>தடாகம் தேடி வந்த
தாகப்புலி
தண்ணீர்த் தளத்தை
விரைந்து நக்கியது..
தன் சிறு வீட்டின் கூரையை யாரோ இடிப்பதாய் பயந்து
பதைபதைத்து
தாய்வயிற்று அடியில்
ஒண்டியது மீன்குஞ்சு..
>நடுச் சாலையில் கிடந்தது குழந்தை செருப்பு
முயன்று திருப்பியும்
முடியாமல்
வண்டி அதன்மீது
ஏறி இறங்கி விட்டது
இன்னும் அடங்கவில்லை படபடப்பு..
மகுடேஸ்வரன்..🐅