சபரிதமிழ்எழில்
19/06/2020
பழ புகழேந்தி
கரும்பலகை அழிப்பதற்காய்
காகிதம் கேட்டேன்
கிழித்துக் கொடுத்தான்
நேற்றெழுதிய பாடங்களின்
பக்கங்களை..
இப்படித்தான்
வீணாய்ப்போகிறது
பலகையிலும் பதியாமல்
பக்கங்களிலும் பதியாமல்
சில பாடங்கள்..
-பழ.புகழேந்தி
Newer Post
Older Post
Home