16/05/2019

மனுஷ்ய புத்திரன்

பயமற்ற வாழ்வு
*******
கொசுக்கள்
எல்லா இடங்களுக்குள்ளும்
எப்படியோ நுழைந்து விடுகின்றன

எறும்புகள்
எந்தப் பாதுகாப்பிலிருந்தும்
எதையாவது கொண்டு வந்து விடுகின்றன

மின்மினிகளுக்கு
இந்த இருளைக் கடப்பதில்
எந்தக் குழப்பமும் இல்லை

சில்வண்டுகள் கலைத்து விடுகின்றன
ஊரடங்கு உத்தரவுகளின்
பயங்கர மௌனங்களை

எவ்வளவுக்கெவ்வளவு
சிறியதாக இருக்கிறோமோ
அவ்வளவுக்கு
பயமில்லாமல் இருக்கலாம்.

- மனுஷ்யபுத்திரன்