20/07/2019

தமிழன்பன்

முப்பது நாள்களில் ஒரு நாள்கூட
ஒரு மாதத்திடம்
பொய் சொன்னதில்லை;
ஒரு மாதம்கூட ஒரு வருடத்திடம்
பொய் சொன்னதில்லை
அதனால்தான்
காலம் - இன்னும் காலமாகாமல்
வாழ்கிறது
காலத்துள் வாழ்பவன்
பொய்சொல்லிக் காலமாகிறான்!

-தமிழன்பன்