மரணக் காற்றில் ஒரு விளக்கை போல் அணைந்து போகாதே!
ஒரு ஊதுவத்தியைப் போல் கொஞ்சம் நறுமணமாவது விட்டு விட்டுப் போ!
-அப்துல்ரகுமான்
காகித ஓடங்களை(பாடபுத்தகங்கள்) நம்பி இருப்பவர்கள் ஒரு நாளும் அக்கரை போய் சேரமாட்டார்கள்
#அப்துல்ரகுமான்
பொம்மை செய்யச் சொல்லி கருப்பையை
நச்சரிக்காதீர்கள்
-அப்துல்ரகுமான்
உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அலங்கரிக்காதே
ஏனென்றால்
மகுடங்கள் தலைமாறக்கூடியவை
-அப்துல்ரகுமான்
மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"
-அப்துல்ரகுமான்
நல்ல வேளை வறுமைகொடு கிடைத்தது.இல்லையென்றால் இதன் கீழ் வாழ்பவர் வேறு எதன் கீழ் வாழ்வார்கள்...?
#அப்துல்ரகுமான்
வாழ்க்கை சந்தையில் மட்டும் முட்களை வாங்கினால் கொசுறாக கிடைக்கிறது "பூ"
#அப்துல்ரகுமான்