வெங்கடேசன் அவர்கள் எழுதிய வேள்பாரி நாவலில் இருந்து சில வரிகள்..
>இயற்கையின் அதி அற்புதம் எல்லாம் எதிர் பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது..
>ஆண் பெண் என்ற இரு சக்திகள் ஒருபோதும் ஒன்றையொன்று முழுமையாக புரிந்து கொள்ள முடியாத ஆதி ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது..
>நீரும் மண்ணும் போலத்தான் ஆணும் பெண்ணும்..
நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் முடியும்.. மறுநொடியில் ஒன்றை விட்டு மற்றொன்று கழலவும் முடியும்..
>யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு.. அதற்கு அடிமை ஆகாதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம் தான் புகழின் ஆணிவேர்..
>வள்ளல் தன்மை என்பது நிர்வாகத் திறமை அல்ல அது குழந்தையின் குரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பை போன்றது..
>கள்ளின் சுவையை விட களிப்பூட்டக் கூடியது அல்லவா காதலின் சுவை..
>காதலிக்க தொடங்கியதும் கைகூடும் ஓர் அழகு இருக்கிறதே,
மனிதரைக் கண்டு மலர்களும் மயங்கும் காலம் அது தான்..
>மனிதனால் காதலை அழைத்து வர முடியாது, காதல்தான் மனிதனை அழைத்து வரும்..
>தன் மனைவி உடன் இருந்தாலும் அழகியை நேசிக்க எந்த ஆணும் தவறுவதில்லை..
>வார்த்தை தரும் ஆறுதலை வேறு எதுவும் தருவது இல்லை..
>பார்த்ததன் வியப்பு பார்க்காததன் மீதே படிகிறது..
>குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும் போதும், தோற்கும் போதும்தான் ஓர் ஆண் தாய்மையை அனுபவிக்கிறான்..
>இயற்கை வழங்குகிறது
வாழ்கிறோம்..
இடையில் விற்கவும், வாங்கவும் நாம் யார்..
>எது ஒன்றையும் தேவையானதாக மாற்றுவதுதான் வணிகம்.. வணிகத்திடம் தான் ஆசையின் திறவுகோல் உள்ளது..
>கார்காலத்து இரவுகளில் மான்கள் இணை சேரும்..
தனது தேரின் ஒலி அவற்றின் இணக்கத்தை குறைத்து விடும் என்பதால் தேரில் செல்ல மாட்டான்..
>காலம் மனிதனின் அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும் போது மனிதன் பொறிகலங்கி போவதை தவிர வேறு வழி என்ன..
>மண்ணில் கால் பாவாமல் மனிதன் நடப்பது தண்ணீருக்குள்ளும் காதலுக்குள்ளும் தான்...
>ஆலா பறவை ஓய்வின்றி நாள் முழுவதும் பறந்து கொண்டிருக்கும்..
நாள் முழுவதும் வேலை செய்பவனை ஆலாய் பறக்கிறார்கள் என்ற பேச்சு எங்கும் பரவியிருக்கிறது..
>எந்த ஒன்றையும் காது கொடுத்து கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்பது கேட்ட பின்பு தான் புரியும்..
>முன்னேறுவதை விட கடினமானது பின் தொடர்வது..
>வலியையும் வேதனையையும் வெளிக்காட்டாமல் வாழ்வது கூட ஒரு விதமான கலை தான்..
>கனவு என்பது உண்மையின் மீது அகலாத திரையை போல படிந்து கிடக்க வேண்டும்..
காதலுக்கு தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு..
அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெரும் தண்டனையை கனவுகளே அளிக்கின்றன..
>என் உடல் எக்கனியாகவும் இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் என் மனமோ ஒற்றை விதையுடைய மாங்கனி..
அதில் இன்னொரு விதைக்கு இடமில்லை..
>விற்கப்படும் இடத்தில் முடிவாகும் விலை பொருளுக்கு மட்டுமல்ல, அதைப் பற்றிய அறியாமைக்கும் சேர்த்துதான்.. இதுதான் வணிகத்தின் நியதி..
