அறாத செருப்புகள் வந்துவிட்டன எப்போதும் போல் தெரு முக்கில் ஊசி உளிகளை பரப்பி அமர்கிறார் செருப்பு தைப்பவர்..
காடு உழும் காளைகள் காணாமல் போய்விட்டன எப்போதும் போல் மூக்கணாங்கயிறு கடையை திறந்து அமர்கிறார் அந்தப் பெரியவர்..
எல்லாரும் ரெடிமேட் சட்டைகள் வாங்க பழகிவிட்டனர் எப்போதும் போல் எந்திரங்களுக்கு எண்ணெய் விட்டு அமர்கிறார் தையற்காரர்..
உலகோர்க்கு இனி வேண்டாத ஒன்றை ஆக்கும் பணியில் பிடிவாதமாக ஈடுபட்டிருக்கிறார்கள் அவர்கள்..
மகுடேஸ்வரன்..🐅