இது
சிங்கத்தின் தடம்,
புலியின் தடம்,
நரியின் தடம்
இப்படியாக விரிகிறது
மானின் எச்சரிக்கையான பதில்கள்
குட்டி மானின் கேள்விக்கு.
இறுதியாக கேட்டது
ஒத்தையடிபாதையைக் காட்டி.
பதறிய மான் சொன்னது.
" இது புல் கூட முளைக்காத
மனிதனின் தடம்" என்று...
- தர்மராஜ் பெரியசாமி-