உமக்கு சேவகம் செஞ்சே
நான் இத்துப் போயிட்டேன்
இனிமேக்கொண்டு கூப்டீரு
மருவாத கெட்ரும்.
எப்ப பாத்தாலும்
நொய்யி நொய்யினுக்கிட்டு
ஈஸ்வரா,
என்னைய சீக்கிரம் கூப்டுக்கோயேன்.
புலம்பிக்கொண்டே வெளிவந்த கிழவி
சிறிது நேரத்தில்
என்ன சத்தத்தையே காணோம் என்று
கிழவனின் அறையை எட்டிப்பார்ப்பாள்.
-யாத்திரி