ்வோர் தகப்பனின் 
ஒவ்வோர் தாயின் 
அனிச்சை
மற்றும்
எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல்.

-யாத்திரி

சுகுமாரன்

எவ்வளவு முயன்றாலும்
காமிரா முன்
புன்னகை செயற்கையாகிறது
எப்படித் தவிர்த்தாலும்
கண்ணாடி முன்
புன்னகைக்கத் தோன்றுகிறது

-சுகுமாரன்

யாத்திரி

எங்கோ ஏதோர் குழந்தை துயருறுகையில்
தம் பிள்ளைகளை இழுத்து 
அருகில் போட்டு படுத்துக்கொள்வது
ஒவ்வோர் தகப்பனின் 
ஒவ்வோர் தாயின் 
அனிச்சை
மற்றும்
எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல்.

-யாத்திரி

ஓஷோ

சமூகம் முட்டாள்களை விரும்புகிறது, முட்டாள்களை எளிதாய் நிர்வகிக்க முடியும். அவர்களுக்கு உத்தரவிடுவதும், அவர்களை கையாள்வதும் அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதும் எளிது. முட்டாள்கள் கீழ்படிகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

கீழ்படிவது குற்றம் என்றால்கூட அவர்களால் கீழ்படியாமல் இருக்க முடியாது. அவர்களை கட்டாயப்படுத்தி எந்திரமாக்கிவிட முடியும்.

சமூகத்துக்கு தேவை எந்திரங்களேயன்றி மனிதர்களல்லர். மனிதனை மேலும் மேலும் முட்டாளாக்கினால் அவன் எந்திரமாகிவிடுவான். பணியாளாக,அதிகாரியாக,நிர்வாகியாக இருப்பான்- ஆனால் அறிவற்றவனாக.

-ஓஷோ

கலீல் ஜிப்ரான்

கடவுள் என்னிடம் உன் எதிரியை நேசி என்றார்
நான் அவரின் சொல்லுக்கு கீழ்படிந்து என்னை நானே நேசித்தேன்

-கலீல் ஜிப்ரான்