சபரிதமிழ்எழில்
10/09/2020
முருகன். சுந்தரபாண்டியன்
அடகு நகையை திருப்பும் போதெல்லாம்
பெருமையின் முகத்தோடு
ஒரு நாளும் அவள் நகை போட
ஆசைப்பட்டதில்லை என அப்பா
தெரியப் படுத்துகையில்
சிறு இடைவெளி விளிம்புச் சிரிப்பில்
அம்மா காட்டுகிற முகம்
சிரிப்போடு சேராமலிருந்தது...
- முருகன். சுந்தரபாண்டியன்
Newer Post
Older Post
Home