30/06/2018

ச.மாடசாமி

*பரிசோதனை காலத் தனிமையும் வாசிப்பின் தோழமையும்...*

பரிசோதனைகளின் மீது ஆர்வமும் அங்கிகாரத்தின் மீது ஏக்கமும் கொண்ட ஆசிரியர்களிடம் எப்போதும் இரண்டு நூல்களை வாசிக்கச்சொல்வேன்.ஒன்று டோட்டோ சான்.
மற்றொன்று
பகல் கனவு.

வகுப்பறை பரிசோதனை களமாக மாற வேண்டும் என்று நாம் கூறுவது புதுமை மீது கொண்ட ஆர்வத்தால் அல்ல.

சலிப்பற்ற வகுப்பறையில் தான் பாடம் கனமற்றுப் போகும் ஒரு குழந்தையும் விடுபட்டுப் போகாது என்பதாலேயே.

கல்விப் பரிசோதனை என்பது இப்போது புதிய விஞ்ஞானக் கருவிகளை வகுப்பறைக்கு கொண்டு வருவது என்றாகி விட்டது.
வரவேற்போம்.
ஆனால் ஆசிரியரின் கற்பனையும் மாணவரின் ஈடுபாடும் கைகோர்க்கும் போது உண்டாகும் அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கருவிகளால் தரவியலாது.

கருவிகளை விட ஆசிரியர் முக்கியமானவர்.
ஆசிரியரின் கற்பனை முக்கியமானது.

அதனால் தான் பகல்கனவில் வரும் மீசை கிஜூபாய் ஆசிரியரும்
டோட்டோ சானில் வரும் ஓட்டைப்பல் கோபயாட்சியும் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள்.
நம்மை புதுப்பிக்கும் சக்தியோடு வாழ்கிறார்கள்....
_பேராசிரியர்.ச.மாடசாமி.
(வெற்றி).

28/06/2018

ச.மாடசாமி

*பரிசோதனை காலத் தனிமையும் வாசிப்பின் தோழமையும்...*

பரிசோதனைகளின் மீது ஆர்வமும் அங்கிகாரத்தின் மீது ஏக்கமும் கொண்ட ஆசிரியர்களிடம் எப்போதும் இரண்டு நூல்களை வாசிக்கச்சொல்வேன்.ஒன்று டோட்டோ சான்.
மற்றொன்று
பகல் கனவு.

வகுப்பறை பரிசோதனை களமாக மாற வேண்டும் என்று நாம் கூறுவது புதுமை மீது கொண்ட ஆர்வத்தால் அல்ல.

சலிப்பற்ற வகுப்பறையில் தான் பாடம் கனமற்றுப் போகும் ஒரு குழந்தையும் விடுபட்டுப் போகாது என்பதாலேயே.

கல்விப் பரிசோதனை என்பது இப்போது புதிய விஞ்ஞானக் கருவிகளை வகுப்பறைக்கு கொண்டு வருவது என்றாகி விட்டது.
வரவேற்போம்.
ஆனால் ஆசிரியரின் கற்பனையும் மாணவரின் ஈடுபாடும் கைகோர்க்கும் போது உண்டாகும் அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கருவிகளால் தரவியலாது.

கருவிகளை விட ஆசிரியர் முக்கியமானவர்.
ஆசிரியரின் கற்பனை முக்கியமானது.

அதனால் தான் பகல்கனவில் வரும் மீசை கிஜூபாய் ஆசிரியரும்
டோட்டோ சானில் வரும் ஓட்டைப்பல் கோபயாட்சியும் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள்.
நம்மை புதுப்பிக்கும் சக்தியோடு வாழ்கிறார்கள்....
_பேராசிரியர்.ச.மாடசாமி.
(வெற்றி).

கல்யாண்ஜி

எல்லோரும் புழுதியைத் துடைத்துவிட்டு
உட்கார்கிறார்கள்
நான் புழுதியின்மீதே உட்காருகிறேன்

நானும் புழுதி என்பதும் ஒன்று

என் மேலும் படியட்டும் புழுதி என்பது
இன்னொன்றாக இருக்கலாம்

உலகத்தில் துடைக்க முடியாதது
எவ்வளவோ வேறு இருக்கிறது
என்னையும் புழுதியையும் தவிர!

