சபரிதமிழ்எழில்
13/04/2021
கல்யாண்ஜி
தண்ணீர்த் தொட்டியில்
செத்துக் கிடந்த
காக்கைக் குஞ்சுகளுக்கு
மனதார வருத்தப் பட்டாயிற்று.
வாசலில் நிற்கும்
வயசாளிக்கு …..
“ஒன்றுமில்லை” என்று
அனுப்பிவிடலாம்.
இன்றைக்கு …..
என்னால் முடிந்தது இவ்வளவே.
- கல்யாண்ஜி
Newer Post
Older Post
Home