>ஏமாற்றம் எதில் நடக்கிறது என்பதைப் பொருத்துத்தான் மனித மனம் எப்படி அதை எடுத்துக் கொள்கிறது என்பது தெரிய வருகிறது..
>சிலம்பின் வேலை காலுக்கு அழகூட்டுவது, மனதை மகிழ்விப்பது அல்ல..
காதுகளுக்கு ஓசையை கடத்துவது மட்டுமே.. ஓசை தேவையில்லாத போது அதை கழற்றிவிடுகிறார்கள்..
>பெண் தன் காதலனின் அழைப்பை ஏற்று ஊர் உறங்கும் வேளையில் ஓசையின்றி அவனோடு சென்றுவிடக் கூடாது..
அதற்காகத்தான் அவள் எங்கு சென்றாலும் ஓசையோடு செல்லும் ஏற்பாட்டை செய்தார்கள்..
>மானிலும், மயிலிலும் மட்டுமே ஆண் அழகு என்றான் முருகன்.. நானும் அப்படித்தான் நம்பினேன் உன்னை காணும் வரை என்றாள் வள்ளி..,
>காதல் சற்றே தலைகீழானது..
நீர் இருக்கும் இடத்தில் தழைக்கும் வேரல்ல..
வேர் இருக்கும் இடத்தில் சுரக்கும் நீர்..
>உதிராத பூக்களை எனது மார்பில் சூட ஏன் ஆசைப்படுகிறாள் என முருகன் நினைத்துக் கொண்டிருக்கும்போது,
வள்ளி சொன்னாள்
அசைத்தால் உதிராதது அணைத்தாலும் உதிராதல்லவா..
>சொல்லாத சொற்களைச் சுவைத்துதான் காதல் வளர்கிறது..
>உனது ஆற்றல் எனை நோக்கி கடத்தும் காதல் எதிர் கொள்ள முடியாததாக இருக்கிறது.. உள்நுழைந்த நறுமணமாய் உனக்குள் மறைகிறேன் நான்..
>நான் உன்னுள் மறைந்து கொள்கிறேன்..
என்னை நீ கண்டறியாதே..
>நீயின்றி நான் காண விண்ணேது? மண்ணேது?..
>அவ்விடம் அணையாதீர்கள்.. பின்னர் ஒருபோதும் விலகமாட்டீர்கள்..
>பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்து தான் வெளிவருகின்றன..
>எவ்வளவு ஒன்றினாலும்,
விலக வேண்டிய இடம் உண்டு என்பதை உணரும் நேரம் சற்றே கடுமையானது..
>உரையாடல்களை பெரும்பாலான நேரங்களில் உணர்வுகளே முடிவு செய்கின்றன..
>ஒரு நிலைக்குப் பின் வெற்றி ஏற்படுத்தும் சுவை பழக்கப்பட்டதாக மாறிவிடுகிறது.. அது இன்னொரு செய்தியாக தன்னைத்தானே கீழே இறக்கி கொள்கிறது..
>கணவன் மனைவிக்கான அக வாழ்வுக்கு அகன்ற படுக்கையை போல் இடையூறான இன்னொரு பொருள் எதுவும் இல்லை..
>புதிய வரவு அறிந்து, ஏற்கனவே நிலை கொண்டவை விலக வேண்டியது விதி தானே?..
>கொடுத்த வாக்கினை மதிக்கத் தவறும் மனிதர்களிடம் பேச என்ன இருக்கிறது..
>இயற்கை ஒன்றுக்குள் ஒன்றாக தனது உண்மைகளை மறைத்து வைத்து விளையாடுகிறது.. இவற்றையெல்லாம் கண்டறிவதும் இணைப்பதும் புரிந்து கொள்வதும் எவ்வளவு சுவையூட்ட கூடிய ஒன்று..
>தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருப்பதன் மூலம் உருவாக்கப் படும் மன ஓவியம், வார்ப்பு சிலையை விட வலிமை மிக்கது..
>மன ஈடுபாடின்றிச் சொல்லும் ஒற்றைச் சொல்கூட ஒருவரைக் காட்டிக் கொடுக்கும்..