* கல்யாண்ஜி

இளங்கோவன்

கைக்குழந்தைகளுக்கு
சோறூட்டுகையில்
பூச்சாண்டியாகவும்,

குட்டிகளை வைத்து
ரவுண்டடிக்கும்போது
சைக்கிள் தாத்தாவாகவும்,

இரண்டு மகள்களைப்
படிக்க வைத்து, பின்
கட்டிக்கொடுத்த
பொறுப்பான தகப்பன் சாமியாகவும்,

மெதுவாகத் தோள்தொட்டு
நல்லாயிருக்கீங்களா தம்பி
எனும்போது மதிப்பிற்குரிய பெரியவராகவும்,

யாருடைய பிள்ளைகளுக்கோ
கல்விக் கட்டணம் செலுத்த,
யார் வீட்டு வாசலிலோ
தவங்கிடக்கையில் கடவுளாகவும்,

ஓடாத மில்லின் சக
தொழிலாளர்களுக்கு
நீதி கேட்டுப் போராடும்
மாதாந்திரச் சடங்கில்
தோழர் பாத்திரத்திலும்,

அழகாகப் பொருத்திவிட முடியும்
அருணகிரி அய்யாவை...

இடுப்பில் நிற்காத கால்சட்டையை
பெல்ட் போட்டு இறுக்கி,
ஒரு பக்கமாய்ச் சரியும்
தொப்பியைப் பதறியபடி சரிசெய்து,
அப்பார்ட்மெண்ட் செகரெட்டரிக்கு
வளைந்து, வலிந்து வணக்கம்
வைக்கும்போது மட்டும்,
ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை
ஆஃபீஸ் செக்யூரிட்டியாக மட்டும்.  (இளங்கோவன்)

ஜி நாகராஜன்

மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் 'மனிதன் மகத்தான சல்லிப்பயல்' என்றுதான் சொல்வேன்.

-ஜி.நாகராஜன்

யுகபாரதி

ஊரிலிருந்து கிளம்புகையில்
அழுகை வந்தது
ஊரைப் பிரிந்த ஒருவனால்
அழ மட்டும்தான் முடிகிறது
-யுகபாரதி

படித்தது

"புல்லின் மீது நடக்காதீர்கள்.நாலு பேருக்குத் தெரியும்படி வளர்வதற்கு நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பதை நினைத்து நடக்கவும்"!
-p

யுகபாரதி

ஊரிலிருந்து கிளம்புகையில்
அழுகை வந்தது
ஊரைப் பிரிந்த ஒருவனால்
அழ மட்டும்தான் முடிகிறது
-யுகபாரதி

யாழிசை

இல்லாத மீதிச் சில்லறைக்கு
சேர்த்து வாங்கிக் கொண்டேன்
கூடுதலாய் ஒரு முழம் காதல்
-யாழிசை

25/06/2018

வெற்றி

இதயம்
முழுவதும்
நினைப்பு
முழுவதும்
உன்
நினைவுகளாக
நீ
இருக்கும் போது
நீ
என்னுடன்
வாழ்ந்தால் என்ன
வாழவிட்டால் என்ன
உன்
நினைவுகளுடனேயே
வாழ்ந்து விடுவேன்..
_வெற்றி.

வெற்றி

உன்
ஒற்றை
அழைப்பு
உயிரை
நிரப்பி விடுகிறது.
_வெற்றி...

23/06/2018

சொரூபா

உன் அழைப்பென்றெண்ணி எடுத்த
அலைபேசியில்
அழைத்தது யாரென்றாலும்...

யாரோதான்.

-சொரூபா

பாவண்ணன்

ஒரு பெண் இல்லாத வெறுமைக்கு ஒரு பொழுதையே சலிப்புமிக்கதாக மாற்றும் ஆற்றல் எப்படியோ வந்துவிடுகிறது. நம்மைச் சுற்றி நிகழும் பல ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று.

