16/08/2019

ப்ரியம்வதா

மூடி வைத்த இனிப்புப்பண்டத்தின் மீது
ஊரும் எறும்பைப் போல் ஊறுகிறது
நினைவு உன்மீது..

வாசனை தீண்டி விட முடியாத பாத்திரத்தில் வீற்று இருக்கிறாய் நீ..
அதோ எட்டமுடியாத எறும்பின் துயரமாய் சுற்றி வருகிறதே அதுதான் என் காதல்..

ப்ரியம்வதா..