காய்ச்சல் எவ்வளவு இருக்கிறது என்று எனக்கே தெரியும்..
ஆனாலும் காண்கிற ஒவ்வொருவரிடமும் எனக்கு காய்ச்சல் இருக்கிறதா பாருங்கள் என நெற்றியை தொட்டுப் பார்க்க நீட்டுகிறேன்..
ஆயிரம் கரங்களில் ஆற்றும் கரமொன்று மறைந்திருக்கக் கூடும் என இன்னும் நம்புகிற அவ்வளவு பழைய ஆள் நான்..
மனுஷ்ய புத்திரன்..