13/09/2020

சுகுமாரன்

அளவு
*******
‘மல்லீப்பூ மொளம் பத்து ருவா’
சிறுகையால் சரமளந்து
கொஞ்சம் கொசுறும் விட்டுக் காண்பித்த
பூக்காரக் குழந்தையிடம் சொன்னார்:
‘இந்த முழத்துக்கா பத்து ரூபாய்?’
சரத்தை வாங்கி
நெடுங்கையால் துல்லியமாக அளந்து காட்டி
முறித்து வாங்கினார்,
நெடிய முழத்துக்கும் சின்ன முழத்துக்கும்
இடையிலான துண்டுச்சரத்தில்மட்டும்
மல்லிகைகள்
வாடியிருந்தன சோகம் தாளாமல்.

- சுகுமாரன்

தமிழன்பன்

தொட்டி மீன் குளத்தில் விட்டதும்
நீந்தியது
தொட்டி அளவில்.!

-தமிழன்பன்

புத்தர்

எங்கே ஆசை இருக்கிறதோ
அங்கே மெளனித்து விடு

-புத்தர்

பாரதிதாசன்

அருவியின் வீழ்ச்சி போல நெஞ்சிலிருந்து கவிதை சலசலவென்று பெருகி உருவாக வேண்டும். கவிதையை உருவாக்க வேண்டும் என்பதற்காக வலிந்து சொற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்க கூடாது..

#பாரதியிடம் கற்றுக் கொண்டதாக பாரதிதாசன்

10/09/2020

பாங்கேய்

ஒருவன் அடுத்தவரது வெற்றியை வாழ்த்திப் பேசினால் அதில் பொறாமை ரகசியமாய் மறைந்திருக்கும்.

அடுத்தவரின் இழப்பிற்கு வருந்தினால் அதில் மகிழ்ச்சி ரகசியமாய் மறைந்திருக்கும்.

-பாங்கேய்

மகுடேசுவரன்

தமிழில் 'ழ'கரத்தைப் போல மேன்மையான மற்றொன்று 'ற்' கரமாகும்.ழகரத்தை உச்சரிக்கும் போதுள்ள தனிச்சிறப்பு றகரத்துக்கும் பொருந்தும்.வல்லினத்தில் ற கரமே தலையானது.'ஒன்று', 'கன்று' எனும்போது வல்லொலி குன்றாமல் ஒலிக்கும்

-மகுடேசுவரன்

எஸ்.ரா

சாப்பிடத் தெரியாத குழந்தை விருந்தில் கிடைத்த அனைத்தையும் அள்ளி வாயில் இட்டுக் கொள்வது போல் உள்ளது வாழ்க்கை..

எஸ்.ரா..

யுகபாரதி

ஆற்றுப்படுக்கைகளில்
அடுக்ககங்கள் வந்தபின்பே கிடைத்தது
சிவனாண்டி சித்தப்பாவுக்கு
செக்யூரிட்டி வேலை

-யுகபாரதி

யாத்திரி

பேசவே கூடாதெனும் வைராக்கியமெல்லாம் பிரியங்களின் குரல் கேட்கும் வரைதான்.

-யாத்திரி

பவா செல்லத்துரை

எனது ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கு வெளியே இருக்கிறார்கள்..
அவர்கள்தான் என் வாழ்க்கையை பல்வேறு திசைகளில் வழிவகுக்கிறார்கள்.. அந்த பேரன்புகொண்ட மனிதர்கள்தான்       என் மேய்ப்பர்கள் !!
 
- பவா செல்லதுரை

நகுலன்

அவர் பல உண்மைகளைச் சொல்கிறார் 
ஒரு உண்மையைச் சொல்லாமல் இருப்பதற்கு

-நகுலன்

எஸ் ரா

💥ஒரு மரத்தில் எந்த இலை பழுத்து எப்போது உதிரப்போகிறது என
மரம்யோசிப்பதுமில்லை வருந்துவதுமில்லை. அதன் வேலை புதிய
இலைகளைத் துளிர்க்கவிடுவது
மட்டுமே.

-இடக்கை..
-எஸ்.ராமகிருஷ்ணன்.

