எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை நாவலிலிருந்து சில வரிகள்...
1.வெற்றிகளும், சந்தோஷங்களும், துயரங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே எஞ்சி இருக்கின்றன என்பது எவ்வளவு வேதனையானது.. இவ்வளவுதானா மனித வாழ்க்கை..
2.மனிதர்களில் பெரும்பான்மையினர் பலவீனமானவர்கள், அவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் போவதற்க்கு அவர்களின் தேவையற்ற குற்ற உணர்ச்சியும் தைரியமற்ற மனமுமே காரணம்... ஒருவன் துணிந்து செயல்பட ஆரம்பித்தால் எதையும் அடைந்துவிடலாம்... குடும்பமும் உறவுகளும் நட்பும் வறுமையும் தான் தடையாக இருக்கின்றன... அவற்றைப் பொருட்படுத்தாமல் செல்பவன் அதிகாரத்தின் உச்ச நிலையை அடைகிறான்..
3. அச்சத்தை உருவாக்குவதுதான் ஆள்பவனின் முதல் பணி...
சட்டங்கள் அதற்கு துணை செய்கின்றன... எவன் நீதியைத் தனதாக்கிக் கொண்டு அதைத் தன் விருப்பத்தின் படியே செயல்பட வைக்கிறானோ அவன் அரசனாக முடிகிறது... நீதி என்பது எவ்வளவு எளிதான வழி முறை... ஒரு நபரை காரணமில்லாமல் கொலை செய்வதை விடவும் சட்டத்தின் வழியே குற்றவாளியாக்கி கொள்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது...
4. ஒன்றை அடக்கி ஆள முடியாத போது அதை பலி கொடுப்பதை தவிர வேறு வழியில்லை.. இதுவே அரசு நீதி..
5. அதிகாரத்தை கைப்பற்ற முயலும் போது உறவுகள் எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை...
6. நீ உதறித்தள்ளிய பொருளை யார் எடுத்துக்கொண்டால் உனக்கென்ன....
7. ஆயிரம் வெற்றிகள் கற்றுத்தராத, ஆயிரம் தோல்விகள் கற்றுத்தராத வாழ்க்கை குறித்த புரிதலை நோய்மை கற்றுக் கொடுக்கும்..
8. அப்பாவிகள் மீது குற்றங்களை ஏற்றிவிடுவது ஒன்றும் புதிதல்ல.. வரலாறு அதையே நமக்கு சொல்கிறது...
9. ஒருவன் விதியை நம்பத்துவங்கிய மறுநிமிஷம் பலவீனமானவன் ஆகிவிடுகின்றான்...
10. எனது தலையில் உள்ள கிரீடம் என்னை அழுத்தும் போது நான் விரும்பாத விஷயங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது...
11. குற்றத்தின் நிழலில் வாழும்போது சிரிப்பது ஒன்றுதான் ஆறுதலானது..
12. நிழல்கள் ஒரு போதும் பேசுவதில்லை...
13. உலகமே கடந்த காலத்தின் மீதுதான் சாய்மானம் கொண்டிருக்கிறது... நிகழ்காலத்தை எதிர்கொள்ள கடந்த காலம் தான் துணை நிற்கிறது..
14. நீதி என்றால் என்ன...
அரசிற்கு எது நன்மை பயக்கிறதோ அதுவே நீதி...
15. ஒருவன் மீது குற்றம் சுமத்த ஒரு காரணமும் தேவையில்லை.. நிரூபணம் செய்யத்தான் சாட்சிகள் தேவை..
16. நீதி, அநீதி என்பது யாருக்கு வழங்குகிறோம் என்பதைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்..
17. ஒருவனை குடும்பத்திலிருந்து பிரிந்து விடுவது தான் உண்மையான தண்டனை.. மனிதர்கள் தனிமையில் வாழ பயப்படுவர்..
18. உலகில் இதுவரை கவிதைகளும், புத்தகங்களும் தான் தடை செய்யப்பட்டுள்ளன.. ஆயுதங்கள் எதுவும் தடை செய்யப்படவில்லை...
19. இந்த தேசத்தில் மூன்று விதமான மனிதர்கள் வாழ்கிறார்கள்..
ஒரு விதம் உண்மையை ஒருபோதும் அறிந்து கொள்ள விரும்பாதவர்கள்..
இரண்டாம் விதம் உண்மையை அறிந்து கொண்டு செல்ல முடியாமலும், ஏற்றுக்கொள்ள முடியாமலும் தவிப்பவர்கள்...
மூன்றாம் விதம் உண்மையைத் தேடி அறிந்து கொள்வதுடன் அதை உரத்துச் சொல்பவர்கள்...🐅