25/01/2018

கல்யாண்ஜி

பறவையையும் சேர்த்து

இந்தக் கிளையில்
அந்த பறவை அமர்ந்திருந்ததை
இந்தக் கிளையில் அமர்ந்து
அந்தப்பறவை பறந்து சென்ற பின்னரும்
இந்தக் கிளை சொல்லிக்கொண்டிருக்கிறது.
மரம் தன் கிளையை,
அந்தப்பறவையையும் சேர்த்து
நம்புகிறது பூரணமாக.