>அளவற்ற மகிழ்வோடு இருக்கும் ஒருவனிடம் கவலையை எப்படி பகிர்ந்து கொள்வது..
>இயல்பாய் அமைவதைக்கூட இயல்பானதென ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தோடு இயங்கும் ஆற்றல் காலத்துக்கு உண்டு..
>கண்முன் நடக்கும் உரையாடலை கண்கொண்டு மட்டும் பார்த்து விட முடியாது.. ஏனென்றால் இது காதலின் உரையாடல்..
>காதல் இப்படிதான் தேடலில் தொடங்கி, தொலைவதில் முடிவடையும்..
>பூவோ, மதுவோ நினைவை உதிரச்செய்யும் மயக்கங்களைத்தான் உருவாக்கும்.. காதல் மட்டுந்தான் மயங்க மயங்க நினைவைச் செழிக்கச் செய்யும்..
>இரையாகும் உயிரும் சுவையுணர்வது காதலில் மட்டுந்தான்.. விழுங்கும்பொழுதே விழுங்கப்படுவதால் இந்த விசித்திர நிலை..
>காதல் கொண்டவர்களுக்கு மயங்கவும், கிறங்கவும், மூழ்கவும் இன்னொன்று தேவையா என்ன?..
>மின்னல் ஒளிக்குத் தாழம்பூ மலரும்..
>எப்பொழுதும் அடிவயிற்றில் தொங்கும் குட்டியைக் கைவிடாத குரங்குகள் இடியோசை கேட்ட கணம் கைவிடும்..
>பயணம் எப்போதும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்..
>உறங்கும் இரவுகளில் கனவுகளை நிறுத்தும் வல்லமையை மனிதன் ஒருபோதும் பெற்றுவிட முடியாது..
>கனவுகள் கலைந்த பின்னும் அவை நினைவிலிருந்து மறைவதே இல்லை..
ஏனென்றால் கனவுகள் தோன்றுவதே நினைவு குழிக்குள் இருந்து தான்..
>அறியாமைதான் பேரழகு..
>என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்..
எப்படி நடந்திருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் தான் எல்லோரின் விருப்பமும் இருக்கும்...
>கேலி விளையாட்டில் பெண்கள் செல்லும் ஆழம் ஆண்களால் அறிய முடியாதது..
>காட்டில் எதையும் நாம் தீர்மானிக்க முடியாது..
காடு தான் தீர்மானிக்கும்..
நாம் பார்க்கப் போனது ஒன்றை பார்த்தது வேறொன்றை.. அப்படித்தான் எல்லாமும்..
>பொறாமையும் வெறுப்பும் மனித மனதை குறைந்த அளவே இயக்கும் ஆற்றல் கொண்டவை..
பகை மட்டும்தான் அளவற்று வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது..
>பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்து விடும் பகை மட்டுமே மூட்டியவனால் கூட அணைக்க முடியாத பெரும் நெருப்பு..
>பகைமை கொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான்..
பகை சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும்..
>நதியின் ஆழத்தை படகு அறியாது.. நீரின் போக்கில் நகர்வதே அதற்கு இன்பம் பயக்கக் கூடியது.. அதன் தேவையும் அதுதான்..
>வேட்டையின் ஒரே விதி போராடுதல் மட்டும்தான்..
>விதையை நடாதவனை கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது..
>இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்..
>நீங்கள் ஒன்றை அறிய நினைக்கும் போது உங்களின் அறியாமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளுதல் இயற்கைதானே?..
>பயனளிக்கும் இடத்தை நோக்கி பாய்ந்து செல்லுதலே வாழ்தலின் விதி..
>வளைய மறுக்கும் கிளை ஒடிவதும், வளைந்து கொடுக்கும் கிளை நீண்டு தழைப்பதும் தான் இயற்கையின் அமைப்பு..
>தனது வாழ்விடத்தை ஓர் உயிர் இழப்பது இயற்கையுடனான ஆணி வேரை அறுத்துக் கொள்வதற்கு நிகர்..
>உண்மை என்பது நாம் இருக்கும் இடம் சார்ந்தது..
