08/06/2018

தேவதேவன்

ஆறிவரும் தழும்பின்
நமநமப்பு அழைக்கிறது
அன்பின் வருடலை
மீண்டும் புண்ணாக்குவதற்கோ
அன்பின் மிகுதியை
அது அலாவுகிறது

-தேவதேவன்