நீயற்ற நீயும்
நீயற்ற நானும்
நீயற்ற பொழுதும்
நீயற்ற கணமும்
நீயற்ற மௌனமும்
நீயற்ற வார்த்தைகளும்
நீயற்ற கொண்டாட்டங்களும்
நீயற்ற எதுவும்....
நானற்றுக் கிடக்கிறது-
வனாந்தரத்தில்
தனித்து விடப்பட்ட
ஒரு ஆட்டுக்குட்டியைப்போல.
_பாரதிவாசன்
(இடைவெளி நிரப்பும் வானம்)