நடுச்சாலையில்
நம்பர் பிளேட்
நசுங்கிக் கிடந்தது
எண் சிறிதாகவும்
“அய்யனார் துணை”
பெரிதாகவும் தெரிந்தது.
ரத்தச் சகதியில்
வண்டி உருக்குலைந்து கிடந்தது.
கழுத்தில் அய்யனாரைக்
கட்டிக்கொண்டு வந்த
வண்டிக்கே இந்த நிலையென்றால்
அது இல்லாமல் வந்த
வண்டியோட்டிக்கு என்ன ஆனதோ?
மோதிய வாகனம்
பக்கத்தில் நின்றது
“வீரமாகாளி துணை” வாசகத்தோடு.
அய்யனாருக்கும் மாகாளிக்கும்
ஏதோ பழைய பகை போலும்!
- சேயோன் யாழ்வேந்தன்