08/05/2019

சுந்தர ராமசாமி

காலத்தின் கதியில் மிக மோசமான கட்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறேன். இயந்திரங்களால் பிழியப்பட்டு , கனவுகள் வெளியே வழிந்து போனதில் இறுகிப்போன சக்கை மனங்கள். என்னால் இவர்களுடன் உறவாட முடியாது. புழுதிப் பாய்ச்சல் மூளைகள். எனக்கு அளக்கத் தெரியவில்லை. பின்தொடரத் தெரியவில்லை. ஒத்துப்போக முடியவில்லை. கொஞ்சம் கனவுகள், கொஞ்சம் அசட்டுத்தனம், ஏதோ கொஞ்சம் புத்தி. இப்படி இருந்தால் தான் என்னால் சமாளித்துக்கொண்டு போக முடியும்.

-சுந்தர ராமசாமி