16/08/2019

மகுடேசுவரன்

புதிய மகிழுந்தை ஓட்டி பார்த்துவிட்டு சக்கரங்கள் மாற்றப்படவேண்டிய உங்கள் பழைய வண்டிக்குள் வந்து அமர்ந்தீர்களா?..

புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டு வண்ணமிழந்த உங்கள் பழைய வீட்டுக்கு மீண்டும் வந்து சேர்ந்தீர்களா?..

மடிக்கணினி ஒன்றை பழகி பார்த்துவிட்டு உங்கள் பழைய கணினியை திறந்தீர்களா?..

நான்கு முறை உடுத்திய பட்டை நீங்கள் உடுத்துச் சென்ற விழாவில் அனைவரும் புதுப்பட்டு அணிந்துவர கண்டீர்களா?..

நினைவுக்கு வருகிறதா அந்த மனநிலை?

உங்கள் உடைமை தந்த நிறைவு உன் கண் முன்னேயே வீழ்வதை என்னவென்று கொண்டீர்கள்?

எல்லாம் பொருள் இழக்கும் இந்த பால் வெளியில் யார் வேண்டுமானாலும் எந்த நொடியிலும் தள்ளிவிட முடியும் என்ற ஞானத்தை அடைந்தார்களா இல்லையா?..

மகுடேஸ்வரன்..🐅