ஆண் பெண் தோழமை எவ்வளவு வைராக்கியமானது. ஒரு பெண்ணின் நட்புதான் ஆணுக்கு பெருங் கொடை. எல்லா தோழிகளுக்கும்
கொஞ்சம் அம்மா சாயல் இருக்கிறது. அவர்களின் ஒரே ஒரு குறுஞ்செய்தி.. நமது நாளையே மலர்த்திவிடுகின்றன.
ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவோ நம்பிக்கைகளை அளித்துவிடுகின்றன; கனவுகளை புதுப்பிக்கின்றன. அவர்களுடன் இருந்தால் துயரங்கள் சிறியதாகி விடுகின்றன. உறவுகளாலும் பிரிவுகளாலும் மனதில் எரியும் காயங்களுக்கு இந்த விரல்கள்தான் விசிறிவிடுகின்றன
-ராஜூ முருகன்