வருங்காலத்தில் மொத்த சமுதாய நன்மைக்காக, தனிமனிதத் திறமைகள் அனைத்தும் பயன்படும் விதத்தில் தனிநபர்வாதம் என்பது உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
-சே
நாம் தியாகத்தால் புடம் போட்ட வருங்காலத் தலைவர்களைத் தேட வேண்டும்.
-சே
மனிதனை மனிதன் சுரண்டுகிற நிலைமையை அழித்தொழிப்பதை விட சோசலிசத்திற்கு வேறு ஒரு சரியான அர்த்தம் இல்லை.
-சே
மாபெரும் திட்டங்களின்போது, மாபெரும் பதற்றங்களின் போது, மாபெரும் படைப்புகளின் போது எது தேவையென்றால் மாபெரும் எதிரிகளும், மாபெரும் குறிக்கோள்களும்.
-சே
பொருட் சலுகைகள் கடந்த காலத்தின் எச்சம். அது நம் மக்களின் எண்ணத்தில் ஊறிப்போய் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். புரட்சிகர வளர்ச்சி முன்னேற்றம் அடையும் போது, அதை படிப்படியாய் உடைத்துவிட வேண்டும்.
-சே
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால், நீ எனது தோழன்.
-சே
ஏகாதிபத்தியம் இருக்கும் வரையில், மற்ற நாடுகளின் மீது அதனுடைய ஆதிக்கம் இருந்தே தீரும் என்பதுதான் அதன் அர்த்தமாகும். இன்று அந்த ஆதிக்கத்தின் பேர்தான் நவீன காலனியாதிக்கம்.
-சே
வாழ்வுக்கும் மரணத்திற்குமான இந்தப் போராட்டத்தில் எல்லைகளே கிடையாது. உலகத்தின் ஒரு மூலையில் நடப்பது குறித்து நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தேசத்தின் எதாவது ஒரு பகுதியில் கிடைத்த சிறு வெற்றியானாலும் நம் அனைவரின் வெற்றி அது. அது போல ஏகாதிபத்தியத்திற்கு எதிரான யாருடைய தோல்வியாக இருந்தாலும் அது நம் அனைவரின் தோல்வியாகும்.
-சே
விளைவுகளை ஏற்படுத்தாத வார்த்தைகள் முக்கியமற்றவை.
-சே
பாட்டாளி வர்கத்துக்கு ஆண், பெண் பேதம் கிடையாது. பொதுவான இலட்சியத்துடன் நாட்டின் அனைத்து பணியிடங்களிலும் இணைந்து இடைவிடாமல் போராடும் வர்க்கம் அது.
-சே
எங்கே ஒரு அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறதோ, அது குளறுபடியாக இருந்தாலும் ஜனநாயகத் தோற்றத்தோடு காட்சியளிக்குமானால், அங்கு கொரில்லாப் போர் சாத்தியமற்றதாகிவிடுகிறது. அங்கு அமைதியாக போராடுவதற்கான வழிகள் முழுமையாக தீர்ந்து விடாமல் இருக்கிறது.
-சே
புரட்சி என்பதன் அர்த்தமே இதுதான், ஒரு மனிதன் தனக்குள் ஒரு புரட்சியாளனாக விளங்குவதோடு அதை உணர வேண்டும். அப்போது தியாகம் குறித்த கருத்துக்கள் புதிய அர்த்தங்கள் கொள்கின்றன.
-சே
சுதந்திரம் என்பது போராடாமலேயே கிடைத்துவிடும் என்று கனவை நாம் வளர்த்துக் கொள்ளக் கூடாது. அதற்கு நமக்கு உரிமையும் கிடையாது.
-சே
மிருகத்தனமான ஒரு எதிரியை நிர்மூலமாக்க வெறுப்பு இல்லாத மக்களால் முடியாது.
-சே
பெறுவதற்கு ஒன்றும் இல்லை. இழப்பதற்கு நிறைய இருக்கின்றன.
-சே
தன் கொடி பறக்காத நாட்டின் விடுதலைக்காக ஒருவன் சிந்தும் இரத்தம், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்களுக்கு அனுபவமாகும். பிறகு அவனது சொந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஒளியாக கலந்து விடும்.
-சே
உனது காலடியில் வாழ்வதைவிட எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.
-சே
நான் தோற்றுப் போகலாம். அதன் பொருள், வெற்றி சாத்திமற்றது என்பதல்ல. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோற்றவர்கள் எத்தனையோ பேருண்டு. இறுதியில் எவரெஸ்ட் சிகரம் வெல்லப்பட்டது.
-சே
நமது போர் முழக்கம் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால், இன்னொரு கரம் நமது ஆயுதத்தை கையிலெடுக்க துணியுமானால், மற்றவர்கள் நமது இறுதிச்சடங்கில் இயந்திரத் துப்பாக்கிகளோடு வந்து புதிய போர் முழக்கத்தை அறிவிப்பார்களேயானால், மரணம் திடீரென வந்தால் கூட அதை வரவேற்கலாம்.
-சே
வலி, வேதனை எல்லாவற்றையும் உணர்கிறேன். ஒரு புரட்சிக்காரன் வெறுப்பினால் உந்தப்படுவதில்லை. அன்பினால்தான்.
-சே
வாழ்வதற்கான ஒன்றை நாம் ஒரு போதும் பெறவே முடியாது, அதன் பொருட்டு நாம் இறக்கா விட்டால்.
-சே
ஒரு புதிய மனிதனின் தோற்றம் ஆரம்பமாகிறது. இதனை சரியாக புரிந்து கொண்டு அவனிடம் நாம் அனைவரும் மிக அருகில் நெருங்க வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் ஒவ்வொருவரும், அவரவர் பங்கிற்கு கேட்கப்படுகிற தியாகங்களை வழங்க வேண்டும்.
-சே
எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
-சே
புரட்சி தானாக உருவாவதில்லை, நாம் உருவாக்க வேண்டும்.
-சே
தீ பற்றவை. மக்கள் நெருப்பென எழுவார்கள்.
-சே
நடைமுறைப் போராளிகளாகிய நாங்கள் எங்கள் பாதைகளில் அடியெடுத்து வைத்தபோது மார்க்ஸ் என்கிற அறிஞரின் பார்வையோடு நடந்திருக்கிறோம்.
-சே
ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் குண்டு தன் துப்பாக்கியில் மட்டும் இருக்கிறது என்று சொல்லவில்லை. எனது துப்பாக்கியிலும் ஒரு குண்டு இருக்கிறது.
-சே