-பாவண்ண்ன்

சொரூபா

உன் அழைப்பென்றெண்ணி எடுத்த
அலைபேசியில்
அழைத்தது யாரென்றாலும்...

யாரோதான்.

-சொரூபா

பாப்லோ நெரூடா

என் அன்பு,
உன் கைகளை விட்டிறங்க மனமில்லாத
ஒரு குழந்தையைபோல.
அதை என்றைக்குமாக
உன்னிடம் ஒப்படைக்கிறேன்.
- பாப்லோ நெரூடா.

லா.ச.ர

தோல்வியும் வெற்றியும் மனநிலைகள்தான்.ஆனால் இதை உணர்வதை நிர்வகிப்பதற்கு இன்னொரு மனநிலை வேண்டும்
-லா.ச.ரா

லா.ச.ர

தோல்வியும் வெற்றியும் மனநிலைகள்தான்.ஆனால் இதை உணர்வதை நிர்வகிப்பதற்கு இன்னொரு மனநிலை வேண்டும்
-லா.ச.ரா

ந.சிவநேசன்

நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்

நம்முடைய                 

செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்

நம்முடைய
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்
                                                                                     

நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை.

அதை ரசிக்கும்
பொழுதுகளில்
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!”
                  -  ந. சிவநேசன்.

யுகபாரதி

உன் முந்தானையால்
தலை துவட்டி விடுவாய்
என்பதற்காகவே
குடை மறந்து
வந்த மழைநாளில்
ஜீன்ஸும்
டிஷர்டுமாய்
நின்றிருந்த உன்னை
என்ன சொல்லி
திட்டுவது

-யுகபாரதி

ஜெயகாந்தன்

நீங்கள் அழகு என்றால் என்ன நினைக்கின்றீர்களோ தெரியாது
யாரைப் பற்றி நினைத்தால் மனதிற்கு இன்பமாக இருக்குமோ
அவர்கள் எல்லாம் அழகானவர்கள் தான்.

ஜெயகாந்தன்

ஸ்நோலின்

"பேசாத வார்த்தைகளைவிட
பார்க்காத கண்களைவிட
நினைத்துக்கொண்டிருக்கும் வலி அதிகம்"

_தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 18 வயது நிரம்பிய ஸ்நோலின் வரிகள்..

22/06/2018

வெற்றி

உன்
ஒற்றைக்குரலுக்கு
ஏங்கித்தவிக்கும்
எளிய உயிர்
நான்...
_வெற்றி.

21/06/2018

பிரபஞ்சன்

“வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம்.
-பிரபஞ்சன்

வெற்றி

உன்
சிறு
தீண்டலினால்
நான் குழந்தை
ஆகிவிடுகிறேன்.
_வெற்றி.

20/06/2018

பிரபஞ்சன்

“வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம்.
-பிரபஞ்சன்

நா.முத்துக்குமார்

பேருந்தில் இடம்பிடிக்க
பூச்சரத்தை ஜன்னல் வழிவைக்கிறாள்
கைக்குட்டை இல்லாத பெண்
-நா.முத்துக்குமார்

யாத்திரி

முன்போல் அன்பில்லை எனாதே,
அடிக்கடி உபசரித்துக் கொண்டிருக்க இப்போது நீ விருந்தினர் அல்ல, சொந்தக்காரி!

-யாத்திரி

மனுஷ்ய புத்திரன்

யாரோ ஒருவருக்காக
...................................
நான் உயிராக நேசிக்கும் உன்னை
இன்னொருவரும் உயிராக நேசிக்கலாம்

நீ உயிராக நேசிக்கும் என்னை
இன்னொருவரும் உயிராக நேசிக்கலாம்

நமது இந்தக் காதலுக்குள்
எப்போதும் நிரம்பியிருப்பது
நாம் அல்ல
அந்த இன்னொருவர்

நாம் அத்தனை இறுக்கமாக
ஒருவருக்கொருவர் பற்றிக் கொள்வது
நமக்காக அல்ல
யாரோ ஒருவருக்காக

