10/08/2019

பழநிபாரதி

அன்பு அமுதமானது என்றாய்
அதை உணர்ந்த தருணம்
அழுதுவிட்டேன் என்றாய்

அன்பின் ஓயாத அலையோசை
உறங்கவிடவில்லை என்கிறாய்

கூட்டுக்கும் ஆகாயத்துக்குமிடையில்
பறந்துகொண்டே இருப்பது
பரவசம் என்கிறாய்

பறந்துகொண்டிருக்கும் போதே
இறந்துவிட வேண்டும் என்கிறாய்

அன்பே
அது அப்படித்தான்

அன்பு
இருத்தலுக்கும்
இல்லாமைக்குமிடையில்
அலையும்
ஒரு மாசற்ற சுடர்

#பழநிபாரதி