25/08/2019

ராம்வசந்த்

யாருமறியாமல்
பிரசாதத்தை
பயந்தபடி
எடுத்துண்ட குழந்தையை.,
“ ஐயோ மன்னிச்சிரு செல்லம்
நாளையிலிருந்து உனக்குதான் முதல்ல”
எனத் தூக்கிச் சிரித்தவளை...
யாருமறியாமல்
அம்மா என்றழைத்தான்
கடவுள்.

(Ram Vasant)