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்

யாரோ ஒருவருக்காக
...................................
நான் உயிராக நேசிக்கும் உன்னை
இன்னொருவரும் உயிராக நேசிக்கலாம்

நீ உயிராக நேசிக்கும் என்னை
இன்னொருவரும் உயிராக நேசிக்கலாம்

நமது இந்தக் காதலுக்குள்
எப்போதும் நிரம்பியிருப்பது
நாம் அல்ல
அந்த இன்னொருவர்

நாம் அத்தனை இறுக்கமாக
ஒருவருக்கொருவர் பற்றிக் கொள்வது
நமக்காக அல்ல
யாரோ ஒருவருக்காக

மனுஷ்ய புத்திரன்

19/06/2018

ரூமி

சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டதொரு வெளி உண்டு..
அங்கு சந்திப்பேன் உன்னை..!!.

- ரூமி

மு.மேத்தா

செருப்புகள் சருகுகளை மிதிக்கிறபோது சப்தமிடுகின்றன, மலர்களை மிதிக்கும்போது
மவுனம் சாதிக்கின்றன

-மு.மேத்தா

ரூமி

சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டதொரு வெளி உண்டு..
அங்கு சந்திப்பேன் உன்னை..!!.

- ரூமி

ரோஸ்லின்

உனக்கு தேவைப்படாத
எனது பிரியங்களை
இலைகளைப் போல
உதிர்த்துப் போட்டேன்
அள்ளவியலாத சருகுகளால்
அடைந்து கிடக்கிறது என் வனம்
-ரோஸ்லின்

சரவணன் சந்திரன்

"மன்னன் எங்கே வியாபாரம் செய்கிறானோ, அங்கே மக்கள் பிச்சையெடுப்பார்கள்"
-சரவணன் சந்திரன்

பாதசாரி

அடுத்தவனை பாதிக்காத எந்த மூடநம்பிக்கையும் மூடநம்பிக்கை அல்ல,அடுத்தவனை பாதிக்கிற எந்த பகுத்தறிவும் மூடநம்பிக்கைதான்
-பாதசாரி

பாதசாரி

அடுத்தவனை பாதிக்காத எந்த மூடநம்பிக்கையும் மூடநம்பிக்கை அல்ல,அடுத்தவனை பாதிக்கிற எந்த பகுத்தறிவும் மூடநம்பிக்கைதான்
-பாதசாரி

டாட் ஸ்கின்னர்

"ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்று அர்த்தம்"

-டாட் ஸ்கின்னர்.

17/06/2018

சுகிர்தராணி

இரவு மிருகம்...

பருவப்பெண்ணின் பசலையைப் போல
கவிழத் தொடங்கியிருந்தது இருள்.
கதவடைத்துவிட்டு மஞ்சள் ஒளியில்
தனியாக அமர்ந்திருந்தேன்.
அப்போது தான் தினமும் விரும்பாத அதன் வருகை நிகழ்ந்தது.
நான் பார்த்துக்கொண்டுருக்கும்போதே
என்னை உருவி எடுத்துவிட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது.
நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே
படித்து முடித்திருந்தேன்
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்ஶ்ரீஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிளைய வழியும் மதுவோடு என்னூடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களைச்
சன்னமாய் சொல்லியவாறு
சுயப்புணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டு விட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்.
_சுகிர்தராணி.

முகில் முருகேசன்

வேண்டுதல்

மேற்கூரையில் அமர்ந்து
விடியலைக் கூவியெழுப்பும் சேவல்
குப்பைமேடு கிளறி
ஒழுங்கீனம் செய்கிறது
குடிசைக்குள் ஊடுருவும்
ஊர்வன ஜந்துக்களை
விரட்டிக் கொல்கிறது
மும்மாரி பொழிந்து
பட்டி பெருக
அம்மனுக்குத் தாத்தா நேர்ந்துவிட்ட
சேவல் அது.
மழை இல்லாமல்
விளைநிலங்கள் வெடிப்பதைக்
காணச் சகிக்காமல்
மாரடைப்பில் உயிர்நீத்தார் தாத்தா
வீட்டின் தாழ்வாரத்தில் செருகிய
சேவல் இறகு மட்டும் மிச்சமாய்...

