ஊர் பிரிதல்
===========
கடைசியாய் ஒரு முறை
அம்மனுக்கு விளக்கேற்றி வருவதாக
அம்மா ஓடுகிறாள் .
கடைசியாய் நம் கேணித்தண்ணீரை
பருகி வருகிறேனே.?
தங்கை சைகையால் யாசிக்கிறாள்.
கடைசியாய் பால்ய சிநேகிதனை
பார்த்து வர நான் திருபுகிறேன்
எல்லோரும் போய்விட்டார்கள் என நினைத்த தகப்பன்
மெதுவாய் குனிந்து
கொஞ்சம் மண்ணைக் கையிலெடுத்து
ஆவேசமாய் வாயில் போட்டுக் கொள்கிறான் .
செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தது ..
பால் கட்டிக் கொண்ட அம்மையாய் எங்களூர் .
(Ram Vasant)