01/09/2019

மணி

பொய்

எப்போதும் உனக்கொரு
பதிலை வைத்திருப்பேன்
நம்பும்படியாக

அவசரத்திற்கு கையில் கிட்டும்
பொருளை போல
அப்போது கிடைத்த
சொற்களை பயன்படுத்துவேன்

கோர்வையாய் சொல்லி
திருப்தியடையும் போது
மெளனமாய் கண்டறிந்து
மெல்ல புன்னகைப்பாய்
அப்போது  பூப்பெய்துவிடுகிறது
எனது பொய்.!

-மணி