>தனது புகழின் மீதான பெருமிதத்தை அடுத்தவன் கண்களின் வழியே பார்ப்பது அளவிடமுடியாத மகிழ்வைத் தரக் கூடியது..
>மறைக்கப்படுவது தான் கவனிக்கபடுவதாக மாறும்..
>நெருப்பில் எரித்தாலும் மீண்டும் முளைக்கும் ஆற்றல் கொண்டது பனம்பழம் மட்டும் தான்..
>மனங்களை வெல்ல தெரிந்தவன் ஒருபோதும் தோல்வியடைய மாட்டான்..
>காந்தள் மலர் மலரும் வரை தேனும் வண்டும் காத்திருக்காது.. கிண்டி மலரச் செய்து தேன் பருகும்..
>மனிதனுக்குள் அவமானத்தை துளையிட்டு உள்நுழைக்கிற கருவி சொற்கள் இன்றி வேறு இல்லை..
>மேகம் எப்படி காற்றுக்கு எதிராக பயணிக்கும்..
>ஒருவனின் செல்வத்தை கவர்ந்திட போரிட்டால் அந்தப் போரில் வெற்றி தோல்வி உண்டு..
ஆனால் ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிட முடியாது..
>தமக்கு வெற்றி கிடைக்கும் என்னும் நம்பிக்கை இருக்கும் வரை விதிகளைப் பின்பற்ற அனைவரும் பழகியுள்ளனர்.. ஆனால் அந்த நம்பிக்கை தவறும்போது விதிகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை..
>போர் விதியின் அடிப்படையில் வெற்றி பெற முயல்வதை விட, வெற்றி பெறுவதற்கான முறையில் விதிகளை வடிவமைத்துக் கொள்வதே அறிவுடைமை..
>நிராகரிக்கும் ஒன்றின் மீது உணர்ச்சியை படிய விடுவது பொருளற்றது..
>ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது விதிகளை தானே முன்னோர்கள் அறம் என வகைப்படுத்தினர்..
>விதிகள் நீரை ஒழுங்குபடுத்தும் வாய்க்காலை போன்றவை..
ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் நீரில் கரையக்கூடியவை..
அதனால் தான் உருவாக்குபவனுக்கு பணியும் தன்மை விதிகளின் இயல்பாகிறது..
>போர்க்களம் எதிரியைக் கொன்றளிக்கும் உரிமையை ஒவ்வொரு வீரனுக்கும் வழங்குகிறது..
ஆனால் அந்த உரிமைக்கு சில கட்டுப்பாடுகளும் ஒழுங்கு முறைகளும் உண்டு.. அதையே போர் விதிகள் என்கிறோம்..
>தாக்குதல் கண்டு புறமுதுகிட்டு ஓடுகிறவனயோ, கைகூப்பி வணங்குகிறவனையோ, அவிழ்ந்த தலைப்பாகையை சரி செய்கிறவனையோ, ஆயுதம் இழந்தவனையோ தாக்கக் கூடாது..
>அதிகாரத்தின் சொல்லை மறுக்கும் ஆற்றலை இழப்பதுதான் கேடுற்ற காலத்தின் அடையாளம்..
>படைப்பிரிவில் ஒவ்வொரு வீரனும் மாவீரனாக இருக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை..
உத்தரவுகளையும் ஒழுங்கு முறைகளையும் பின்பற்றும் ஒருவனாக இருந்தால் மட்டுமே போதுமானது..
>வாரிக்கையனும் சோம கிழவனும் முதல் தலைமுறையினர்..
தேக்கனும் கூழயனும் இரண்டாம் தலைமுறையினர்..
பாரியும் முடியனும் மூன்றாம் தலைமுறையினர்..
உதிரனும் நீலனும் நான்காம் தலைமுறையினர்..
>மரணத்தை மதிப்பற்ற ஒன்றாக கைக்கொண்டால் மட்டுமே போர்க்களத்துக்கு உரியவராக மாற முடியும்..
>அதிகாரத்தில் இருப்பவர்கள் அறம் பேணவே முடியாது..
>உனது வேகத்தையும் தாக்குதலையும் நீ தீர்மானி.. அவன் தீர்மானித்த ஒன்றை நோக்கி நகராதே..