- முகில் முருகேசன்

16/06/2018

வெற்றி

உன் அன்பின்
நினைவுகளினால்
எனக்கு
தூக்கமில்லா
இரவுகள்...
_வெற்றி.

வெற்றி

உன் நினைவுகள்
கரையானைப்
போன்று அரிக்கிறது
மனதை...
_VG

க.ஆனந்த்

பொம்மை

அழுக்காயிருக்கிறதென்று
மூக்கு சரியில்லையென்று
நிற்க வைத்தால்
விழுந்து விடுமென்று
இந்த கலர் சரியில்லையென்று
இதை விட
நல்லதாய்ப் பார்க்கலாமென்று
இது உன்னை விட
வயதில் பெரியவர்களுக்கென்று
ஒவ்வொன்றாய்
தவிர்த்த பின்
கடைசியாய்
ஒரு பொம்மையைக்
கை காட்டிச் சொன்னது
குழந்தை
“அப்பா
இந்த பொம்மை
விலை கம்மிதான்..!”

  -  க. ஆனந்த்.

ஜெயகாந்தன்

எப்பொழுதும் நாம் கடைப்பிடிக்க வேண்டியது...
தன்னை மீறி பிறர் மீது அன்பு செலுத்துவது.
இதன் பொருட்டு உயிர் போகுமென்றால் போகட்டும்.
பகை, வெறுப்பால் உயிர் போவதை விட அன்பினாலும், பாசத்தினாலும் போகட்டும்.

~ ஜெயகாந்தன்

வெற்றி

எனது மூளை
பிடிக்கும் என்கிறாய்...
இன்னும்
இன்னும்
உன்னை
சொற்களால்
ஆராதிப்பேன்.
உனக்குள்
நான்
இறங்கும் வரை....
_வெற்றி.

ச.மாடசாமி

*ஒவ்வொரு அவமதிப்பும் ஒரு மரணம்...*

மரணத்தை விட மோசமானது வலி என்கிறது மருத்துவம். அவமதிப்பும் அப்படித்தான். மரணத்தை விட மோசமானது.

குழலி என்று அழகாகப் பெயர் சூட்டப்பட்ட குழந்தை இப்படிக் கலங்கி அழுவதாக அவளுடைய அம்மா சொன்னார்.

"வாத்தியார் கெழவி கெழவி ன்னு சிரிப்பு காட்டி கூப்பிடுகிறார் மா.பசங்கள்ளாம் சிரிக்கிறாங்க!.எனக்கு ஏன் இந்தப்பேரு வச்சீங்க!.இந்த விசும்பலுக்குள் மரணத்தின் வாசனை இல்லையா?.ஒவ்வொரு அவமதிப்பும் ஒரு மரணம்.

கூப்பாடு போட்டு வரும் மரணங்கள் முடிவுரையாக வெளிப்பட்டு நிற்கின்றன. ஆனால் அவற்றின் முகவுரையாக வீடுகளிலும் பள்ளிகளிலும் சத்தமில்லாமல் நிகழும் மரணங்களை எப்போது நாம் வாசிக்க போகிறோம்..?.
_பேராசிரியர். ச.மாடசாமி.

ச.மாடசாமி

*ஒவ்வொரு அவமதிப்பும் ஒரு மரணம்...*

மரணத்தை விட மோசமானது வலி என்கிறது மருத்துவம். அவமதிப்பும் அப்படித்தான். மரணத்தை விட மோசமானது.

குழலி என்று அழகாகப் பெயர் சூட்டப்பட்ட குழந்தை இப்படிக் கலங்கி அழுவதாக அவளுடைய அம்மா சொன்னார்.

"வாத்தியார் கெழவி கெழவி ன்னு சிரிப்பு காட்டி கூப்பிடுகிறார் மா.பசங்கள்ளாம் சிரிக்கிறாங்க!.எனக்கு ஏன் இந்தப்பேரு வச்சீங்க!.இந்த விசும்பலுக்குள் மரணத்தின் வாசனை இல்லையா?.ஒவ்வொரு அவமதிப்பும் ஒரு மரணம்.

