18/07/2021

மனுஷ்ய புத்திரன்

இன்று 
ஓர் இலை உதிர்ந்தபோது
ஒரு மரம் அதிர்ந்ததைப் பார்த்தேன் 
ஒரு குருவி 
திடீரென்று பறந்தபோது 
காற்றில் ஒரு விரிசலைக்கேட்டேன் 
இவ்வளவு மெலிதானதை 
உன்னிடம் எப்படிக் கொண்டுவருவது
என்றுதான் தெரியவில்லை

-மனுஷ்யபுத்திரன்