பழங்காலத்தில் சொல்லத் தெரியாதவன் பாமரன்..
பிற்காலத்தில் படிக்கத் தெரியாதவன் பாமரன்..
முற்காலத்தில் தாய்மொழி தெரிந்து இருந்தாலும் ஆங்கிலம் தெரியாதவன் பாமரன்..
தற்காலத்தில் ஆங்கிலம் தெரிந்து இருந்தாலும் கணினி தெரியாதவன் பாமரன்..
காலம் புதுப்புது பாமரர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது..
நம்மை பாமரனாக்கும் உலகைத் தான் நாமும் உருவாக்குகிறோம்..
மகுடேஸ்வரன்...