கூப்பாடு போட்டு வரும் மரணங்கள் முடிவுரையாக வெளிப்பட்டு நிற்கின்றன. ஆனால் அவற்றின் முகவுரையாக வீடுகளிலும் பள்ளிகளிலும் சத்தமில்லாமல் நிகழும் மரணங்களை எப்போது நாம் வாசிக்க போகிறோம்..?.
_பேராசிரியர். ச.மாடசாமி.

ச.மாடசாமி

*தப்பித்த குரங்குகள் முக்கியமானவை...*
"வடிவமைக்கப்படாமல் தப்பித்தது எதுவோ.அதுவே உன் ஜீவன் மிக்க சாராம்சம்" என்று சிந்தனையாளர்கள் சொல்வதுண்டு.

"தப்பித்த குரங்குகள்" என்று அதை வேடிக்கையாக கல்வி உரையாடலில் நாங்கள் குறிப்பிடுவதுண்டு.

யார் கைகளும் படாமல்,யார் கைகளிலும் சிக்காமல் தப்பித்தவைதான் ஒரிஜினல். வடிவமைக்கப்பட்டதெல்லாம் ஜெராக்ஸ்தான்.

பள்ளிக்கூடம் உலகத்தின் மிகப்பெரிய நிறுவனம்.largest enterprise!
தப்பிப்பது சுலபமா?.
அசல் முகத்தை திட்டமிட்டு கரைக்கிற  இடம்.

ஆசிரியர்கள் தட்டி  உருட்டி காயம்போட்ட முகம்.

மத்தியவர்க்கம் ஆணாதிக்க பாடத்திட்டம் வழங்கிய முகம்.

வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் கார்ப்ரேட்டுகள் விரும்பிய முகம்.

என எல்லா முகங்களும் இருக்கின்றன.

சொந்த முகம் எங்கே?.எங்கே என் ஒரிஜினல் குரங்கு.?

கல்வி உரிமைச்சட்டம் போன்றவை அதட்டல் அதிகாரங்கள் மீது கேள்வி எழுப்பலாம். ஆனால் *அக்கறை* என்ற பெயரில் உலவும் *நுட்பமான அதிகாரங்கள்* எப்போதும் நிலைத்திருக்கின்றன.

வடிவமைத்தல்
மதிப்பிடுதல்
வடிகட்டுதல் எனப் பல வடிவங்களில் இருக்கின்றன நுட்பமான அதிகாரங்கள்.

எட்டாம் வகுப்பு வரை தேர்வு வைத்து வடிகட்ட முடியாமல் போகலாம். ஆர்வத்துடன் மேடையேற வந்த முகங்களில் *எண்ணெய் வடியும் கறுப்பு மூஞ்சிகளை* வடிகட்டித் துரத்துவதில் யார் குறுக்கிட முடியும்?.

வடிகட்டும் வேலையைச் செய்வோர் பலர் கறுப்பர்களாக இருப்பதும் ஒரு முரண்.
_பேராசிரியர்.ச.மாடசாமி.
(வெற்றி)

15/06/2018

வெற்றி

உனது
பிரிவு
எனதுயிரையும்
என்னிடமிருந்து
பிரித்து விடுகிறது...
_வெற்றி

நாஞ்சில் நாடன்

*காதல் போயின் காதல் போயின்*

இனிது காதலி திருமுகம் கண்டல்

இனிது காதலி மென்சொல் கேட்டல்

இனிது காதலி குறுஞ்செய்தி பார்த்தல்

இனிது காதலி எண்ணி இருத்தல்

இனிது காதலி கனவில் தோன்றல்

இனிது காதலி மெய்ப்புறம் தீண்டல்

இனிது காதலி வாய்ச்சுவை அறிதல்

இனிது காதலி முலைதலை சாய்த்தல்

இனிது காதலி அல்குல் தைவரல்

காதல் காதல் காதல்

காதல் போயின், காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

இனிது அவட்காய் மரித்தல் தானே!

