14/01/2018

ராஜா சந்திரசேகர்

அழும் பெண்ணின்
அருகில் போய்
கண்ணீரைத் துடைத்துக்கொள்
என்று சொல்வதற்கு
கருணை வேண்டும்

இதற்கு
யார் காரணம்
என்று கேட்க‌
துணிவு வேண்டும்

அருகில் போய்
துணிந்து கேட்டேன்
சொன்னாள்
உன்னைப் போல்
ஒருவன்தான் என்று...

_ராஜா சந்திரசேகர்...