16/05/2019

பழநிபாரதி

உன் பெயரில்
ஒரு மரம் விரிகிறது
ஒரு நதி பெருகுகிறது
ஒரு வனாந்திரம் அடர்கிறது

வெக்கை தாங்கா பறவைகள்
உன் பெயரின் கீழ் ஒதுங்குகின்றன

– பழநிபாரதி