பெற்றவர் உற்றவர் நட்பினர் அல்லால்

மரித்தால் எவர்க்கும் இல்லை சேதம்

1,24,66,39,478இல் ஒன்று

இருந்தால் என்ன? இறந்தால் என்ன?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!!

        *-நாஞ்சில் நாடன்*

14/06/2018

வெற்றி

உனது
கடைசிப்பார்வையையும்
அதனூடான
ஏக்கங்களையும்
நான் மட்டுமே
அறிவேன்...
_வெற்றி

வெற்றி

நாம் ஓட்டுவது தெரியாமல் நமக்கு விளக்கம் தரும் நண்பரை பெற்றவர்களே ஆகச்சிறந்த பாக்கியவான்கள்...
_வெற்றி.

வெற்றி

T வருவதால் Teacher யை பெண்பாலில் சேர்த்து விடுகிறோம். இது ஆணாதிக்க சமூக உளவியல்...
_வெற்றி

13/06/2018

பழனிபாரதி

மீன்கள் தெறித்து விழும் சிலிர்ப்பில்
தளும்பிய உன் உடலில்
பூக்களை விலக்கி
ஒரு கை அள்ளிப் பருகுகிறேன்

விளிம்புவரை நெகிழ்ந்தோடி வந்து
உடைகின்றன
உன் வெட்கத்தின் சிற்றலைகள்
முழுதும் அருந்த இயலாத
என் முகத்தில் தெறித்தபடி

#பழநிபாரதி
(தண்ணீரில் விழுந்த வெயில்)

எஸ்.ரா

கற்றுக் கொள்வதற்கு வயதோ ,சூழலோ தடைகளாக இல்லை. நமது விருப்பமின்மை தான் எப்போதும் பெரிய தடையாக இருக்கிறது ..
        எஸ். ரா.

12/06/2018

எஸ்.ரா

கற்றுக் கொள்வதற்கு வயதோ ,சூழலோ தடைகளாக இல்லை. நமது விருப்பமின்மை தான் எப்போதும் பெரிய தடையாக இருக்கிறது ..
        எஸ். ரா.

எஸ் ரா

நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பணி எழுத்து.
ஆகையால் அங்கிகாரத்தை அடையாளத்தை எதிர்நோக்கவில்லை.

-எஸ்.ராமகிருஷ்ணன்.

11/06/2018

எஸ்.ரா

கற்றுக் கொள்வதற்கு வயதோ ,சூழலோ தடைகளாக இல்லை. நமது விருப்பமின்மை தான் எப்போதும் பெரிய தடையாக இருக்கிறது ..
        எஸ். ரா.

எஸ்.ரா

எந்த மனிதனும் தேவையற்றவன் இல்லை;எந்த வாழ்க்கையும் பயனற்றதும் இல்லை.
        எஸ். ரா.

ப.பி

பாராபட்சமின்றி
பார்வை
பறிமாறிக் கொள்வோம்...
நினைத்த
நிமிடத்தில்
கைக்கோர்த்துக் கொள்வோம்....
விரும்பிய
வாகனத்தில்
பயணிப்போம் ....
பேசியே
நேரத்தை
போக்குவோம்....
கண் மூடித்தனமாக இருந்தாலும்
கற்பனையில் உன்னோடு வாழ்வது
கனமான சுகம் தான்.....

வெற்றி

வாழ்வின்
இறுதிவரை
நீ
வர வேண்டும்
மூச்சு காற்றாய்
_வெற்றி...

வெற்றி

வாழ்வின்
இறுதிவரை
நீ
வர வேண்டும்
மூச்சு காற்றாய்
_வெற்றி...

வெற்றி

உன்
மடியில்
மரணமித்திருக்க
வேண்டும்..
_வெற்றி.

10/06/2018

பேயோன்

நாம் வாழ்த்தி யாரும் வாழ்ந்துவிடப்போவதில்லை என்பது ஓர் ஆறுதல்.

