நீண்டகாலம் நண்பனாக இருந்து
விரோதியானவனை வெளியூர்
வீதியில் சந்திக்க நேர்ந்தது
பதற்றத்தில்
வணக்கம் வணக்கம் என்றேன்
அவன் நடந்துகொண்டே
கால்மேல் காலைப்
போட்டுக்கொண்டே போனான்.
இந்த முறை
உன்னை உறுதியாக அறுத்து விட்டேன்
இனி எங்கேனும்
வழியில் கண்டால் தலையை ஆட்டிக்கொள்வதென
எப்படி தலையாட்ட வேண்டுமென்று
ஆட்டி ஆட்டிப்பார்ப்பது
இது 119 ஆவது முறை
-கண்டராதித்தன்