முழுவதும் வரைந்து முடிக்கப்பட்ட ஓவியத்திலிருந்து பறவைகள் பறந்துவிடுமென எண்ணி அதன் சிறகுகளை மட்டும் வரையாமல் விட்டு வைக்கிறாய். பின்னொருநாள் வெறிச்சோடிக்கிடக்கிறது பறவைகளற்ற ஆகாயம். காணாமல் போய்விட்டது உன் தூரிகை.
-நரன்