-பேயோன்

09/06/2018

பேருந்து பயணம்

பேருந்துப் பயணம் என்பது ஒரு நாயைப் பழக்குவதைப் போன்றது. அதற்கு தினமும் பேருந்தில் பயணிக்க வேண்டும். ஆனால், தினமும் பேருந்தில் பயணித்தல் என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடும் பாக்கியம் அல்ல. பேருந்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென்றால் பேருந்துடன் ஒர் ஒன்றுதல் ஏற்பட வேண்டும். முக்கியமாகப் பொறுமை வேண்டும். பொறுமையில்லாதவர்களுக்கு பேருந்து உகந்ததல்ல.

-படித்தது

மனுஷி

கூடு திரும்ப மறந்த பறவை
நீ.
சலனமற்றுக் காத்திருக்கும் மரம்
நான்.
- மனுஷி

பழனிபாரதி

அலைகள் தியானிக்கும்
உன் ஆழத்தில்
நீர்த்தாவரம் நுகரும்
மீன் நான்

தரை தட்டவுமில்லை
கரை எட்டவுமில்லை

உன் அழுத்தப் பரப்பிலேயே
நீந்திக்கொண்டிருக்கிறேன்

# பழநிபாரதி
(முத்தங்களின் பழக்கூடை)

08/06/2018

மனுஷி

கூடு திரும்ப மறந்த பறவை
நீ.
சலனமற்றுக் காத்திருக்கும் மரம்
நான்.
- மனுஷி

பேருந்து பயணம்

பேருந்துப் பயணம் என்பது ஒரு நாயைப் பழக்குவதைப் போன்றது. அதற்கு தினமும் பேருந்தில் பயணிக்க வேண்டும். ஆனால், தினமும் பேருந்தில் பயணித்தல் என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடும் பாக்கியம் அல்ல. பேருந்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென்றால் பேருந்துடன் ஒர் ஒன்றுதல் ஏற்பட வேண்டும். முக்கியமாகப் பொறுமை வேண்டும். பொறுமையில்லாதவர்களுக்கு பேருந்து உகந்ததல்ல.

-படித்தது

லீனா மணிமேகலை

போய் வருகிறேன்

இப்போதெல்லாம்
போய் வருகிறேன்
என்று யாரும் சொல்லிச் செல்வதில்லை

அப்படியே மறைந்துப் போகிறார்கள்

வழியனுப்பும் வகையில்லாமல்
சேமித்து வைத்திருக்கும் கண்ணீரில்
சில துளிகள்
கவனிக்கப்படாமல் வழிகின்றன

தொடர்பறுந்து போன
உரையாடலின் இறுதி வரி
நம்முடையதாக இருக்கும்போது
விம்மும் மனதை தேற்ற
உரியவரின் பதில் வரியையும்
நாமே எழுதிக்கொள்ள வேண்டியிருக்கிறது

நினைவாக மறுக்கும் நினைவாக
விடாமல் துரத்தும்
அருகாமை சூட்டையும், வாசத்தையும்,
ஈரத்தையும், தீண்டலையும், பார்வையையும்
இல்லை என்று ஒரு இறுதியாகாத சொல்
எதிர்கொள்ள முடியாமல் மாள்கிறது

ஒரேயடியாக யாரும்
போய்விடுவதில்லை தான் என்றாலும்
விடைகொடுத்தல்
இல்லாத பிரிவு
எழுதி முடிக்கப்படாத கவிதையை
ஒரு செத்த எலியாக்கி
காக்கையிடம் கையளிக்கிறது

-லீனா மணிமேகலை

பேருந்து பயணம்

பேருந்துப் பயணம் என்பது ஒரு நாயைப் பழக்குவதைப் போன்றது. அதற்கு தினமும் பேருந்தில் பயணிக்க வேண்டும். ஆனால், தினமும் பேருந்தில் பயணித்தல் என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடும் பாக்கியம் அல்ல. பேருந்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென்றால் பேருந்துடன் ஒர் ஒன்றுதல் ஏற்பட வேண்டும். முக்கியமாகப் பொறுமை வேண்டும். பொறுமையில்லாதவர்களுக்கு பேருந்து உகந்ததல்ல.

-படித்தது