விளையாடிக்களைத்த
பொம்மைகளாக
ஓய்ந்து கிடக்கின்றன
உன் சொற்கள்
குழந்தையுறங்கும்
ஒரு தனிமையையும்
மெளனத்தையும்
தந்துவிட்டுப் போகிறாய்
புரண்டு படுக்கையில்
அசையும் அதன் கொலுசுச் சத்தமே
அதை எழுப்பிவிடக் கூடாதென்பதாக
இப்படியே இருக்கட்டும்
இந்த இரவு
#பழநிபாரதி