அன்பு அமுதமானது என்றாய்
அதை உணர்ந்த தருணம்
அழுதுவிட்டேன் என்றாய்
அன்பின் ஓயாத அலையோசை
உறங்கவிடவில்லை என்கிறாய்
கூட்டுக்கும் ஆகாயத்துக்குமிடையில்
பறந்துகொண்டே இருப்பது
பரவசம் என்கிறாய்
பறந்துகொண்டிருக்கும் போதே
இறந்துவிட வேண்டும் என்கிறாய்
அன்பே
அது அப்படித்தான்
அன்பு
இருத்தலுக்கும்
இல்லாமைக்குமிடையில்
அலையும்
ஒரு மாசற்ற சுடர்
#பழநிபாரதி