23/06/2018

ந.சிவநேசன்

நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்

நம்முடைய                 

செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்

நம்முடைய
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்
                                                                                     

நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை.

அதை ரசிக்கும்
பொழுதுகளில்
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!”
                  -  ந. சிவநேசன்.