ஜான்சிராணி

குறையொன்றுமில்லை 
துளைகளிட்டுப் போனாலும் புல்லாங்குழல் என
உருமாற்றிக்கொள்வேன் நான்..

ஜான்சிராணி..

ச.மாடசாமி

சின்னச் சின்ன வெளிச்சத்தையும் பார்க்கிற கண்கள் உங்களுடையது

அது எழுப்பும் மெல்லிய சத்தத்தை கேட்கிற காதுகள் உங்களுடையது.

அது அணைந்து விடாமல் பாதுகாக்கும் கைகளும் உங்களுடையது.
(ஆசிரியர்கள்)

-ச.மாடசாமி

மிர்தாத்

வாழ்வு இரு வகை

1.நாம் நிலைநிறுத்தும் வாழ்க்கை
2.நம்மை நிலைநிறுத்தும் வாழ்க்கை

-மிர்தாத்

காந்தி

சின்ன மறதி தான்
பெரிய மறதிகளை உருவாக்குகிறது

-காந்தி

தெ.சு.கவுதமன்

கீழே விழுமோ
என்பதைவிட
மேலே விழுமோவென்ற
பயம்தான்
உத்திரத்துப் பல்லியை
பார்க்கும் போதெல்லாம்!

-தெ.சு.கவுதமன்

யுகபாரதி

கூண்டுக் கிளிக்கு
பரிதாபப்படுகிறார்கள்
அறுப்பதற்கென்றே
கோழி வளர்ப்பவர்கள்

-யுகபாரதி

சார்லி சாப்ளின்

`உங்களைத் தனியாக விட்டாலே போதும்... வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்!’ 

- சார்லி சாப்ளின்

கலாப்ரியா

படித்துக் களைத்து
கழற்றி வைத்த கண்ணாடியில்
இரண்டு மின்விசிறிகள்
களைப்பில்லாமல் சுற்றிக்
கொண்டிருக்கிறது..!

#கலாப்பிரியா

ராஜா சந்திரசேகர்

உன் தனிமையை
துணை தேடாமல் 
பார்த்துக்கொள்

-ராஜா சந்திரசேகர்

முருகன். சுந்தரபாண்டியன்

அடகு நகையை திருப்பும் போதெல்லாம்
பெருமையின் முகத்தோடு
ஒரு நாளும் அவள் நகை போட
ஆசைப்பட்டதில்லை என அப்பா
தெரியப் படுத்துகையில்
சிறு இடைவெளி விளிம்புச் சிரிப்பில்
அம்மா காட்டுகிற முகம்
சிரிப்போடு சேராமலிருந்தது...

- முருகன். சுந்தரபாண்டியன்

ஜி.நாகராஜன்

குடத்தில் நீர் நிரம்புவது போல 
மவுனத்தில் கவலைகள் நிரம்புகின்றன

-ஜி.நாகராஜன்

ஆல்பிரட் ஹிட்ச்காக்

வெற்றி என்பது ஓர் அற்புத நிகழ்வல்ல.எவன் ஒருவன் தனது ஆர்வத்தை மிகச்சரியான நேரத்தில் கண்டுபிடித்துக் கொள்கிறானோ அவன் வெற்றிக்கான முதல் படியில் காலடி வைத்தவனாகிறான்

-ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்

முத்துவேல்

எந்த ஊருக்குப் போனாலும் அளவெடுத்துக் கொண்டேயிருக்கிறது மனம்
வந்த ஊரையும்.. சொந்த ஊரையும்..

முத்துவேல்..

முத்துவேல்

சாமிக்கு நேர்ந்துவிட்ட கிடா மகிழ்ந்து கிடக்கிறது மந்தை ஆடுகளுடன்..

முத்துவேல்..

பரிதி

நாயைக்கட்டிப்போடாமல் வளர்ப்பதற்கும், மாட்டை கட்டிப்போட்டு வளர்ப்பதற்கும் ஒரே காரணம்தான் உள்ளது. அது "தேவை". மனிதர்களுக்கும் அப்படியே.

- *பரிதி* 

❤️

ஆதவன்

எல்லோருக்கும் ஆசையாத்தான் இருக்கிறது. படிப்பைத் தவிர்ப்பதற்கு, படிக்காமலேயே புத்திசாலிகளாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள்

-ஆதவன்