இரவு மிருகம்...
பருவப்பெண்ணின் பசலையைப் போல
கவிழத் தொடங்கியிருந்தது இருள்.
கதவடைத்துவிட்டு மஞ்சள் ஒளியில்
தனியாக அமர்ந்திருந்தேன்.
அப்போது தான் தினமும் விரும்பாத அதன் வருகை நிகழ்ந்தது.
நான் பார்த்துக்கொண்டுருக்கும்போதே
என்னை உருவி எடுத்துவிட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது.
நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே
படித்து முடித்திருந்தேன்
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்ஶ்ரீஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிளைய வழியும் மதுவோடு என்னூடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களைச்
சன்னமாய் சொல்லியவாறு
சுயப்புணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டு விட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்.
_சுகிர்தராணி.