18/07/2021

மகேசிண்டே பிரதிகாரம்

மகேசிண்டே பிரதிகாரம் (தமிழில் நிமிர்) படத்தில் பகத் பாசிலின் அப்பா சொல்லுவார்.

"புகைப்படக்கலையில் தேவை பொறுமை.அந்த ஒரு நிமிடம் ஒரு தருணத்துக்காக எவ்வளவு நேரம் வேணாலும் காத்திருக்கனும்"

எஸ்.ரா

சோறு என்பதற்கு அடிசில்,கூழ்,அழினி,அவிழ்,கொன்றி,நிமிரல்,புழுங்கல்,பொம்மன்,மிதவை என பல சொற்கள் தமிழில் உள்ளன
-எஸ்.ரா

தொ.ப

இயற்கையல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். எனவே அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்பந்தல் அமைப்பதும் தமிழர்களின் வழக்கம்.

-தொ.ப

பாக்யம் சங்கர்

சுதந்திரம் இல்லாவிட்டால் சொர்க்கம் கூட நரகம் தான்

-பாக்யம் சங்கர்

க.வை.பழனிச்சாமி

பறந்து போகும் பட்டாம் பூச்சிகளோடு என் கண்களும் போயின

-க.வை.பழனிசாமி

உமா மகேஸ்வரி

காத்திருக்கிறது அந்தக்கூடு
தன் சொந்தப் பறவைக்கென

-உமா மகேஸ்வரி

தொ.ப

குட்டை, மழைநீரின் சிறிய தேக்கமாகும்.
குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம்' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல்' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

-தொ.ப