16/05/2019

மு.மேத்தா

மனக்கதவு
*******
யார் தட்டிய போதும் திறந்ததே இல்லை…
இப்போது ஒவ்வொரு கதவையும் ஓங்கி ஓங்கித் தட்டி ஓய்கிறபோது தெரிகிறது…
தட்டும் கையின் வலியும்
திறக்காத கையின் திமிரும்.

- மு. மேத்தா