19/06/2020

ராஜ சுந்தரராஜன்

*தகுதி*

ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் 
நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.

- ராஜ சுந்தரராஜன்