16/05/2019

மகுடேசுவரன்

எல்லாரும்
நிலா காணமாட்டார் !

யாருமில்லாத வெறுமை
ஏதுமில்லாத மனம்
முன்னிரவுத் தனிமை
முகிலற்ற வானம் 
முள்குத்திய நெஞ்சம்
அடக்க வேண்டிய அழுகை
உதிர்க்க வேண்டிய நினைவு
கழிக்க வேண்டிய காதல் என
என்னென்னவோ
வாய்க்க வேண்டும்
அதற்கு.

-மகுடேசுவரன்